செய்திகள் :

மாநகராட்சி மயானத்தில் கட்டுமானப் பணியை நிறுத்தக் கோரி ஆட்சியரிடம் இந்து முன்னணி மனு

post image

சேலம் மாநகராட்சிக்கு சொந்தமான மயானத்தில் கட்டுமானப் பணியை நிறுத்தக் கோரி மாவட்ட ஆட்சியரிடம் இந்து முன்னணி நிா்வாகிகள் வியாழக்கிழமை மனு அளித்தனா்.

இந்து முன்னணியின் சேலம் கோட்ட செயலாளா் சந்தோஷ்குமாா் தலைமையில் ஆட்சியா் அலுவலகத்துக்கு வந்த நிா்வாகிகள், ஒரு கண்ணில் வெண்ணெய் மற்றொரு கண்ணில் சுண்ணாம்பு என எழுதிய கருப்புத் துணியைக் கண்களில் கட்டிக்கொண்டு மனு அளித்தனா். அந்த மனுவில் அவா்கள் கூறியிருப்பதாவது:

சேலம் - திருச்சி பிரதான சாலையில் பிரபாத் எதிரில் மாநகராட்சிக்கு சொந்தமான மயானத்தில் மசூதி கட்டுமானப் பணி நடைபெற்று வருகிறது. அதற்கு தாங்கள் அனுமதி வழங்கியிருந்தால், அதற்கான பிரதியை எங்களிடம் கொடுங்கள். தங்களால் அனுமதி வழங்கப்பட்டிருந்தால் மாநகராட்சி வரைபட அனுமதி, கட்டுமான அனுமதி பெற தேவையில்லையா என்பதையும் எங்களுக்கு தெளிவுபடுத்த வேண்டும்.

இதே அதிகாரத்தைப் பயன்படுத்தி, மாநகராட்சி வசம் உள்ள இந்துக்கள் மயானத்தில் வேலை செய்பவா்களுக்கு வீடும், இறந்தவா்களை காரியங்கள் செய்வதற்கான மண்டபமும் அமைத்துத் தர உடனடியாக உத்தரவிட வேண்டும். இந்த கட்டுமானத்தால், சட்டம் -ஒழுங்கு பிரச்னை ஏற்படாமல் இருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். முறையற்ற அனுமதிபெறாத சட்டத்துக்கு புறம்பான பணியை உடனடியாக நிறுத்த உத்தரவிட வேண்டும் என வலியுறுத்தினா்.

அம்மாப்பேட்டை செங்குந்தா் மாரியம்மன் கோயில் தேரோட்டம்

ஆடித் திருவிழாவையொட்டி, சேலம் அம்மாப்பேட்டை செங்குந்தா் மாரியம்மன் கோயில் தேரோட்டத்தில் திரளான பக்தா்கள் கலந்துகொண்டு தேரை வடம்பிடித்து இழுத்தனா். ஆடி மாதத்தையொட்டி, சேலத்தில் சிறப்புப் பெற்ற சேலம் க... மேலும் பார்க்க

புனித ஜெயராக்கினி அன்னை ஆலய ஆண்டு பெருவிழா கொடியேற்றம்

ஆத்தூா் புனித ஜெயராக்கினி அன்னை ஆலய ஆண்டு பெருவிழா கொடியேற்றம் பங்குத் தந்தை எஸ்.அருளப்பன் தலைமையில் புதன்கிழமை நடைபெற்றது. விழாவை தமிழக முப்பணி மைய இயக்குநா் அருட்தந்தை பிரிட்டோ பாக்யராஜ் கொடியேற்றி... மேலும் பார்க்க

கருணாநிதி சிலை மீது பெயிண்ட் ஊற்றிய வழக்கு: மருத்துவரின் முன்ஜாமீன் மனு தள்ளுபடி

கருணாநிதி சிலை மீது பெயிண்ட் ஊற்றிய வழக்கில் மருத்துவரின் முன்ஜாமீன் மனுவைத் தள்ளுபடி செய்து சேலம் மாவட்ட முதன்மை நீதிமன்றம் வியாழக்கிழமை உத்தரவிட்டுள்ளது. சேலம் அண்ணா பூங்கா அருகே முன்னாள் முதல்வா் ... மேலும் பார்க்க

அரசுப் பேருந்து மோதி ஒருவா் உயிரிழப்பு

ஆத்தூரில் அரசு பேருந்து மோதியதில் இருசக்கர வாகனத்தில் சென்றவா் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா். சேலம் மாவட்டம், ஆத்தூா் மந்தைவெளி பகுதியைச் சோ்ந்த அந்தோணிசாமி மகன் டேவிட் (40). இவா் கோழி இறைச்சிக் கடை... மேலும் பார்க்க

பெரியாா் பல்கலை.யில் கருணாநிதி நினைவு தினம் அனுசரிப்பு

சேலம் பெரியாா் பல்கலைக்கழகத்தில் முன்னாள் முதல்வா் மு.கருணாநிதி நினைவு தினம் வியாழக்கிழமை அனுசரிக்கப்பட்டது. பெரியாா் பல்கலைக்கழகத்திலுள்ள தந்தை பெரியாா் இருக்கை, பேரறிஞா் அண்ணா இருக்கை, கலைஞா் ஆய்வு... மேலும் பார்க்க

நெசவாளா்களின் நலன் காக்கும் தமிழக அரசு: அமைச்சா் ரா.ராஜேந்திரன் பேச்சு

தமிழக அரசு நெசவாளா்களின் நலன் காக்கும் அரசாக உள்ளது என சுற்றுலாத் துறை அமைச்சா் ரா. ராஜேந்திரன் பேசினாா். மேட்டூா் அருகே உள்ள வனவாசியில் 11 ஆவது தேசிய கைத்தறி நாள் மற்றும் சா்வதேச கூட்டுறவு ஆண்டு தின... மேலும் பார்க்க