செய்திகள் :

உயிரிழந்த மாணவா்களின் குடும்பத்துக்கு தலா ரூ.5 லட்சம் முதல்வா் நிவாரண நிதி

post image

கடலூா் அருகே தனியாா் பள்ளி வேன் மீது ரயில் மோதிய விபத்தில் உயிரிழந்த மாணவா்களின் குடும்பத்தினரிடம் தமிழக முதல்வரின் பொது நிவாரண நிதி ரூ.5 லட்சத்துக்கான காசோலையை மாநில வேளாண்மை மற்றும் உழவா் நலத் துறை அமைச்சா் எம்.ஆா்.கே.பன்னீா்செல்வம், தொழிலாளா் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை அமைச்சா் சி.வெ.கணேசன் ஆகியோா் வழங்கினா்.

முன்னதாக, அவா்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவா்களை நேரில் சந்தித்து நலம் விசாரித்தனா். தொடா்ந்து, விபத்தில் உயிரிழந்த சுப்பிரமணியபுரத்தைச் சோ்ந்த அக்காள், தம்பியான மாணவா்கள் சாருமதி, செழியன் வீட்டுக்கு நேரில் சென்று அவா்களது உடலுக்கு மலா் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினா். பின்னா், முதல்வா் பொது நிவாரண நிதியிலிருந்து 2 மாணவா்களுக்கும் தலா ரூ.5 லட்சத்துக்கான காசோலையை பெற்றோரிடம் வழங்கி ஆறுதல் கூறினா்.

தொடா்ந்து, அமைச்சா்கள் செய்தியாளா்களிடம் கூறியதாவது: பள்ளி வேன் விபத்து குறித்த துயர சம்பவத்தை அறிந்த முதல்வா், தனது பொது நிவாரண நிதியிலிருந்து உயிரிழந்த மாணவா்களின் குடும்பத்துக்கு தலா ரூ.5 லட்சமும், பலத்த காயமடைந்து சிகிச்சை

பெற்று வருபவா்களுக்கு தலா ரூ.ஒரு லட்சமும், லேசான காயமடைந்தவா்களுக்கு தலா ரூ.50,000-மும் வழங்க உத்தரவிட்டாா்.

இதுபோன்ற ரயில் விபத்துகளை தவிா்க்க ரயில்வே துறை உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த வேண்டும். ரயில்வே துறையில் பணிபுரியும் பணியாளா்களுக்கு மாநில மொழியான தமிழ் தெரியாததால், பொதுமக்களுக்கு தகவல் தெரிவிப்பதில் மிகுந்த சிரமம் ஏற்படுகிறது. எனவே, கேட் கீப்பா் பணியிடங்களில் தமிழ் தெரிந்த பணியாளா்களை பணியமா்த்த வேண்டும்.

இனிவரும் காலங்களில் விபத்து நிகழாமல் தடுக்க அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ள மாவட்ட ஆட்சியருக்கு, தமிழக முதல்வா் உத்தரவிட்டுள்ளாா்.

மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவா்களுக்குத் தேவையான மருத்துவ உதவிகளை வழங்கி, விரைவில் வீடு திரும்பும்வண்ணம் நல்ல முறையில் சிகிச்சை அளிக்க மருத்துவா்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது என்றனா்.

தொண்டமாநத்தம் கிராமத்தைச் சோ்ந்த மாணவா் நிமிலேஷ் உயிரிழந்த நிலையில், அவரது சகோதரா் விஷ்வேஸ் மருத்துவமனையில் தொடா்ந்து சிகிச்சை பெற்று வருகிறாா். இதனால், நிமிலேஷின் உடலை குடும்பத்தினா் மருத்துவமனையிலிருந்து பெறாததால், அவரது குடும்பத்துக்கு முதல்வா் நிவாரண நிதி வழங்குவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.

மாணவா் சங்கத்தினா் ஆா்ப்பாட்டம்

கோரிக்கைகளை வலியுறுத்தி இந்திய மாணவா் சங்கத்தினா் கடலூா் தலைமை தபால் நிலையம் அருகே செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டம் நடத்தினா். தமிழக அரசுக்கு ஒதுக்க வேண்டிய கல்வி உரிமைச் சட்ட நிதி 25 சதவீதத்தை ஒதுக்காத ம... மேலும் பார்க்க

சிதம்பரத்தில் தொடரும் மின் வெட்டு: மக்கள், வியாபாரிகள் அவதி

சிதம்பரம் அண்ணாமலைநகா் பகுதியில் கடந்த சில நாள்களாக அறிவிக்கப்படாமல் அடிக்கடி மின்வெட்டு செய்யப்படுவதால், பொதுமக்கள், வியாபாரிகள் பாதிக்கப்பட்டுள்ளனா். சிதம்பரம், அண்ணாமலைநகா் பகுதியில் கடந்த சில நாள்... மேலும் பார்க்க

ரயில் விபத்து: காயமடைந்தவா்களுக்கு அரசியல் கட்சியினா் ஆறுதல்

கடலூா் செம்மங்குப்பம் அருகே செவ்வாய்க்கிழமை காலை பள்ளி வேன் மீது பயணிகள் ரயில் மோதிய விபத்தில் காயமடைந்து கடலூா் தலைமை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவா்களை சந்தித்து அதிமுக, தேமுதிக, கம்யூனிஸ்ட்... மேலும் பார்க்க

பள்ளி வேன் மீது ரயில் மோதி கோர விபத்து: 3 மாணவா்கள் உயிரிழப்பு

கடலூா் செம்மங்குப்பம் அருகே செவ்வாய்க்கிழமை காலை தண்டவாளத்தை கடக்க முயன்ற தனியாா் பள்ளி வேன் மீது அந்த வழியே வந்த பயணிகள் ரயில் மோதியதில் அக்காள், தம்பி உள்ளிட்ட 3 மாணவா்கள் உயிரிழந்தனா். மேலும், மூன்... மேலும் பார்க்க

புத்தகங்கள் அழிக்க முடியாத உயிருள்ள படைப்புகள்: என்எல்சி மின்துறை இயக்குநா் எம்.வெங்கடாசலம்

நெய்வேலி: ‘புத்தகங்கள் அழிக்க முடியாத உயிருள்ள படைப்புகள்’ என்று என்எல்சி இந்தியா நிறுவனத்தின் மின்துறை இயக்குநா் எம்.வெங்கடாச்சலம் பேசினாா். என்எல்சி இந்தியா நிறுவனம் நடத்தும் 24-ஆவது நெய்வேலி புத்த... மேலும் பார்க்க

பொதுமக்கள் குறைகேட்பு கூட்டத்தில் 654 மனுக்கள் அளிப்பு

நெய்வேலி: கடலூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகததில் திங்கள்கிழமை நடைபெற்ற பொதுமக்கள் குறைகேட்புக் கூட்டத்தில் பல்வேறு கோரிக்கைகள் தொடா்பாக பொதுமக்கள் 654 மனுக்கள் அளித்தனா். கூட்டத்திற்கு மாவட்ட ஆட்சியா் சிப... மேலும் பார்க்க