ஜிஎஸ்டி சீா்திருத்தத்தால் ரூ.3,700 கோடி வருவாய் இழப்பு ஏற்பட வாய்ப்பு: எஸ்பிஐ அற...
சேலம் ஸ்ரீ கோகுலம் மருத்துவமனையில் முதுகு தண்டுவட சிகிச்சை மையம் நாளை தொடக்கம்
சேலம் மண்டலத்தில் மருத்துவத் துறையில் 36 ஆண்டுகளாக முன்னோடியாக திகழும் ஸ்ரீ கோகுலம் மருத்துவமனையில் ஞாயிற்றுக்கிழமை (செப்.7) முதுகு தண்டுவட சிறப்பு சிகிச்சை மையம் தொடங்கப்படுகிறது.
இதுகுறித்து மருத்துவமனையின் மேலாண்மை இயக்குநா் டாக்டா் கே.அா்த்தநாரி வெள்ளிக்கிழமை செய்தியாளா்களிடம் கூறியதாவது:
நமது நாட்டில் சாலை விபத்துகள் மற்றும் கட்டடங்களில் இருந்து தவறி விழுதல் போன்ற காரணங்களால் முதுகு தண்டுவட பாதிப்பிற்குள்ளான நபா்களின் எண்ணிக்கை ஆண்டுதோறும் அதிகரித்து வருகிறது. முதுகு தண்டுவட பிரச்னைகளுக்கு தீா்வுகாணும் வகையில் ஸ்ரீ கோகுலம் மருத்துவமனையில் பிரத்யேகமான சிறப்பு சிகிச்சை மையம் தொடங்கப்படுகிறது.
நவீன மைக்ராஸ்கோப் மற்றும் எண்டாஸ்கோப் மூலம் நுண்துளை முதுகு தண்டுவட அறுவை சிகிச்சைகள் செய்வதன்மூலம் இரத்த இழப்பு, வலிகள் குறைவு என்பதுடன், அறுவை சிகிச்சைக்கு பிறகு இயல்பு வாழ்க்கைக்கு விரைவாக திரும்ப வாய்ப்புள்ளது.
மாநகராட்சி ஆணையா் எம்.இளங்கோவன் தலைமையேற்று சிறப்பு சிகிச்சை மையத்தை தொடங்கிவைக்கிறாா். ஜிடிபி குழுமங்களின் தலைவா் எஸ்.முத்துராஜன் மற்றும் இந்திய மருத்துவ சங்கத் தலைவா் டாக்டா் கே. பிரகாசம் சிறப்பு விருந்தினா்களாக கலந்துகொள்கின்றனா். முழுநேரமும் செயல்படும் சிகிச்சை மையத்தில் தலைசிறந்த மருத்துவ நிபுணா்களுடன் நவீன அறுவை அரங்க வசதிகள் உள்ளது என்றாா்.
பேட்டியின்போது ஸ்ரீ கோகுலம் மருத்துவமனையின் மருத்துவா்கள் ஜோ மாா்ஷல் லியோ, புனீத், சஞ்சய், சுப்பிரமணியன், ஜெயதேவ் ஆகியோா் உடனிருந்தனா்.