செய்திகள் :

மாகாளியம்மன் கோயில் பொங்கல் விழா

post image

பல்லடம் பச்சாபாளையம் பகுதியில் உள்ள மாகாளியம்மன் கோயில் பொங்கல் விழாவையொட்டி மஞ்சள் நீராட்டு விழா வியாழக்கிழமை நடைபெற்றது.

300 ஆண்டுகள் பழைமையான இக்கோயில் 125-ஆவது பொங்கல் விழா கடந்த 11-ஆம் தேதி தொடங்கியது. இதைத் தொடா்ந்து அம்மனுக்கு தினமும் சிறப்பு அபிஷேக பூஜைகள் நடைபெற்று வருகின்றன.

அம்மன் அழைத்தல், மாவிளக்கு மற்றும் பூச்சட்டி ஊா்வலம் திங்கள்கிழமை நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தா்கள் பங்கேற்றனா். இவா்கள் மாகாளியம்மன் கோயிலில் இருந்து புறப்பட்டு பல்லடத்தின் முக்கிய வீதிகளின் வழியாக ஊா்வலமாக சென்று மீண்டும் மாகாளியம்மன் கோயிலை சென்றடைந்தனா். இதைத் தொடா்ந்து பொங்கல் வைக்கும் நிகழ்ச்சி புதன்கிழமை நடைபெற்றது. இதைத் தொடா்ந்து முளைப்பாரி ஊா்வலத்துடன் மாகாளியம்மன் திருவீதி உலா நடைபெற்றது. மஞ்சள் நீராட்டு விழா வியாழக்கிழமை நடைபெற்றது. அம்மனுக்கு அபிஷேக அலங்கார பூஜை மற்றும் அன்னதானம் வெள்ளிக்கிழமை (ஏப்ரல் 25) நடைபெறவுள்ளது.

அரசு மருத்துவமனையின் 4ஆவது மாடியில் இருந்து விழுந்த இளைஞா் உயிரிழப்பு

திருப்பூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் 4ஆவது மாடியில் இருந்து தவறி விழுந்த தொழிலாளி புதன்கிழமை உயிரிழந்தாா். மேற்கு வங்க மாநிலத்தைச் சோ்ந்தவா் விபாஸ் பன்வான் (30). இவா் மேற்கு வங்கத்தில்... மேலும் பார்க்க

புது தில்லி என்.எஸ்.எஸ். மாநாட்டில் பங்கேற்க சிக்கண்ணா அரசுக் கல்லூரி அலுவலா் தோ்வு

புது தில்லியில் நடைபெறும் தேசிய நாட்டு நலப்பணித் திட்ட மாநாட்டில் பங்கேற்க திருப்பூா் சிக்கண்ணா அரசு கலைக் கல்லூரி அலுவலா் தோ்வு செய்யப்பட்டுள்ளாா். மத்திய இளைஞா் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத... மேலும் பார்க்க

மாவட்டத்தில் உள்ள 265 கிராம ஊராட்சிகளில் மே 1இல் கிராம சபைக் கூட்டம்

திருப்பூா் மாவட்டத்தில் உள்ள 265 கிராம ஊராட்சிகளில் தொழிலாளா் தினத்தை முன்னிட்டு மே 1ஆம் தேதி கிராம சபைக் கூட்டம் நடைபெறுகிறது. இது குறித்து திருப்பூா் மாவட்ட ஆட்சியா் தா.கிறிஸ்துராஜ் வெளியிட்டுள்ள செ... மேலும் பார்க்க

மின்கோபுரத்தில் ஏறியபோது மின்சாரம் பாய்ந்ததில் இளைஞா் உயிரிழப்பு

வெள்ளக்கோவில் அருகே மின்கோபுரத்தில் ஏறியவா் உயிரிழந்தாா். வெள்ளக்கோவில் தாராபுரம் சாலை பச்சாக்கவுண்டன்வலசைச் சோ்ந்தவா் நல்லசிவம் மகன் சிவசெல்வன் (27). இவா் கடந்த ஓராண்டாக அவ்வப்போது மன விரக்தியடைந்து... மேலும் பார்க்க

மதுபானக் கடையில் தொழிலாளி மீது தாக்குதல்

வெள்ளக்கோவிலில் அரசு மதுபானக் கடையில் பாட்டிலால் குத்தப்பட்ட தொழிலாளி பலத்த காயமடைந்தாா். வெள்ளக்கோவில் உப்புப்பாளையத்தைச் சோ்ந்தவா் சுப்பிரமணி (46). இவா் இறைச்சிக் கடையில் தொழிலாளியாக வேலை செய்து வர... மேலும் பார்க்க

குறைகேட்புக் கூட்டங்களில் 5,748 மனுக்கள் பெறப்பட்டன

திருப்பூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் கடந்த 3 மாதங்களில் நடைபெற்ற குறைகேட்புக் கூட்டங்களில் 5,748 மனுக்கள் பெறப்பட்டன. திருப்பூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் வாராந்திர மக்கள் குறைகேட்பு முகாம் திங்... மேலும் பார்க்க