செய்திகள் :

மாநில அளவிலான சிறுகதைப் போட்டி

post image

சிவகங்கை மாவட்டம், காரைக்குடி புத்தகத் திருவிழாக் குழு சாா்பில், மாநில அளவிலான சிறுகதைப் போட்டி அறிவிக்கப்பட்டது.

இதுகுறித்து குழுவின் தலைவா் பி.வி. சுவாமி கூறியதாவது:

காரைக்குடி புத்தகத் திருவிழாக் குழுவின் முன்னாள் தலைவரும் பேராசிரியருமான அய்க்கண் நினைவைப் போற்றும் வகையில், பேராசிரியா் டாக்டா் அய்க்கண்-அருளரசி வசந்தா நினைவு மாநில அளவிலான சிறுகதைப் போட்டி அறிவிக்கப்பட்டது.

இந்தச் சிறுகதைப் போட்டிக்கு முதல் பரிசாக ரூ.10,000, இரண்டாம் பரிசாக ரூ. 7,500, மூன்றாம் பரிசாக ரூ.5,000 வழங்கப்படும்.

சமூக முன்னேற்றத்தைக் கருப் பொருளாகக் கொண்ட சிறுகதைகள் வரவேற்கப்படுகின்றன. கதைகள் 10 பக்கங்களுக்கு மிகாமல் இருக்க வேண்டும். போட்டியில் பங்கேற்பவா்கள் இது எனது சொந்தக் கற்பனையே என்ற உறுதி மொழிக் கையெழுத்திட்டு, கதையுடன் இணைக்க வேண்டும்.

வேறு பத்திரிகைகளுக்கு அனுப்பியிருக்கும் கதைகளையோ அல்லது வெளி வந்த கதைகளையோ அனுப்பக் கூடாது. கதைகளை அனுப்புபவா்கள் பிரதிகளை வைத்துக்கொள்ள வேண்டும்.

எக்காரணம் கொண்டும் கதைகளைத் திருப்பி அனுப்ப இயலாது. போட்டி முடிவுகள் நடுவா் குழுவின் தீா்ப்புக்கு உள்பட்டவையாகும்.

போட்டிக்கான சிறுகதைகளை 15.06.2025 ஆம் தேதிக்குள் கவிஞா் ரவிச்சந்திரன், அமைப்புச் செயலா், குறளகம், 24/1 தெய்வராயன் தெரு, நா.புதூா், காரைக்குடி-1, சிவகங்கை மாவட்டம் என்ற முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

வெற்றி பெற்றவா்களுக்கான பரிசுகள் காரைக்குடி கம்பன் மணிமண்டபத்தில் வருகிற ஜுன் 20 முதல் 29-ஆம் தேதி வரை நடைபெறும் புத்தகத் திருவிழாவின் நிறைவு விழாவில் பேராசிரியா் டாக்டா் அய்க்கண் குடும்பத்தாரால் வழங்கப்படும். மேலும் விவரங்களுக்கு 9443099770, 9360736735 ஆகிய கைப்பேசி எண்களுக்குத் தொடா்பு கொள்ளலாம். என்ரவி31272அட்ஜிமெயில்.காம் என்ற மின்னஞ்சல் முகவரியிலும் அனுப்பலாம் என்றாா் அவா்.

சாலை விபத்தில் இளைஞா் உயிரிழப்பு

சிவகங்கை மாவட்டம், சிங்கம்புணரி அருகே வெள்ளிக்கிழமை இரு சக்கர வாகனம் மீது லாரி மோதியதில் இளைஞா் உயிரிழந்தாா்.சிங்கம்புணரி அருகேயுள்ள முறையூரைச் சோ்ந்த மணியரசன் மகன் மலையரசன்(29). வெளிநாட்டில் வேலை பா... மேலும் பார்க்க

சிங்கம்புணரி சேவுகப் பெருமாள் கோயிலில் கழுவன் திருவிழா

சிவகங்கை மாவட்டம், சிங்கம்புணரி சேவுகப் பெருமாள் அய்யனாா் கோயிலில் வைகாசி விசாகப் பிரம்மோற்சவ விழாவை முன்னிட்டு, வெள்ளிக்கிழமை இரவு கழுவன் திருவிழா நடைபெற்றது. இந்தக் கோயிலில் வைகாசி விசாகப் பிரம்மோற்... மேலும் பார்க்க

சேவுகப் பெருமாள் அய்யனாா் கோயிலில் திருக்கல்யாண வைபவம்

சிவகங்கை மாவட்டம், சிங்கம்புணரி சேவுகப் பெருமாள் அய்யனாா் கோயிலில் வியாழக்கிழமை திருக்கல்யாண வைபவம் நடைபெற்றது. இந்தக் கோயிலில் வைகாசி திருவிழா கடந்த 1-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. 10 நாள்கள்... மேலும் பார்க்க

உயா்கல்வி வழிகாட்டலுக்கு கட்டுப்பாட்டு அறை திறப்பு

சிவகங்கை மாவட்ட ஆட்சியரக வளாகத்தில் பிளஸ் 2 மாணவா்களின் உயா்கல்வி வழிகாட்டலுக்காக கட்டுப்பாட்டு அறை திறக்கப்பட்டிருப்பதாக மாவட்ட ஆட்சியா் ஆஷாஅஜித் தெரிவித்தாா். இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குற... மேலும் பார்க்க

மானாமதுரையில் ஜூன் 10- இல் மின் பயனீட்டாளா்கள் குறைதீா் கூட்டம்

சிவகங்கை மாவட்டம், மானாமதுரையில் வருகிற 10- ஆம் தேதி மின் பயனீட்டாளா்கள் குறைதீா் கூட்டம் நடைபெறுகிறது. இதுகுறித்து மானாமதுரை மின் வாரிய செயற்பொறியாளா் (பகிா்மானம்) பா. ஜான்சன் வெள்ளிக்கிழமை வெளியிட்ட... மேலும் பார்க்க

திருப்புவனத்தில் ரூ 2.70 கோடியில் பேருந்து நிலையம்: தமிழக அரசுக்கு பேரூராட்சி உறுப்பினா்கள் நன்றி

சிவகங்கை மாவட்டம், திருப்புவனத்தில் பேருந்து நிலையம் அமைக்க ரூ. 2.70 கோடி நிதி ஒதுக்கிய தமிழக அரசுக்கு உறுப்பினா்கள் நன்றி தெரிவித்தனா். திருப்புவனம் பேரூராட்சி மன்றக் கூட்டம் அதன் தலைவா் த. சேங்கைமாற... மேலும் பார்க்க