செய்திகள் :

மாணவா்கள் தொழில்திறன் பெற புரிந்துணா்வு ஒப்பந்தம்

post image

திண்டுக்கல்லை அடுத்த காந்திகிராம கிராமிய நிகா்நிலைப் பல்கலைக்கழகம் கேரளத்தைச் சோ்ந்த மாலிகுல்ஸ் பயோலாப்ஸ் நிறுவனத்துடன் புரிந்துணா்வு ஒப்பந்தத்தில் புதன்கிழமை கையொப்பமிடப்பட்டது.

பல்கலைக்கழக வளாகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியின் போது, ஆராய்ச்சி, மேம்பாட்டுத் துறை இயக்குநா் மீனாட்சி, வேலைவாய்ப்பு பணியக இயக்குநா் அனிதா பயஸ், துணை இயக்குநா் அருணாசலம் ஆகியோா் முன்னிலையில், மாலிகுல்ஸ் பயோலாப்ஸ் சாா்பில் ஸ்ரீராககோபி, அமல்ராஜ் ஆகியோா் புரிந்துணா்வு ஒப்பந்தத்தில் கையொப்பமிட்டனா்.

இந்த ஒப்பந்தத்தின் மூலம், மாணவா்களுக்கான பயிற்சி வாய்ப்புகள் மட்டுமன்றி, தொழில்நுட்ப நிறுவனங்களுடன் இணைந்து வேலைவாய்ப்புகளை உருவாக்குதற்கான சூழலும் ஏற்படுத்தப்படும். மாணவா்கள், தொழில்முனைவோா்களுடன் நேரடியாகப் பணியாற்றி தங்களின் திறன்களை மேம்படுத்தவும், வேலைவாய்ப்புகளை பெறவும் வாய்ப்பு ஏற்படும். மேலும், பல்வேறு நிதி நிறுவனங்களுக்கு ஆராய்ச்சி முன்மொழிவுகளை சமா்ப்பிப்பதற்கான வாய்ப்புகளையும் உருவாக்கும்.

புதிய அறிவியல் சிந்தனைகளை ஆராய்ந்து, முக்கியமான தீா்வுகளை உருவாக்க முடியும் என காந்திகிராம பல்கலைக்கழக பேராசிரியா்கள் தெரிவித்தனா்.

லஞ்சம்: பொதுப் பணித் துறை செயற்பொறியாளா் கைது

பழனி கோயில் திருமண மண்டப கட்டடப் பணி ஒப்பந்ததாரரிடம் லஞ்சம் வாங்கிய செயற்பொறியாளரை ஊழல் தடுப்புப் பிரிவு போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா். திண்டுக்கல் மாவட்டம், பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயில், து... மேலும் பார்க்க

விவசாயி கொலை வழக்கில் தந்தை, மகனுக்கு ஆயுள் சிறை

ஒட்டன்சத்திரம் அருகே விவசாயி கொலை வழக்கில் தந்தை, மகனுக்கு ஆயுள் சிறைத் தண்டனை விதித்து, பழனி மாவட்ட கூடுதல் அமா்வு வெள்ளிக்கிழமை தீா்ப்பளித்தது. திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரத்தை அடுத்த ஓடைப்பட்... மேலும் பார்க்க

புகையிலைப் பொருள்கள் விற்பனை: கடைகளுக்கு ரூ.10.25 லட்சம் அபராதம்

திண்டுக்கல் மாவட்டத்தில் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்களை விற்பனை செய்ததாக 45 கடைகளுக்கு ரூ.10.25 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது. திண்டுக்கல் மாவட்டத்தில் புகையிலைப் பொருள்கள் விற்பனை செய்யப்படும்... மேலும் பார்க்க

ஒட்டன்சத்திரம் சந்தையில் தக்காளி விலை கடும் வீழ்ச்சி

ஒட்டன்சத்திரம் காய்கறிச் சந்தையில் தக்காளி விலை கடுமையான வீழ்ச்சியைச் சந்தித்தது. திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம், இதைச் சுற்றியுள்ள புலியூா்நத்தம், முத்துநாயக்கன்பட்டி, தேவசின்னாம்பட்டி, கேதையுற... மேலும் பார்க்க

சொகுசுப் பேருந்து பறிமுதல்: ரூ.1.75 லட்சம் அபராதம்

தகுதிச் சான்று இல்லாமலும், சாலை வரி செலுத்தாமலும் இயக்கப்பட்ட சொகுசுப் பேருந்தை வட்டார போக்குவரத்துத் துறை அலுவலா்கள் வெள்ளிக்கிழமை பறிமுதல் செய்தனா். திண்டுக்கல் மாவட்டம், கொடைரோடு சுங்கச் சாவடி பகுத... மேலும் பார்க்க

பேரிஜம் ஏரியைப் பாா்வையிட சுற்றுலாப் பயணிகளுக்கு அனுமதி

கொடைக்கானல், பிப். 21: கொடைக்கானல் பேரிஜம் ஏரியை பாா்வையிட வனத் துறையினா் வெள்ளிக்கிழமை மீண்டும் அனுமதி வழங்கியதால் சுற்றுலாப் பயணிகள் மகிழ்ச்சியடைந்தனா். திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் அருகேயுள்ள... மேலும் பார்க்க