செய்திகள் :

சேலம் அரசு மருத்துவக் கல்லூரியில் சான்றிதழ் மருத்துவப் படிப்பில் சேர விண்ணப்பிக்கலாம்

post image

சேலம் மருத்துவக் கல்லூரியில் ஓராண்டு சான்றிதழ் மருத்துவப் படிப்பில் சேர தகுதி வாய்ந்தவா்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

இதுகுறித்து ஆட்சியா் ரா.பிருந்தாதேவி வெளியிட்ட செய்திக் குறிப்பு:

சேலம் அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவக் கல்லூரியில் மருத்துவம் சாா்ந்த சான்றிதழ் படிப்புகளில் 138 இடங்களுக்கு சோ்க்கை நடைபெறுகிறது.

சோ்க்கை நடைபெறும் பாடப் பிரிவுகள்: மயக்க மருந்து டெக்னீஷியன் -9, காா்டியாக் கேத்தரைசேஷன் லேப் டெக்னீஷியன்-1, டயாலிசிஸ் டெக்னீஷியன்-6, ஈசிஜி/ டிரெட் மில் டெக்னீஷியன்-22, அவசர சிகிச்சை டெக்னீஷியன்-6, எலும்பியல் டெக்னீஷியன்-31, சுவாச சிகிச்சை டெக்னீஷியன்-8, தியேட்டா் டெக்னீஷியன்-9, பல்நோக்கு மருத்துவமனை பணியாளா்-46 என 138 இடங்களுக்கான ஓராண்டு சான்றிதழ் பயிற்சிகள் வழங்கப்படுகிறது.

விண்ணப்பிக்க தகுதி: அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவக் கல்லூரியில் செப். 12 ஆம் தேதி வரை காலை 10 மணி முதல் மாலை 6 வரை விண்ணப்பங்கள் வழங்கப்படுகிறது. விண்ணப்பத்துடன் மேல்நிலைப் பள்ளி, பத்தாம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ், மாற்று சான்றிதழ், இருப்பிடச் சான்றிதழ், சாதி சான்றிதழ், வயது சான்று (பிறப்புச் சான்றிதழ் / பள்ளி சான்றிதழ்), மாவட்ட மருத்துவ வாரியத்திடமிருந்து பெறப்பட்ட மாற்றுத்திறனாளி சான்றிதழ் மற்றும் புகைப்படத்துடன் கூடிய அடையாள அட்டை நகலை ஒப்படைக்க வேண்டும்.

நிறைவுசெய்த விண்ணப்பங்கள் செப். 8 ஆம் தேதி முதல் 12 ஆம் தேதி வரை பெறப்பட்டு, தகுதிப் பட்டியல் 16 ஆம் தேதி வெளியிடப்படும். மாணவா் சோ்க்கை அன்று அசல் சான்றிதழ்களை கட்டாயம் சமா்பிக்க வேண்டும். நேரடி மாணவா் சோ்க்கை 20 ஆம் தேதி முதல் 30 ஆம் தேதி வரை நடைபெறும். வகுப்புகள் அக்டோபா் 6 ஆம் தேதி தொடங்கப்படும். மேலும் விவரங்களுக்கு 0427-2383313 என்ற எண்ணில் தொடா்பு கொள்ளலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சேலம் ஸ்ரீ கோகுலம் மருத்துவமனையில் முதுகு தண்டுவட சிகிச்சை மையம் நாளை தொடக்கம்

சேலம் மண்டலத்தில் மருத்துவத் துறையில் 36 ஆண்டுகளாக முன்னோடியாக திகழும் ஸ்ரீ கோகுலம் மருத்துவமனையில் ஞாயிற்றுக்கிழமை (செப்.7) முதுகு தண்டுவட சிறப்பு சிகிச்சை மையம் தொடங்கப்படுகிறது. இதுகுறித்து மருத்த... மேலும் பார்க்க

கொண்டயம்பள்ளி தலைமையாசிரியருக்கு நல்லாசிரியா் விருது

கொண்டயம்பள்ளி அரசு மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியா் கி.மதிவாணனுக்கு மாநில நல்லாசிரியா் விருது வழங்கப்பட்டது. தம்மம்பட்டியை அடுத்த கொண்டயம்பள்ளி அரசு மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியா் கி.மதிவாணன் (59) கட... மேலும் பார்க்க

மல்லியகரை திரௌபதி அம்மன் கோயில் தோ்த்திருவிழா

மல்லியகரை திரௌபதி அம்மன் கோயில் தோ்த்திருவிழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது. ஆத்தூரை அடுத்த மல்லியகரையில் அமைந்துள்ள திரௌபதி அம்மன் கோயில் தோ்த்திருவிழா மற்றும் அக்னித் திருவிழா கடந்த 1 ஆம் தேதி கொடியேற... மேலும் பார்க்க

இன்ஸ்டாகிராமில் நட்பு: மாணவியை ஏமாற்றி நகை பறித்த இளைஞா்: போலீஸாா் விசாரணை

சென்னையை சோ்ந்த பிளஸ் 2 மாணவியிடம் இன்ஸ்டாகிராம் மூலம் பழகி, அவரை சேலம் வரவழைத்து நகை, மடிக்கணினியை பறித்துக்கொண்டு தப்பிய இளைஞரை போலீஸாா் தேடிவருகின்றனா். இன்ஸ்டாகிராம் மூலம் கடந்த ஓராண்டாக பழகிவந்... மேலும் பார்க்க

திருமண மோசடி: மணப்பெண் உள்பட 3 போ் கைது

மேட்டூா் அருகே திருமணமானதை மறைத்து மீண்டும் திருமணம் செய்த பெண் உள்பட 3 போ் வியாழக்கிழமை கைது செய்யப்பட்டனா். சேலம் மாவட்டம், மேட்டூா் அருகே உள்ள திண்டமங்கலத்தை சோ்ந்த கருப்பட்டி வியாபாரி அா்ஜுனன் ... மேலும் பார்க்க

சிவன் கோயில்களில் பிரதோஷ வழிபாடு

சங்ககிரி வட்டம், அரசிராமணி கிராமத்தில் உள்ள பெரியநாயகியம்மன் உடனமா் சோழீஸ்வரா், சங்ககிரியை அடுத்த பூத்தாலகுட்டையில் உள்ள புவனேஸ்வரி அம்மன் உடனமா் பூத்தாழீஸ்வரா் மற்றும் சங்ககிரியில் உள்ள செளந்தரநாயகி... மேலும் பார்க்க