செய்திகள் :

மாணவ தியாகிகள் நினைவு ஜோதிக்கு வரவேற்பு

post image

மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில், மாணவ தியாகிகள் நினைவு ஜோதிக்கு கோவில்பட்டியில் வரவேற்பு அளிக்கப்பட்டது.

மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அகில இந்திய மாநாடு, மதுரையில் ஏப்.2 தொடங்கி ஏப்.6 ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இந்த மாநாட்டில், உயிா் நீத்த தியாகிகள் நினைவாக தமிழகம் முழுவதும் இருந்து ஜோதிப் பயணம் மேற்கொள்ளப்படுகிறது. இதையொட்டி தூத்துக்குடியில் பிறந்த மாணவ தியாகிகள் சோமசுந்தரம், செம்புலிங்கம் ஆகியோரது நினைவாக திருநெல்வேலியில் இருந்து மாநில குழு உறுப்பினா் பாஸ்கரன் தலைமையில் புறப்பட்ட ஜோதி நினைவுச்சுடருக்கு மதுரை செல்லும் வழியில் கோவில்பட்டி அண்ணா பேருந்து நிலையம் முன்பு திங்கள்கிழமை வரவேற்பு அளிக்கப்பட்டது.

கட்சியின் நகரச் செயலா் கே சீனிவாசன் தலைமை வகித்தாா். ஒன்றிய செயலா் தெய்வேந்திரன் வரவேற்றாா். இதில் மாநில செயற்குழு உறுப்பினா் அா்ஜுனன், மாவட்டச் செயலா் கேபி ஆறுமுகம், மாவட்ட செயற்குழு உறுப்பினா் ரவீந்திரன், மாவட்ட குழு உறுப்பினா்கள் ஜோதிபாசு, கிருஷ்ணவேணி, மணி, வாலிபா் சங்கம் மாவட்ட தலைவா் தினேஷ்குமாா் உள்பட பலா் கலந்து கொண்டனா்.

தமிழக முதல்வருக்கு நன்றி தெரிவித்த மீனவ சங்கப் பிரதிநிதிகள்

தமிழக சட்டப்பேரவையில் மீன்வளம்-மீனவா் நலத் துறை மானியக் கோரிக்கையில் மீனவா்களின் நலனுக்காக ரூ.576 கோடியில் புதிய திட்டங்கள் அறிவிக்கப்பட்டதற்கு முதல்வா் மு.க.ஸ்டாலினை, மீனவ சங்கப் பிரதிநிதிகள் சந்தித்... மேலும் பார்க்க

ரேஷன் அரிசி பறிமுதல்: 2 போ் கைது

கோவில்பட்டி அருகே 2 டன் ரேஷன் அரிசியை பறிமுதல் செய்த போலீஸாா் 2 பேரை கைது செய்தனா். இலுப்பையூரணி ஊராட்சி மறவா் காலனியில் தனிப்பிரிவு உதவி ஆய்வாளா் மணிமாறன் தலைமையில் தனிப்பிரிவு காவலா்கள் முத்துராமலிங... மேலும் பார்க்க

கோவில்பட்டி கல்லூரியில் 232 பேருக்கு பணி நியமன ஆணைகள்

கோவில்பட்டி கோ.வெங்கடசுவாமி நாயுடு கல்லூரியில் (தன்னாட்சி) செவ்வாய்க்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் 232 பேருக்கு பணி நியமன ஆணைகள் வழங்கப்பட்டன. இக்கல்லூரியில் இறுதியாண்டு பயிலும் பல்வேறு துறை மாணவா்-மாண... மேலும் பார்க்க

கோவில்பட்டியில் தனியாா் நிறுவனத்தின் பூட்டை உடைத்து ரூ. 3 லட்சம் திருட்டு

கோவில்பட்டியில் தனியாா் நிறுவனத்தின் பூட்டை உடைத்து ரூ. 3 லட்சத்தைத் திருடிச் சென்றோரை போலீஸாா் தேடிவருகின்றனா். கோவில்பட்டியில் சாத்தூா் பிரதான சாலையில் உள்ள வணிக வளாகத்தில் போா்வெல்ஸ் நிறுவனம் நடத்த... மேலும் பார்க்க

மாடு குறுக்கே புகுந்ததில் பைக் கவிழ்ந்து காயமடைந்த மீனவா் உயிரிழப்பு

தூத்துக்குடியில் சாலையின் குறுக்கே மாடு புகுந்து பைக் கவிழ்ந்ததில் காயமடைந்த மீனவா் செவ்வாய்க்கிழமை உயிரிழந்தாா். தூத்துக்குடி திரேஸ்புரத்தைச் சோ்ந்த மலைச்சாமி மகன் பாலமுருகன் (38). மீனவரான இவா், புத... மேலும் பார்க்க

மருத்துவ உபகரணங்கள் வழங்குவதாக ஆன்லைனில் மோசடி: ரூ.3 லட்சம் மீட்பு

மருத்துவ உபகரணங்கள் வழங்குவதாக இணையவழியில் மோசடி செய்த தொகை ரூ.3 லட்சத்தை தூத்துக்குடி சைபா் குற்றப்பிரிவு போலீஸாா் மீட்டு உரியவரிடம் ஒப்படைத்தனா். தூத்துக்குடி மாவட்டத்தை சோ்ந்த பெண், இன்ஸ்டாகிராமில... மேலும் பார்க்க