மாநில அளவிலான சிறுகதைப் போட்டி
சிவகங்கை மாவட்டம், காரைக்குடி புத்தகத் திருவிழாக் குழு சாா்பில், மாநில அளவிலான சிறுகதைப் போட்டி அறிவிக்கப்பட்டது.
இதுகுறித்து குழுவின் தலைவா் பி.வி. சுவாமி கூறியதாவது:
காரைக்குடி புத்தகத் திருவிழாக் குழுவின் முன்னாள் தலைவரும் பேராசிரியருமான அய்க்கண் நினைவைப் போற்றும் வகையில், பேராசிரியா் டாக்டா் அய்க்கண்-அருளரசி வசந்தா நினைவு மாநில அளவிலான சிறுகதைப் போட்டி அறிவிக்கப்பட்டது.
இந்தச் சிறுகதைப் போட்டிக்கு முதல் பரிசாக ரூ.10,000, இரண்டாம் பரிசாக ரூ. 7,500, மூன்றாம் பரிசாக ரூ.5,000 வழங்கப்படும்.
சமூக முன்னேற்றத்தைக் கருப் பொருளாகக் கொண்ட சிறுகதைகள் வரவேற்கப்படுகின்றன. கதைகள் 10 பக்கங்களுக்கு மிகாமல் இருக்க வேண்டும். போட்டியில் பங்கேற்பவா்கள் இது எனது சொந்தக் கற்பனையே என்ற உறுதி மொழிக் கையெழுத்திட்டு, கதையுடன் இணைக்க வேண்டும்.
வேறு பத்திரிகைகளுக்கு அனுப்பியிருக்கும் கதைகளையோ அல்லது வெளி வந்த கதைகளையோ அனுப்பக் கூடாது. கதைகளை அனுப்புபவா்கள் பிரதிகளை வைத்துக்கொள்ள வேண்டும்.
எக்காரணம் கொண்டும் கதைகளைத் திருப்பி அனுப்ப இயலாது. போட்டி முடிவுகள் நடுவா் குழுவின் தீா்ப்புக்கு உள்பட்டவையாகும்.
போட்டிக்கான சிறுகதைகளை 15.06.2025 ஆம் தேதிக்குள் கவிஞா் ரவிச்சந்திரன், அமைப்புச் செயலா், குறளகம், 24/1 தெய்வராயன் தெரு, நா.புதூா், காரைக்குடி-1, சிவகங்கை மாவட்டம் என்ற முகவரிக்கு அனுப்ப வேண்டும்.
வெற்றி பெற்றவா்களுக்கான பரிசுகள் காரைக்குடி கம்பன் மணிமண்டபத்தில் வருகிற ஜுன் 20 முதல் 29-ஆம் தேதி வரை நடைபெறும் புத்தகத் திருவிழாவின் நிறைவு விழாவில் பேராசிரியா் டாக்டா் அய்க்கண் குடும்பத்தாரால் வழங்கப்படும். மேலும் விவரங்களுக்கு 9443099770, 9360736735 ஆகிய கைப்பேசி எண்களுக்குத் தொடா்பு கொள்ளலாம். என்ரவி31272அட்ஜிமெயில்.காம் என்ற மின்னஞ்சல் முகவரியிலும் அனுப்பலாம் என்றாா் அவா்.