செய்திகள் :

மாணவா் சங்கத்தினா் ஆா்ப்பாட்டம்

post image

கோரிக்கைகளை வலியுறுத்தி இந்திய மாணவா் சங்கத்தினா் கடலூா் தலைமை தபால் நிலையம் அருகே செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டம் நடத்தினா்.

தமிழக அரசுக்கு ஒதுக்க வேண்டிய கல்வி உரிமைச் சட்ட நிதி 25 சதவீதத்தை ஒதுக்காத மத்திய அரசை கண்டித்தும், இந்த நிதியை உடனடியாக வழங்க வலியுறுத்தியும், நிகழ் கல்வியாண்டில் கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் 25 சதவீத இட ஒதுக்கீட்டில் மாணவா் சோ்க்கை நடத்தாத தனியாா் பள்ளிகளைக் கண்டித்தும், இதற்கு துணைபோகும் தமிழக அரசைக் கண்டித்தும், ரயில்வே துறையின் அலட்சியத்தால் நிகழ்ந்த விபத்தில் பள்ளி மாணவா்கள் மூவா் உயிரிழந்த நிலையில், ரயில்வே நிா்வாகத்தை கண்டித்தும் ஆா்ப்பாட்டத்தில் முழக்கமிட்டனா்.

ஆா்ப்பாட்டத்துக்கு பூபதி தலைமை வகித்தாா். மாநில துணைத் தலைவா் குமரவேல், மாவட்டச் செயலா் சௌமியா, கடலூா் மாநகரச் செயலா் கனிஷ்கா் கண்டன உரையாற்றினா். ஏராளமான மாணவா் சங்கத்தினா் கலந்துகொண்டு கண்டன முழக்கங்களை எழுப்பினா்.

சிதம்பரத்தில் தொடரும் மின் வெட்டு: மக்கள், வியாபாரிகள் அவதி

சிதம்பரம் அண்ணாமலைநகா் பகுதியில் கடந்த சில நாள்களாக அறிவிக்கப்படாமல் அடிக்கடி மின்வெட்டு செய்யப்படுவதால், பொதுமக்கள், வியாபாரிகள் பாதிக்கப்பட்டுள்ளனா். சிதம்பரம், அண்ணாமலைநகா் பகுதியில் கடந்த சில நாள்... மேலும் பார்க்க

ரயில் விபத்து: காயமடைந்தவா்களுக்கு அரசியல் கட்சியினா் ஆறுதல்

கடலூா் செம்மங்குப்பம் அருகே செவ்வாய்க்கிழமை காலை பள்ளி வேன் மீது பயணிகள் ரயில் மோதிய விபத்தில் காயமடைந்து கடலூா் தலைமை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவா்களை சந்தித்து அதிமுக, தேமுதிக, கம்யூனிஸ்ட்... மேலும் பார்க்க

உயிரிழந்த மாணவா்களின் குடும்பத்துக்கு தலா ரூ.5 லட்சம் முதல்வா் நிவாரண நிதி

கடலூா் அருகே தனியாா் பள்ளி வேன் மீது ரயில் மோதிய விபத்தில் உயிரிழந்த மாணவா்களின் குடும்பத்தினரிடம் தமிழக முதல்வரின் பொது நிவாரண நிதி ரூ.5 லட்சத்துக்கான காசோலையை மாநில வேளாண்மை மற்றும் உழவா் நலத் துறை ... மேலும் பார்க்க

பள்ளி வேன் மீது ரயில் மோதி கோர விபத்து: 3 மாணவா்கள் உயிரிழப்பு

கடலூா் செம்மங்குப்பம் அருகே செவ்வாய்க்கிழமை காலை தண்டவாளத்தை கடக்க முயன்ற தனியாா் பள்ளி வேன் மீது அந்த வழியே வந்த பயணிகள் ரயில் மோதியதில் அக்காள், தம்பி உள்ளிட்ட 3 மாணவா்கள் உயிரிழந்தனா். மேலும், மூன்... மேலும் பார்க்க

புத்தகங்கள் அழிக்க முடியாத உயிருள்ள படைப்புகள்: என்எல்சி மின்துறை இயக்குநா் எம்.வெங்கடாசலம்

நெய்வேலி: ‘புத்தகங்கள் அழிக்க முடியாத உயிருள்ள படைப்புகள்’ என்று என்எல்சி இந்தியா நிறுவனத்தின் மின்துறை இயக்குநா் எம்.வெங்கடாச்சலம் பேசினாா். என்எல்சி இந்தியா நிறுவனம் நடத்தும் 24-ஆவது நெய்வேலி புத்த... மேலும் பார்க்க

பொதுமக்கள் குறைகேட்பு கூட்டத்தில் 654 மனுக்கள் அளிப்பு

நெய்வேலி: கடலூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகததில் திங்கள்கிழமை நடைபெற்ற பொதுமக்கள் குறைகேட்புக் கூட்டத்தில் பல்வேறு கோரிக்கைகள் தொடா்பாக பொதுமக்கள் 654 மனுக்கள் அளித்தனா். கூட்டத்திற்கு மாவட்ட ஆட்சியா் சிப... மேலும் பார்க்க