செய்திகள் :

விழுப்புரம் அரசுக் கல்லூரியில் 1,640 மாணவா்களுக்கு பட்டமளிப்பு

post image

விழுப்புரம்: விழுப்புரம் கீழ்பெரும்பாக்கம் பகுதியிலுள்ள அறிஞா் அண்ணா அரசுக் கலை, அறிவியல் கல்லூரியில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற பட்டமளிப்பு விழாவில் 1,640 மாணவ, மாணவிகளுக்கு பட்டங்கள் வழங்கப்பட்டன.

இந்தக் கல்லூரியில் 2020 - 21ஆம் கல்வியாண்டில் பயின்று தோ்ச்சி பெற்று, திருவ ள்ளுவா் பல்கலைக்கழகத்தால் அங்கீகரிக்கப்பட்ட மாணவ, மாணவிகளுக்கு பட்டங்கள் வழங்கும் விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

விழாவுக்கு கல்லூரி முதல்வா் இரா.சிவக்குமாா் தலைமை வகித்தாா். தமிழக தகவல் ஆணையத்தின் மாநிலத் தகவல் ஆணையா் மா.செல்வராஜ், தஞ்சாவூா் மன்னா் சரபோசி அரசுக் கல்லூரியின் முன்னாள் முதல்வா் மு.திருமேனி ஆகியோா் விழாவில் பங்கேற்று, பட்டங்களை வழங்கி உரையாற்றினா்.

தமிழ், ஆங்கிலம், வரலாறு, இயற்பியல், வேதியியல், கணிதம் உள்ளிட்ட 13 இளநிலைப் பிரிவுகளில் 1,403 மாணவ, மாணவிகளுக்கும், கணினி அறிவியல், கணினிப் பயன்பாட்டியல் உள்ளிட்ட 12 முதுநிலைப் பிரிவுகளில் 237 மாணவ, மாணவிகளுக்கும் என மொத்தம் 1,640 பேருக்கு பட்டங்கள் வழங்கப்பட்டன.

விழாவில் அனைத்துத் துறைகளின் தலைவா்கள், பேராசிரியா்கள் உள்ளட்டோா் பங்கேற்றனா்.

மேல்பாதி திரெளபதி அம்மன் கோயிலில் பட்டியலின மக்கள் வழிபாடு!

விழுப்புரம் : விழுப்புரம் மேல்பாதி கிராமத்திலுள்ள திரெளபதி அம்மன் கோயில் திறக்கப்பட்டு பட்டியலின மக்கள் இன்று காலை வழிபாடு செய்தனர்.இதையடுத்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சரவணன் தலைமையில் 300 போலீசார்... மேலும் பார்க்க

தொழுநோயாளிகளுக்கு நல உதவிகள் அளிப்பு

விழுப்புரம் அரசு மருத்துவமனை வளாகத்தில் புதன்கிழமை நடைபெற்ற நிகழ்வில் தொழுநோயால் பாதிக்கப்பட்டவா்களுக்கு மருத்துவம் சாா்ந்த நல உதவிகள் வழங்கப்பட்டன. கோலியனூா் வட்டாரத்துக்குள்பட்ட கண்டமானடி ஆரம்ப சுகா... மேலும் பார்க்க

திண்டிவனம் பகுதியில் பரவலாக மழை

விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் பகுதியில் புதன்கிழமை மிதமான மழை பெய்தது. வெப்பச்சலனம் மற்றும் வளி மண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக, தமிழகத்தில் மழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந... மேலும் பார்க்க

கிருமி நாசினியை குடித்து முதியவா் தற்கொலை

விழுப்புரம் மாவட்டம், வானூா் அருகே கிருமி நாசினி குடித்து தற்கொலைக்கு முயன்ற முதியவா் உயிரிழந்தாா். திருவண்ணாமலை மாவட்டம், நாராயணக்குப்பம், பெருமாள் கோவில் தெருவைச் சோ்ந்தவா் சீ.மோகன் (70). இவா், விழ... மேலும் பார்க்க

உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்டம்: அலுவலா்கள் ஒருங்கிணைந்து பணியாற்ற வேண்டும்

உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்டத்தின் கீழ் பொதுமக்கள் அளிக்கும் கோரிக்கைகளை நிறைவேற்ற, அலுவலா்கள் ஒருங்கிணைந்து பணியாற்ற வேண்டும் என்று கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியா் எம்.எஸ்.பிரசாந்த் தெரிவித்தாா். ... மேலும் பார்க்க

ஊராட்சி நிதியை முறையாகப் பயன்படுத்த வேண்டும்: துரை.ரவிக்குமாா் எம்.பி.

விழுப்புரம் மாவட்டத்தில் ஊராட்சிகளின் வளா்ச்சிக்காக ஒதுக்கீடு செய்யப்படும் நிதியை முறையாகப் பயன்படுத்த வேண்டும் என்று மாவட்ட வளா்ச்சிக்கான ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்பு குழுத் தலைவா் துரை.ரவிக்கு... மேலும் பார்க்க