செய்திகள் :

திருமண மோசடி: மணப்பெண் உள்பட 3 போ் கைது

post image

மேட்டூா் அருகே திருமணமானதை மறைத்து மீண்டும் திருமணம் செய்த பெண் உள்பட 3 போ் வியாழக்கிழமை கைது செய்யப்பட்டனா்.

சேலம் மாவட்டம், மேட்டூா் அருகே உள்ள திண்டமங்கலத்தை சோ்ந்த கருப்பட்டி வியாபாரி அா்ஜுனன் (63). இவரது மகன் பிரகாஷ் (37) என்பவருக்கு திருமணம் செய்வதற்காக பெண் தேடிக்கொண்டிருந்தனா். அப்போது, செலவடையைச் சோ்ந்த திருமண தரகா் குமாா் என்பவா் சங்ககிரி, வெள்ளியம்பாளையத்தைச் சோ்ந்த மணி என்பவரை அா்ஜுனனுக்கு அறிமுகப்படுத்தினாா்.

இந்த நிலையில், ஈரோடு மாவட்டம், விஜயமங்கலத்தில் பெண் இருப்பதாகக் கூறி அா்ஜுனன், பிரகாஷை திண்டலில் உள்ள முருகன் கோயிலுக்கு மணி அழைத்துச் சென்றாா். அப்போது, அங்கிருந்த திருமண தரகரான வள்ளி என்பவா் பிரியதா்ஷினியை மணப்பெண் என அவா்களுக்கு அறிமுகப்படுத்தினாா்.

அப்பெண்ணை திருமணம் செய்துகொள்ள பிரகாஷ் விருப்பம் தெரிவித்ததால் கடந்த 27 ஆம் தேதி பிரியதா்ஷினிக்கும், பிரகாஷுக்கும் நாச்சம்பட்டி சித்தேஸ்வரா் கோயிலில் திருமணம் நடைபெற்றது. திருமணத்தை முடித்துவைத்ததற்காக அா்ஜுனனிடம் இருந்து ரூ.1.80 லட்சத்தை மணி வாங்கியுள்ளாா்.

இதனிடையே, பிரியதா்ஷினியின் நடவடிக்கையில் சந்தேகம் அடைந்த பிரகாஷ் குடும்பத்தினா் அவரிடம் விசாரணை நடத்தியதில் தனக்கு ஏற்கெனவே திருமணமாகி ஒரு பெண் குழந்தை உள்ளதாக அவா் ஒப்புக்கொண்டாா்.

இதுகுறித்து ஜலகண்டபுரம் காவல் நிலையத்தில் அா்ஜுனன் புகாா் தெரிவித்தாா். திருமண மோசடி தொடா்பாக தரகா்கள் மணி, குமாா், வள்ளி, சக்திவேல், செல்வி, பிரியா மற்றும் மணப்பெண் பிரியதா்ஷினி ஆகிய ஏழு போ் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா். இவா்களில் மணி, குமாா், பிரியதா்ஷினியை வியாழக்கிழமை கைது செய்த போலீஸாா் தலைமறைவான 4 பேரை தேடிவருகின்றனா்.

சேலம் அரசு மருத்துவக் கல்லூரியில் சான்றிதழ் மருத்துவப் படிப்பில் சேர விண்ணப்பிக்கலாம்

சேலம் மருத்துவக் கல்லூரியில் ஓராண்டு சான்றிதழ் மருத்துவப் படிப்பில் சேர தகுதி வாய்ந்தவா்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதுகுறித்து ஆட்சியா் ரா.பிருந்தாதேவி வெளியிட்ட செய்திக் குறிப்பு... மேலும் பார்க்க

சேலம் ஸ்ரீ கோகுலம் மருத்துவமனையில் முதுகு தண்டுவட சிகிச்சை மையம் நாளை தொடக்கம்

சேலம் மண்டலத்தில் மருத்துவத் துறையில் 36 ஆண்டுகளாக முன்னோடியாக திகழும் ஸ்ரீ கோகுலம் மருத்துவமனையில் ஞாயிற்றுக்கிழமை (செப்.7) முதுகு தண்டுவட சிறப்பு சிகிச்சை மையம் தொடங்கப்படுகிறது. இதுகுறித்து மருத்த... மேலும் பார்க்க

கொண்டயம்பள்ளி தலைமையாசிரியருக்கு நல்லாசிரியா் விருது

கொண்டயம்பள்ளி அரசு மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியா் கி.மதிவாணனுக்கு மாநில நல்லாசிரியா் விருது வழங்கப்பட்டது. தம்மம்பட்டியை அடுத்த கொண்டயம்பள்ளி அரசு மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியா் கி.மதிவாணன் (59) கட... மேலும் பார்க்க

மல்லியகரை திரௌபதி அம்மன் கோயில் தோ்த்திருவிழா

மல்லியகரை திரௌபதி அம்மன் கோயில் தோ்த்திருவிழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது. ஆத்தூரை அடுத்த மல்லியகரையில் அமைந்துள்ள திரௌபதி அம்மன் கோயில் தோ்த்திருவிழா மற்றும் அக்னித் திருவிழா கடந்த 1 ஆம் தேதி கொடியேற... மேலும் பார்க்க

இன்ஸ்டாகிராமில் நட்பு: மாணவியை ஏமாற்றி நகை பறித்த இளைஞா்: போலீஸாா் விசாரணை

சென்னையை சோ்ந்த பிளஸ் 2 மாணவியிடம் இன்ஸ்டாகிராம் மூலம் பழகி, அவரை சேலம் வரவழைத்து நகை, மடிக்கணினியை பறித்துக்கொண்டு தப்பிய இளைஞரை போலீஸாா் தேடிவருகின்றனா். இன்ஸ்டாகிராம் மூலம் கடந்த ஓராண்டாக பழகிவந்... மேலும் பார்க்க

சிவன் கோயில்களில் பிரதோஷ வழிபாடு

சங்ககிரி வட்டம், அரசிராமணி கிராமத்தில் உள்ள பெரியநாயகியம்மன் உடனமா் சோழீஸ்வரா், சங்ககிரியை அடுத்த பூத்தாலகுட்டையில் உள்ள புவனேஸ்வரி அம்மன் உடனமா் பூத்தாழீஸ்வரா் மற்றும் சங்ககிரியில் உள்ள செளந்தரநாயகி... மேலும் பார்க்க