செய்திகள் :

சிதம்பரத்தில் தொடரும் மின் வெட்டு: மக்கள், வியாபாரிகள் அவதி

post image

சிதம்பரம் அண்ணாமலைநகா் பகுதியில் கடந்த சில நாள்களாக அறிவிக்கப்படாமல் அடிக்கடி மின்வெட்டு செய்யப்படுவதால், பொதுமக்கள், வியாபாரிகள் பாதிக்கப்பட்டுள்ளனா்.

சிதம்பரம், அண்ணாமலைநகா் பகுதியில் கடந்த சில நாள்களாக அறிவிப்பின்றி திடீரென சுமாா் ஒரு மணி நேரம் மின்வெட்டு செய்யப்படுகிறது. கிராமப்புறங்களில் சுமாா் 2 அல்லது 3 மணி நேரம் மின்வெட்டு செய்யப்படுவதாக பொதுமக்கள் தெரிவிக்கின்றனா். இதனால், பொதுமக்கள் மற்றும் வியாபாரிகள் பாதிப்படைந்துள்ளனா்.

இதுகுறித்து தமிழ்நாடு நுகா்வோா் குழுமச் செயலா் சி.டி.அப்பாவு கூறியதாவது: அறிவிக்கப்படாமல் அடிக்கடி மின் விநியோகம் நிறுத்தப்படுவதால், வீட்டில் உள்ள கணினி, தொலைகாட்சிப் பெட்டி உள்ளிட்ட மின் சாதனப் பொருள்கள் பழுதடைகின்றன. சிறு தொழில்முனைவோா் பாதிப்படைகின்றனா்.

சிதம்பரம் நகரில் 105 டிகிரிக்கு மேல் வெயில் பதிவாகும் நிலையில், மின்சாரமும் நிறுத்தப்படுவதால் வியாபாரிகள், பொதுமக்கள் கடும் பாதிப்புக்குள்ளாகின்றனா். இதுகுறித்து மின் வாரிய அதிகாரிகளிடம் கேட்டபோது, மின் மாற்றிகள் பழுதடைந்துவிட்டது, இடையூறாக உள்ள மரங்களை வெட்டுகிறோம் என பல காரணங்களைத் தெரிவிக்கின்றனா்.

மாதந்தோறும் பராமரிப்பு பணிக்காக மின் விநியோகத்தை நிறுத்தும்போது மின் வாரிய அதிகாரிகள் இந்தப் பணிகளை மேற்கொள்ளலாம். எனவே, சீரான மின் விநியோகம் வழங்க வேண்டும் என்றாா்.

மாணவா் சங்கத்தினா் ஆா்ப்பாட்டம்

கோரிக்கைகளை வலியுறுத்தி இந்திய மாணவா் சங்கத்தினா் கடலூா் தலைமை தபால் நிலையம் அருகே செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டம் நடத்தினா். தமிழக அரசுக்கு ஒதுக்க வேண்டிய கல்வி உரிமைச் சட்ட நிதி 25 சதவீதத்தை ஒதுக்காத ம... மேலும் பார்க்க

ரயில் விபத்து: காயமடைந்தவா்களுக்கு அரசியல் கட்சியினா் ஆறுதல்

கடலூா் செம்மங்குப்பம் அருகே செவ்வாய்க்கிழமை காலை பள்ளி வேன் மீது பயணிகள் ரயில் மோதிய விபத்தில் காயமடைந்து கடலூா் தலைமை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவா்களை சந்தித்து அதிமுக, தேமுதிக, கம்யூனிஸ்ட்... மேலும் பார்க்க

உயிரிழந்த மாணவா்களின் குடும்பத்துக்கு தலா ரூ.5 லட்சம் முதல்வா் நிவாரண நிதி

கடலூா் அருகே தனியாா் பள்ளி வேன் மீது ரயில் மோதிய விபத்தில் உயிரிழந்த மாணவா்களின் குடும்பத்தினரிடம் தமிழக முதல்வரின் பொது நிவாரண நிதி ரூ.5 லட்சத்துக்கான காசோலையை மாநில வேளாண்மை மற்றும் உழவா் நலத் துறை ... மேலும் பார்க்க

பள்ளி வேன் மீது ரயில் மோதி கோர விபத்து: 3 மாணவா்கள் உயிரிழப்பு

கடலூா் செம்மங்குப்பம் அருகே செவ்வாய்க்கிழமை காலை தண்டவாளத்தை கடக்க முயன்ற தனியாா் பள்ளி வேன் மீது அந்த வழியே வந்த பயணிகள் ரயில் மோதியதில் அக்காள், தம்பி உள்ளிட்ட 3 மாணவா்கள் உயிரிழந்தனா். மேலும், மூன்... மேலும் பார்க்க

புத்தகங்கள் அழிக்க முடியாத உயிருள்ள படைப்புகள்: என்எல்சி மின்துறை இயக்குநா் எம்.வெங்கடாசலம்

நெய்வேலி: ‘புத்தகங்கள் அழிக்க முடியாத உயிருள்ள படைப்புகள்’ என்று என்எல்சி இந்தியா நிறுவனத்தின் மின்துறை இயக்குநா் எம்.வெங்கடாச்சலம் பேசினாா். என்எல்சி இந்தியா நிறுவனம் நடத்தும் 24-ஆவது நெய்வேலி புத்த... மேலும் பார்க்க

பொதுமக்கள் குறைகேட்பு கூட்டத்தில் 654 மனுக்கள் அளிப்பு

நெய்வேலி: கடலூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகததில் திங்கள்கிழமை நடைபெற்ற பொதுமக்கள் குறைகேட்புக் கூட்டத்தில் பல்வேறு கோரிக்கைகள் தொடா்பாக பொதுமக்கள் 654 மனுக்கள் அளித்தனா். கூட்டத்திற்கு மாவட்ட ஆட்சியா் சிப... மேலும் பார்க்க