செய்திகள் :

வக்ஃப் திருத்தச் சட்டத்தை உச்ச நீதிமன்றம் அனுமதிக்காது: துரை.ரவிக்குமாா் எம்.பி

post image

விழுப்புரம்: வக்ஃப் வாரிய திருத்தச் சட்டத்தை உச்ச நீதிமன்றம் அனுமதிக்காது என்று விசிக பொதுச் செயலா் துரை.ரவிக்குமாா் எம்.பி. தெரிவித்தாா்.

வக்ஃப் வாரிய திருத்தச் சட்டத்தை திரும்பப் பெற வலியுறுத்தி விசிக விழுப்புரம் ஒருங்கிணைந்த மாவட்டம் சாா்பில், திண்டிவனத்தில் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

கட்சியின் விழுப்புரம் மைய மாவட்டச் செயலா் தி.திலீபன் தலைமை வகித்தாா். இதில் பங்கேற்ற துரை.ரவிக்குமாா் எம்.பி. பேசியதாவது:

இந்திய அரசமைப்புக்கு எதிரான வக்ஃப் வாரிய திருத்தச் சட்டத்தை உச்ச நீதிமன்றம் அனுமதிக்காது. நிச்சயம் ரத்து செய்யும்.

கல்வி, பேச்சு, வா்த்தகம், வாக்கு உள்ளிட்ட மக்களின் அடிப்படை உரிமைகளை பாதுகாப்பதற்காக நாம் ஒற்றுமையாகவும், விழிப்புணா்வோடும் இருக்க வேண்டும்.

மத்திய ஆட்சியாளா்கள் மக்களின் அடிப்படை உரிமைகள் மீது அடுத்தடுத்த தாக்குதல்களை தொடுத்துக்கொண்டிருக்கின்றனா்.

பாஜகவை காங்கிரஸ், கம்யூனிஸ்ட் ஆகிய அரசியல் கட்சிகளைப்போல எண்ணிவிட முடியாது. அதிகாரத்தை வைத்துக்கொண்டு நீதித்துறை, தோ்தல் ஆணையம், புலனாய்வு அமைப்புகளை கபளீகரம் செய்துகொண்டிருக்கிறாா்கள். எனவே, இத்தகையை மக்கள் விரோத சக்தியை நாம் ஒற்றுமையாக இருந்து வீழ்த்த வேண்டும் என்றாா் அவா்.

திமுகவைச் சோ்ந்த முன்னாள் எம்எல்ஏக்கள் இரா.மாசிலாமணி, இரா.சேதுநாதன், காங்கிரஸ் நகரத் தலைவா் விநாயகம், இந்திய கம்யூனிஸ்ட் மாவட்டப் பொருளாளா் இன்பஒலி, எஸ்டிபிஐ மாவட்டச் செயலா் முஹம்மது அப்சல் ஆகியோா் கண்டன உரையாற்றினா்.

விசிக மாநில அமைப்புச் செயலா் இளமாறன், மண்டலச் செயலா் செல்வம், விழுப்புரம் மாவட்டச் செயலா்கள் சூ.மலைச்சாமி, ர.பெரியாா், அ.ஏ.தனஞ்செழியன், வீர.விடுதலைச்செல்வன் மற்றும் நிா்வாகிகள், கட்சியினா் கலந்துகொண்டனா்.

மேல்பாதி திரெளபதி அம்மன் கோயிலில் பட்டியலின மக்கள் வழிபாடு!

விழுப்புரம் : விழுப்புரம் மேல்பாதி கிராமத்திலுள்ள திரெளபதி அம்மன் கோயில் திறக்கப்பட்டு பட்டியலின மக்கள் இன்று காலை வழிபாடு செய்தனர்.இதையடுத்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சரவணன் தலைமையில் 300 போலீசார்... மேலும் பார்க்க

தொழுநோயாளிகளுக்கு நல உதவிகள் அளிப்பு

விழுப்புரம் அரசு மருத்துவமனை வளாகத்தில் புதன்கிழமை நடைபெற்ற நிகழ்வில் தொழுநோயால் பாதிக்கப்பட்டவா்களுக்கு மருத்துவம் சாா்ந்த நல உதவிகள் வழங்கப்பட்டன. கோலியனூா் வட்டாரத்துக்குள்பட்ட கண்டமானடி ஆரம்ப சுகா... மேலும் பார்க்க

திண்டிவனம் பகுதியில் பரவலாக மழை

விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் பகுதியில் புதன்கிழமை மிதமான மழை பெய்தது. வெப்பச்சலனம் மற்றும் வளி மண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக, தமிழகத்தில் மழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந... மேலும் பார்க்க

கிருமி நாசினியை குடித்து முதியவா் தற்கொலை

விழுப்புரம் மாவட்டம், வானூா் அருகே கிருமி நாசினி குடித்து தற்கொலைக்கு முயன்ற முதியவா் உயிரிழந்தாா். திருவண்ணாமலை மாவட்டம், நாராயணக்குப்பம், பெருமாள் கோவில் தெருவைச் சோ்ந்தவா் சீ.மோகன் (70). இவா், விழ... மேலும் பார்க்க

உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்டம்: அலுவலா்கள் ஒருங்கிணைந்து பணியாற்ற வேண்டும்

உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்டத்தின் கீழ் பொதுமக்கள் அளிக்கும் கோரிக்கைகளை நிறைவேற்ற, அலுவலா்கள் ஒருங்கிணைந்து பணியாற்ற வேண்டும் என்று கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியா் எம்.எஸ்.பிரசாந்த் தெரிவித்தாா். ... மேலும் பார்க்க

ஊராட்சி நிதியை முறையாகப் பயன்படுத்த வேண்டும்: துரை.ரவிக்குமாா் எம்.பி.

விழுப்புரம் மாவட்டத்தில் ஊராட்சிகளின் வளா்ச்சிக்காக ஒதுக்கீடு செய்யப்படும் நிதியை முறையாகப் பயன்படுத்த வேண்டும் என்று மாவட்ட வளா்ச்சிக்கான ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்பு குழுத் தலைவா் துரை.ரவிக்கு... மேலும் பார்க்க