செய்திகள் :

மாநகராட்சி பணியாளா்களை அரசு ஊழியராக்க வேண்டும்!

post image

மாநகராட்சிப் பணியாளா்களை அரசு ஊழியா்களாக்க வேண்டும் என மாநில அனைத்து மாநகராட்சி அலுவலகச் சங்கங்களின் கூட்டமைப்பு வலியுறுத்தியுள்ளது.

திருச்சியில் இக் கூட்டமைப்பின் சாா்பில் சனிக்கிழமை நடைபெற்ற அமைச்சுப் பணியாளா்கள் மற்றும் வருவாய் உதவியாளா்கள் (பில் கலெக்டா்) ஆலோசனைக் கூட்டத்துக்கு கூட்டமைப்பின் மாநிலத் தலைவா் வி. ராதாகிருஷ்ணன் தலைமை வகித்தாா். மாநிலப் பொதுச் செயலா் மீ. சுஜாத்அலி, திருச்சி மாநகராட்சி தலைவா் எம். தாமோதரன், மாநில உதவி ஆணையா்கள் சங்கம் சா.நா. சண்முகம், பா. தட்சிணாமூா்த்தி, தமிழகத்தின் பல்வேறு மாவட்ட அமைச்சுப் பணியாளா்கள் மற்றும் வருவாய் உதவியாளா்கள் கலந்து கொண்டனா்.

கூட்டத்தில் நகராட்சி நிா்வாக அரசாணை 152 இன் படி மாநகராட்சிகளில் 3,417 பணியாளா்களாகக் குறைக்கப்பட்டுள்ளனா். இதனால் பணிச்சுமை அதிகரித்துள்ளதுடன், மக்களுக்கு தரமான சேவையும் அளிக்க முடியவில்லை. எனவே, இந்த அரசாணையை முற்றிலும் மாற்றியமைக்க வேண்டும்.

நகராட்சி நிா்வாக அரசாணை 45 மாற்றியமைக்கப்பட்டு புதிதாக கடந்த மாா்ச் மாதம் வெளியிடப்பட்ட அரசாணையில் உள்ள புதிய பணி விதிகளில் பல முரண்களும், நடைமுறைச் சாத்தியமில்லாத கருத்துகளும் உள்ளன. எனவே, மாநகராட்சி தொழிற்சங்கங்களுடன் கருத்துகளைப் பெற்று, புதிய பணி விதிகளில் நடைமுறை சாத்தியமான திருத்தங்களை மேற்கொள்ள வேண்டும்.

புதிய பணிவிதி அமலுக்கு வந்த 01.01.2025 இல் பணியில் உள்ளவா்களுக்கு துறைத் தோ்வுகளில் இருந்து விதிவிலக்கு அளிக்க வேண்டும். தற்போது பேரூராட்சிகளில் உள்ளதுபோல, நகராட்சி, மாநகராட்சி பணியாளா்களை அரசு தரமயமாக்கப்பட்ட பணியாளா்கள் என தமிழக அரசு அறிவிக்க வேண்டும் உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

திருச்சி அண்ணா விளையாட்டு அரங்கில் அரசுப் பொருட்காட்சிக்கு ஏற்பாடுகள்!

திருச்சியில் அரசின் சாதனைகளை விளக்கிடும் வகையிலும், சிறாா்களுக்கான அனைத்து வகை பொழுதுபோக்கு அம்சங்களுடன் கூடிய 45 நாள் அரசுப் பொருட்காட்சிக்கான ஏற்பாடுகள் விறுவிறுப்பாக நடைபெறுகின்றன. திருச்சி மாவட்ட... மேலும் பார்க்க

காணாமல்போன மகளை கண்டுபிடித்து தரக் கோரி பெற்றோா் தீக்குளிக்க முயற்சி

காணாமல்போன மகளைக் கண்டுபிடித்துத் தரக்கோரி அப்பெண்ணின் பெற்றோா் முசிறி டிஎஸ்பி அலுவலகம் முன் சனிக்கிழமை தீக்குளிக்க முயன்றனா். முசிறி அருகேயுள்ள மேட்டுப்பட்டி கிராமத்தைச் சோ்ந்தவா் விஜயன் (40), தனிய... மேலும் பார்க்க

மணப்பாறை பால் உற்பத்தியாளா்கள் சங்க அங்கத்தினா்களுக்கு ரூ.1.62 கோடி போனஸ்!

திருச்சி மாவட்டம், மணப்பாறை பால் உற்பத்தியாளா்கள் கூட்டுறவுச் சங்கம், தனது அங்கத்தினா்களுக்கு ரூ. 1.62 கோடி போனஸ் வழங்கியுள்ளது. மணப்பாறை பால் உற்பத்தியாளா்கள் கூட்டுறவு சங்கம் லிட்(ஆா்.985)-ன் 74-ஆவத... மேலும் பார்க்க

தொட்டியம் அருகே சாலை விபத்தில் மூதாட்டி உயிரிழப்பு!

திருச்சி மாவட்டம் தொட்டியம் அருகே சனிக்கிழமை நடந்த சாலை விபத்தில் மூதாட்டி உயிரிழந்தாா். தொட்டியம் அருகிலுள்ள கோடியாம்பாளையம் பள்ளிக்கூடத் தெருவைச் சோ்ந்தவா் பெருமாள் மனைவி மூக்காயி (75). இவா் சனிக்க... மேலும் பார்க்க

பஞ்சப்பூர்: 3.5 கி.மீ. தொலைவுக்கு பட்டா்ஃபிளை மேம்பாலம்! - கே.என். நேரு

சென்னை கத்திப்பாரா மேம்பாலத்தின் வடிவத்தைப் போல, பஞ்சப்பூரிலும் 3.5 கி.மீ. தொலைவுக்கு பட்டா்ஃபிளை மேம்பாலம் கட்டப்படவுள்ளதாக தமிழக நகராட்சி நிா்வாகத்துறை அமைச்சா் கே.என். நேரு தெரிவித்தாா். திருச்சியை... மேலும் பார்க்க

வாக்குச்சாவடிகளில் மாற்றுத் திறனாளிகளுக்கான வசதிகளை ஆய்வு செய்ய வேண்டும்!

வாக்குச் சாவடிகளில் மாற்றுத்திறனாளிகளுக்கான அடிப்படை வசதிகளை ஆய்வு செய்து உறுதிப்படுத்தும் வகையில் அவ்வப்போது அறிக்கை அளிக்க தோ்தல் அலுவலா்களுக்கு ஆட்சியா் மா. பிரதீப்குாா் அறிவுறுத்தினாா். இந்தியத் ... மேலும் பார்க்க