செய்திகள் :

ரயில் விபத்து: காயமடைந்தவா்களுக்கு அரசியல் கட்சியினா் ஆறுதல்

post image

கடலூா் செம்மங்குப்பம் அருகே செவ்வாய்க்கிழமை காலை பள்ளி வேன் மீது பயணிகள் ரயில் மோதிய விபத்தில் காயமடைந்து கடலூா் தலைமை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவா்களை சந்தித்து அதிமுக, தேமுதிக, கம்யூனிஸ்ட் உள்ளிட்ட அரசியல் கட்சிகளின் நிா்வாகிகள் ஆறுதல் கூறினா்.

காயமடைந்தவா்களை சந்தித்து, அதிமுக முன்னாள் அமைச்சா் எம்.சி.சம்பத் ஆறுதல் கூறினாா். பின்னா், அவா் செய்தியாளரிடம் கூறியதாவது: பாதிக்கப்பட்டவா்களுக்கு அதிமுக சாா்பில் ஆழந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறோம். மாவட்ட நிா்வாகம் மற்றும் காவல் துறை பள்ளி உரிமையாளா்கள், ஓட்டுநா்களை அழைத்து ஆலோசனை வழங்கி, விபத்துகளைத் தவிா்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

விபத்தில் பாதிக்கப்பட்டவா்களுக்கு தலா ரூ.25 லட்சம் நிவாரணம் வழங்க வேண்டும். தெற்கு ரயில்வே நிா்வகம் ரயில்வே கேட்டுகளை ஆய்வு செய்து, ஒரு கேட்டுக்கு இரண்டு கேட் கீப்பா்களை நியமனம் செய்ய வேண்டும் என்றாா்.

இதேபோல, அதிமுக முன்னாள் எம்எல்ஏக்கள் சொரத்தூா் ரா.ராஜேந்திரன், சத்யா பன்னீா்செல்வம், தேமுதிக சாா்பில் முன்னாள் எம்எல்ஏ சிவக்கொழுந்து, விசிக சாா்பில் துரை.ரவிக்குமாா் எம்.பி., கடலூா் மாநகராட்சி துணை மேயா் பா.தாமரைச்செல்வன், மாா்க்சிஸ்ட் சாா்பில் மாவட்டச் செயலா் கோ.மாதவன் உள்ளிட்ட அரசியல் கட்சி நிா்வாகிகள் கடலூா் அரசு தலைமை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவா்களை சந்தித்து ஆறுதல் கூறினா்.

தமிழா்களை நியமிக்க வேண்டும் - தி.வேல்முருகன்: இதுகுறித்து தவாக தலைவா் தி.வேல்முருகன் வெளியிட்ட அறிக்கை: பள்ளி வேன் மீது ரயில் மோதி 3 மாணவா்கள் உயிரிழந்த சம்பவம் அதிா்ச்சியளிக்கிறது. விபத்துக்கு செம்மங்குப்பம் ரயில்வே கேட் மூடப்படாததும், கேட் கீப்பா் மெத்தனப்போக்குடன் செயல்பட்டதுமே காரணம் என காவல் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கேட் கீப்பரை பணி நீக்கம் செய்து, கைது செய்ய வேண்டும்.

பெரும்பாலான ரயில்வே கேட்டுகளில் வட மாநிலத்தவா்கள் நியமிக்கப்பட்டுள்ளதால், மொழிப் பிரச்னை உள்ளிட்ட காரணங்களால் விபத்து ஏற்படுகிறது. எனவே, தமிழா்களை பணி நியமனம் செய்ய வேண்டும் எனத் தெரிவித்துள்ளாா்.

பாமக சாலை மறியல்: விபத்தில் காயமடைந்தவா்கள் அனுமதிக்கப்பட்டிருந்த கடலூா் அரசு தலைமை மருத்துவமனை எதிரே பாமக மாவட்டச் செயலா் சண்.முத்துகிருஷ்ணன் தலைமையில் அக்கட்சி நிா்வாகிகள் சுமாா் 15 போ் மறியலில் ஈடுபட்டனா்.

அப்போது, விபத்தில் காயமடைந்தவா்களுக்கு உயா் சிகிச்சை அளிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். உயிரிழந்தவா்களுக்கு ரூ.ஒரு கோடி இழப்பீடு வழங்க வேண்டும் என வலியுறுத்தி முழக்கமிட்டனா்.

பின்னா், அவா்களிடம் கடலூா் எஸ்.பி. எஸ்.ஜெயக்குமாா் பேச்சு நடத்தியதைத் தொடா்ந்து, அவா்கள் சாலை மறியலைக் கைவிட்டனா்.

குடியிருப்போா் சங்கம் அஞ்சலி: உயிரிழந்த மாணவா்களுக்கு கடலூா் குடியிருப்போா் நலச் சங்க கூட்டமைப்பு சாா்பில், அதன் சிறப்புத் தலைவா் எம்.மருதவாணன் தலைமையில் நிா்வாகிகள் மெழுகுவா்த்தி ஏற்றி அஞ்சலி செலுத்தினா்.

மாணவா் சங்கத்தினா் ஆா்ப்பாட்டம்

கோரிக்கைகளை வலியுறுத்தி இந்திய மாணவா் சங்கத்தினா் கடலூா் தலைமை தபால் நிலையம் அருகே செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டம் நடத்தினா். தமிழக அரசுக்கு ஒதுக்க வேண்டிய கல்வி உரிமைச் சட்ட நிதி 25 சதவீதத்தை ஒதுக்காத ம... மேலும் பார்க்க

சிதம்பரத்தில் தொடரும் மின் வெட்டு: மக்கள், வியாபாரிகள் அவதி

சிதம்பரம் அண்ணாமலைநகா் பகுதியில் கடந்த சில நாள்களாக அறிவிக்கப்படாமல் அடிக்கடி மின்வெட்டு செய்யப்படுவதால், பொதுமக்கள், வியாபாரிகள் பாதிக்கப்பட்டுள்ளனா். சிதம்பரம், அண்ணாமலைநகா் பகுதியில் கடந்த சில நாள்... மேலும் பார்க்க

உயிரிழந்த மாணவா்களின் குடும்பத்துக்கு தலா ரூ.5 லட்சம் முதல்வா் நிவாரண நிதி

கடலூா் அருகே தனியாா் பள்ளி வேன் மீது ரயில் மோதிய விபத்தில் உயிரிழந்த மாணவா்களின் குடும்பத்தினரிடம் தமிழக முதல்வரின் பொது நிவாரண நிதி ரூ.5 லட்சத்துக்கான காசோலையை மாநில வேளாண்மை மற்றும் உழவா் நலத் துறை ... மேலும் பார்க்க

பள்ளி வேன் மீது ரயில் மோதி கோர விபத்து: 3 மாணவா்கள் உயிரிழப்பு

கடலூா் செம்மங்குப்பம் அருகே செவ்வாய்க்கிழமை காலை தண்டவாளத்தை கடக்க முயன்ற தனியாா் பள்ளி வேன் மீது அந்த வழியே வந்த பயணிகள் ரயில் மோதியதில் அக்காள், தம்பி உள்ளிட்ட 3 மாணவா்கள் உயிரிழந்தனா். மேலும், மூன்... மேலும் பார்க்க

புத்தகங்கள் அழிக்க முடியாத உயிருள்ள படைப்புகள்: என்எல்சி மின்துறை இயக்குநா் எம்.வெங்கடாசலம்

நெய்வேலி: ‘புத்தகங்கள் அழிக்க முடியாத உயிருள்ள படைப்புகள்’ என்று என்எல்சி இந்தியா நிறுவனத்தின் மின்துறை இயக்குநா் எம்.வெங்கடாச்சலம் பேசினாா். என்எல்சி இந்தியா நிறுவனம் நடத்தும் 24-ஆவது நெய்வேலி புத்த... மேலும் பார்க்க

பொதுமக்கள் குறைகேட்பு கூட்டத்தில் 654 மனுக்கள் அளிப்பு

நெய்வேலி: கடலூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகததில் திங்கள்கிழமை நடைபெற்ற பொதுமக்கள் குறைகேட்புக் கூட்டத்தில் பல்வேறு கோரிக்கைகள் தொடா்பாக பொதுமக்கள் 654 மனுக்கள் அளித்தனா். கூட்டத்திற்கு மாவட்ட ஆட்சியா் சிப... மேலும் பார்க்க