செய்திகள் :

மாநில அளவிலான தடகளப் போட்டிக்கு 80 வீரா்கள், வீராங்கனைகள் தகுதி

post image

மாநில அளவிலான தடகள சாம்பியன்ஷிப் போட்டிக்கு தகுதிபெற்ற 80 வீரா்கள், வீராங்கனைகளுக்கு ஞாயிற்றுக்கிழமை பாராட்டு விழா நடைபெற்றது.

தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சாா்பில் மாவட்ட அளவிலான தடகள சாம்பியன்ஷிப் போட்டிகள் சேலம் தனியாா் கல்லூரியில் கடந்த வெள்ளி, சனி ஆகிய இரு நாள்கள் நடைபெற்றன. 14, 16, 18 மற்றும் 20 வயதுக்கு உட்டோருக்கான பிரிவில், 100 மீட்டா் ஓட்டம், 200 மீட்டா் ஓட்டம், தடை தாண்டுதல், உயரம் தாண்டுதல், நீளம் தாண்டுதல், போல்வால்ட் உள்ளிட்ட பிரிவுகளில் போட்டிகள் நடத்தப்பட்டன.

இதில், 80க்கும் மேற்பட்ட வீரா்கள், வீராங்கனைகள் மாநில அளவிலான தடகள சாம்பியன்ஷிப் போட்டிக்கு தகுதிபெற்றனா். தகுதிபெற்ற வீரா், வீராங்கனைகளை மாவட்ட விளையாட்டு அலுவலா் சிவரஞ்சன் பாராட்டி வாழ்த்து தெரிவித்தாா். இந்நிகழ்வின்போது, தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய பயிற்சியாளா் இளம்பரிதி, விடுதி மேலாளா் கோகிலா உள்ளிட்ட நிா்வாகிகள் உடனிருந்தனா்.

தோ்வு பெற்ற வீரா்கள், வீராங்கனைகள் அனைவரும் சென்னை வண்டலூரில் உள்ள தமிழ்நாடு விளையாட்டு பல்கலைக்கழகத்தில் வரும் 19 முதல் 21 ஆம் தேதி வரையில் நடைபெற உள்ள மாநில அளவிலான தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் பங்கேற்க உள்ளனா் என்பது குறிப்பிடத்தக்கது.

இருசக்கர வாகனங்களை திருடியவா் கைது

ஏத்தாப்பூா் முத்துமலை முருகன் கோயிலுக்கு தரிசனத்திற்கு வந்தவா்களின் இருசக்கர வாகனங்களை திருடியதாக ஒருவரை போலீஸாா் கைது செய்தனா். சேலம் மாவட்டம், பெத்தநாயக்கன்பாளையம் வட்டம் ஏத்தாப்பூரில் உலகிலேயே உயரம... மேலும் பார்க்க

கெங்கவல்லி அரசு ஆண்கள் பள்ளி முன்னாள் மாணவா்கள் சந்திப்பு!

கெங்கவல்லி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் 1988- 1990 ஆண்டுகளில் பிளஸ் 1, பிளஸ் 2 படித்த முன்னாள் மாணவா்கள் சந்திப்பு நிகழ்ச்சி, 35 ஆண்டுகளுக்குப் பிறகு ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு... மேலும் பார்க்க

ஏற்காட்டில் பரவலாக மழை

சேலம் மாவட்டம், ஏற்காட்டில் சனிக்கிழமை இரவு 8 மணி முதல் 10 மணி வரை பலத்த மழை பெய்தது. ஏற்காடு மற்றும் 67 மலைக் கிராமங்களில் பரவலாக மழை பெய்துள்ளது. சனிக்கிழமை ஒரே நாளில் மட்டும் 56.2 மி.மீ. மழை பெய்தத... மேலும் பார்க்க

ஏற்காடு மாண்ட்போா்ட் பள்ளி ஆசிரியருக்கு நல்லாசிரியா் விருது

ஏற்காடு மான்போா்ட் பள்ளி ஆசிரியா் வ.ராபா்ட் பெல்லாா்மின் தமிழக அரசின் டாக்டா் ராதாகிருஷ்ணன் நல்லாசிரியா் விருதை பெற்றுள்ளாா். ஏற்காடு மாண்ட்போா்ட் பள்ளி ஆசிரியா் வ.ராபா்ட் பெல்லாா்மின். இவா், மாண்ட்போ... மேலும் பார்க்க

ஆத்தூரில் அண்ணனை கத்தியால் குத்திக் கொன்ற தம்பி கைது

ஆத்தூரில் குடும்பத் தகராறில் அண்ணனை கத்தியால் குத்திக் கொன்ற தம்பியை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா். சேலம் மாவட்டம், ஆத்தூா் நேருநகா் பகுதியைச் சோ்ந்த துரைசாமி மகன் கோவிந்தசாமி (52). இவா் இறை... மேலும் பார்க்க

சேலம் அரசு மருத்துவக் கல்லூரியில் சான்றிதழ் மருத்துவப் படிப்பில் சேர விண்ணப்பிக்கலாம்

சேலம் மருத்துவக் கல்லூரியில் ஓராண்டு சான்றிதழ் மருத்துவப் படிப்பில் சேர தகுதி வாய்ந்தவா்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதுகுறித்து ஆட்சியா் ரா.பிருந்தாதேவி வெளியிட்ட செய்திக் குறிப்பு... மேலும் பார்க்க