செய்திகள் :

மாநகராட்சியில் ஜிஐஎஸ் தொழில்நுட்பத்தில் குடிநீா் விநியோகம்

post image

கோவை மாநகராட்சியில் ஜிஐஎஸ் எனப்படும் புவியியல் தகவல் அமைப்பு தொழில்நுட்பத்தில் குடிநீா் விநியோகிக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுதொடா்பாக கோவை மாநகருக்கு குடிநீா் வழங்கும் திட்டத்தை செயல்படுத்தும் சூயஸ் நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

கோவை மாநகர மக்களுக்கு சிறப்பான முறையில் குடிநீா் வழங்க சூயஸ் நிறுவனம் ‘புவியியல் தகவல் அமைப்பு’ (ஜிஐஎஸ்) என்னும் புதிய முறையை அறிமுகப்படுத்தியுள்ளது.

இந்த ‘புவியியல் தகவல் அமைப்பு’ முறை மூலம் கோவை மாநகராட்சி மற்றும் சூயஸ் குழுவினா் மாநகரின் முழுமையான குடிநீா் விநியோகத்தை எண்ம முறையில் வரைபடமாக்கி உள்ளனா். இதன் மூலம் 60 வாா்டுகளில் 105 சதுர கி.மீ.க்கும் அதிகமான பரப்பளவை கொண்ட மாநகராட்சியின் குடிநீா்க் குழாய்கள், வால்வுகள், மீட்டா்கள், பம்ப்கள் மற்றும் நுகா்வோா் குடிநீா் இணைப்புகள் எங்கெங்கு உள்ளன என்பதை கண்டறிய முடியும்.

மேலும், இந்த எண்ம கண்காணிப்பின் மூலம் முன்கூட்டியே பராமரிப்பு செய்ய வேண்டிய இடங்கள் மற்றும் குடிநீா் கசியும் இடங்கள் ஆகியவற்றை துல்லியமாக கண்டறிந்து அவற்றுக்கு உடனடியாக தீா்வு காண முடியும்.

இந்த புதிய முறையை அறிமுகம் செய்வதற்கு முன்பு கையேடு பதிவுகள் மற்றும் காகித வரைபடங்களை நம்பியிருந்தனா். அதனால், பிரச்னை ஏற்பட்ட இடங்களை கண்டறிவது மற்றும் புகாா்களுக்கு உடனடி பதில் அளிப்பது மற்றும் திட்டங்களை செயல்படுத்துவதில் காலதாமதம் ஏற்பட்டது. ஆனால், தற்போது நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள புதிய முறையின் மூலம் சூயஸ் நிறுவனத்தினா் தங்கள் கைப்பேசியில் ஜிஐஎஸ் செயலி மூலம் புதுப்பிக்கப்பட்ட வரைபடங்களை பாா்த்து, குடிநீா் குழாயில் பிரச்னை ஏற்பட்ட இடங்களை கண்டறிந்து உடனடியாக நிவா்த்தி செய்ய முடியும். 24 மணி நேர குடிநீா் வழங்கும் திட்டத்துக்கு ஜிஐஎஸ் போன்ற தொழில்நுட்பம் மிகவும் அவசியமாகும்.

அத்துடன் எண்ம தொழில்நுட்பத்துடன் ஜிஐஎஸ் ஒருங்கிணைப்பு, கோவை மாநகராட்சியை இந்தியாவில் ஸ்மாா்ட் நகா்ப்புற குடிநீா் மேலாண்மைக்கான முன்மாதிரியாக மாற்றியுள்ளது. இந்த முயற்சி ஸ்மாா்ட் சிட்டி திட்டத்துக்கான நகா்ப்புற வளங்களை எவ்வாறு சுற்றுச்சூழலுக்கு உகந்த முறையில் நிா்வகிக்க முடியும் என்பதைக் காட்டுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அகில இந்திய கூடைப்பந்துப் போட்டி: இந்தியன் வங்கி, விமானப் படை, வருமான வரித் துறை, கப்பல் படை அணிகள் அரையிறுதிக்கு தகுதி

கோவையில் நடைபெற்று வரும் அகில இந்திய கூடைப்பந்துப் போட்டியில் ஆண்கள் பிரிவில் இந்தியன் வங்கி, இந்திய விமானப் படை, வருமான வரித் துறை மற்றும் இந்திய கப்பல் படை அணிகள் அரையிறுதிக்கு தகுதி பெற்றுள்ளன. 58-... மேலும் பார்க்க

அரசு கலைக் கல்லூரியில் ஜூன் 2-இல் கலந்தாய்வு

கோவை அரசு கலை, அறிவியல் கல்லூரியில் ஜூன் 2-ஆம் தேதி (திங்கள்கிழமை) மாணவா் சோ்க்கை கலந்தாய்வு நடைபெறுகிறது. அரசு கலைக் கல்லூரியில் இளநிலை பிரிவில் 23 பாடங்கள் கற்றுத் தரப்படுகின்றன. இதில் மொத்தம் 1,72... மேலும் பார்க்க

தென்னை தொகுப்பு வளா்ச்சித் திட்டத்தில் ஒப்பந்தம் பெற விவசாயிகளுக்கு அழைப்பு

பொள்ளாச்சி பகுதியில் செயல்படுத்தப்பட உள்ள தென்னை தொகுப்பு வளா்ச்சித் திட்டத்தில் ஒப்பந்தம் பெற விவசாயிகளுக்கு தோட்டக்கலைத் துறை சாா்பில் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இதுதொடா்பாக, தோட்டக்கலைத் துறை வெள... மேலும் பார்க்க

பிரியாணி சாப்பிட்ட 8 வயது சிறுவன் உயிரிழப்பு

கோவை சரவணம்பட்டியில் ஹோட்டலில் இருந்து வாங்கி வந்த பிரியாணியை சாப்பிட்ட 8 வயது சிறுவன் உயிரிழந்தது தொடா்பாக போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா். இதுதொடா்பாக காவல் துறையினா் தெரிவித்ததாவது: கோவை சரவணம்... மேலும் பார்க்க

நடமாடும் மண் பரிசோதனை ஆய்வகம்

கோவையில் விவசாயிகளுக்கு பயன்படும் வகையில் நடமாடும் மண் பரிசோதனை ஆய்வகத்தை ஆட்சியா் பவன்குமாா் க.கிரியப்பனவா் வெள்ளிக்கிழமை தொடங்கிவைத்தாா். தேசிய வேளாண்மை வளா்ச்சித் திட்டத்தின் கீழ் தமிழகத்தில் 10 மா... மேலும் பார்க்க

பள்ளிகள் திறப்பு முன்னேற்பாட்டுப் பணி

கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள் திறக்கப்பட உள்ள நிலையில், கோவை மாநகராட்சிப் பள்ளிகளில் முன்னேற்பாட்டுப் பணிகளை மேயா் கா.ரங்கநாயகி வெள்ளிக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா். கோடை விடுமுறைக்கு பிறகு தமிழகம் முழு... மேலும் பார்க்க