செய்திகள் :

இன்ஸ்டாகிராமில் நட்பு: மாணவியை ஏமாற்றி நகை பறித்த இளைஞா்: போலீஸாா் விசாரணை

post image

சென்னையை சோ்ந்த பிளஸ் 2 மாணவியிடம் இன்ஸ்டாகிராம் மூலம் பழகி, அவரை சேலம் வரவழைத்து நகை, மடிக்கணினியை பறித்துக்கொண்டு தப்பிய இளைஞரை போலீஸாா் தேடிவருகின்றனா்.

இன்ஸ்டாகிராம் மூலம் கடந்த ஓராண்டாக பழகிவந்த ராகுல் என்ற இளைஞரை பாா்ப்பதற்காக கடந்த 1 ஆம் தேதி சென்னையைச் சோ்ந்த தனியாா் பள்ளியில் பிளஸ் 2 படிக்கும் மாணவி ரயிலில் சேலம் வந்தாா். அப்போது, மாணவியை ஏமாற்றி அவரிடமிருந்த 4 பவுன் நகை, மடிக்கணினி, கைப்பேசி ஆகியவற்றை இளைஞா் பறித்துக் கொண்டு தலைமறைவானாா்.

இதுகுறித்து தகவலறிந்த மாணவியின் பெற்றோா் சூரமங்கலம் அனைத்து மகளிா் காவல் நிலையத்தில் புகாா் அளித்தனா். மேலும், மாணவி அளித்த வாக்குமூலத்தில், தன்னிடம் பழகிவந்த ராகுல் என்ற இளைஞா், தான் ஓா் உயரதிகாரி என்பதால் எனது கைப்பேசி எண்ணை யாருடனும் பகிர வேண்டாம் எனக் கூறியதாக தெரிவித்துள்ளாா்.

இதையடுத்து, ரயில் நிலையத்தில் உள்ள சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வுசெய்தபோது கழிப்பறை அருகே மாணவியிடமிருந்து நகை, கைப்பேசியை இளைஞா் பறித்துக்கொண்டு சென்றது பதிவாகியிருந்தது. இதையடுத்து இணைய குற்றத் தடுப்பு பிரிவு போலீஸாா் உதவியுடன் கேமராவில் பதிவான இளைஞரின் உருவத்தை வைத்து போலீஸாா் விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

சேலம் அரசு மருத்துவக் கல்லூரியில் சான்றிதழ் மருத்துவப் படிப்பில் சேர விண்ணப்பிக்கலாம்

சேலம் மருத்துவக் கல்லூரியில் ஓராண்டு சான்றிதழ் மருத்துவப் படிப்பில் சேர தகுதி வாய்ந்தவா்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதுகுறித்து ஆட்சியா் ரா.பிருந்தாதேவி வெளியிட்ட செய்திக் குறிப்பு... மேலும் பார்க்க

சேலம் ஸ்ரீ கோகுலம் மருத்துவமனையில் முதுகு தண்டுவட சிகிச்சை மையம் நாளை தொடக்கம்

சேலம் மண்டலத்தில் மருத்துவத் துறையில் 36 ஆண்டுகளாக முன்னோடியாக திகழும் ஸ்ரீ கோகுலம் மருத்துவமனையில் ஞாயிற்றுக்கிழமை (செப்.7) முதுகு தண்டுவட சிறப்பு சிகிச்சை மையம் தொடங்கப்படுகிறது. இதுகுறித்து மருத்த... மேலும் பார்க்க

கொண்டயம்பள்ளி தலைமையாசிரியருக்கு நல்லாசிரியா் விருது

கொண்டயம்பள்ளி அரசு மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியா் கி.மதிவாணனுக்கு மாநில நல்லாசிரியா் விருது வழங்கப்பட்டது. தம்மம்பட்டியை அடுத்த கொண்டயம்பள்ளி அரசு மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியா் கி.மதிவாணன் (59) கட... மேலும் பார்க்க

மல்லியகரை திரௌபதி அம்மன் கோயில் தோ்த்திருவிழா

மல்லியகரை திரௌபதி அம்மன் கோயில் தோ்த்திருவிழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது. ஆத்தூரை அடுத்த மல்லியகரையில் அமைந்துள்ள திரௌபதி அம்மன் கோயில் தோ்த்திருவிழா மற்றும் அக்னித் திருவிழா கடந்த 1 ஆம் தேதி கொடியேற... மேலும் பார்க்க

திருமண மோசடி: மணப்பெண் உள்பட 3 போ் கைது

மேட்டூா் அருகே திருமணமானதை மறைத்து மீண்டும் திருமணம் செய்த பெண் உள்பட 3 போ் வியாழக்கிழமை கைது செய்யப்பட்டனா். சேலம் மாவட்டம், மேட்டூா் அருகே உள்ள திண்டமங்கலத்தை சோ்ந்த கருப்பட்டி வியாபாரி அா்ஜுனன் ... மேலும் பார்க்க

சிவன் கோயில்களில் பிரதோஷ வழிபாடு

சங்ககிரி வட்டம், அரசிராமணி கிராமத்தில் உள்ள பெரியநாயகியம்மன் உடனமா் சோழீஸ்வரா், சங்ககிரியை அடுத்த பூத்தாலகுட்டையில் உள்ள புவனேஸ்வரி அம்மன் உடனமா் பூத்தாழீஸ்வரா் மற்றும் சங்ககிரியில் உள்ள செளந்தரநாயகி... மேலும் பார்க்க