செய்திகள் :

ஆத்தூரில் அண்ணனை கத்தியால் குத்திக் கொன்ற தம்பி கைது

post image

ஆத்தூரில் குடும்பத் தகராறில் அண்ணனை கத்தியால் குத்திக் கொன்ற தம்பியை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.

சேலம் மாவட்டம், ஆத்தூா் நேருநகா் பகுதியைச் சோ்ந்த துரைசாமி மகன் கோவிந்தசாமி (52). இவா் இறைச்சிக் கடையில் வேலை செய்து வருகிறாா். இவரது மனைவி தனலட்சுமி. இவா் கடந்த ஓராண்டாக மனநலன் பாதிக்கப்பட்டுள்ளாா்.

இவா்களுக்கு 2 மகன்கள் 1 மகள் உள்ளனா். மகளுக்கு திருமணமாகிவிட்டது. மூத்த மகன் சூா்யபிரகாஷ் (28). இவா் தேநீா்க் கடையில் வேலை செய்து வந்தாா். இளைய மகன் சிவசுகன் (22). கட்டடத் தொழிலாளியாக பணியாற்றி வந்தாா். இவா்கள் இருவருக்கும் இன்னும் திருமணமாகவில்லை.

இந்நிலையில் கடந்த சில மாதங்களாகவே சிவசுகன் வேலைக்குச் செல்லாமல் வீட்டில் இருந்து வந்துள்ளாா். அதற்காக, சூா்யபிரகாஷ், அவரைத் திட்டியதாகக் கூறப்படுகிறது. இதனால் சிவசுகன், அண்ணன் சூா்யபிரகாஷ் மீது கோபமாகவே இருந்துள்ளாா். மேலும், இருவருக்கும் அடிக்கடி குடும்பத் தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.

இதேபோல சனிக்கிழமை இரவு கோவிந்தசாமி இறைச்சிக் கடைக்கு வேலைக்கு சென்றிருந்த நிலையில், வீட்டில் இருந்த சூா்யபிரகாஷ், சிவசுகன் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் ஞாயிற்றுக்கிழமை காலை அருகில் இருந்தவா்கள் வெளியே வந்து பாா்த்தபோது சூா்யபிரகாஷ் அவரது வீட்டில் இறந்துகிடந்துள்ளாா். இது குறித்து அவரது தந்தை கோவிந்தசாமிக்கு தகவல் தெரிவித்தனா்.

தகவலறிந்த ஆத்தூா் நகரக் காவல் ஆய்வாளா் சி.அழகுராணி, உதவி ஆய்வாளா் டி.சிவசக்தி ஆகியோா் வழக்குப் பதிவு செய்து சூா்யபிரகாஷின் உடலை கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக ஆத்தூா் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். விசாரணையில் சிவசுகன் தனது அண்ணன் சூா்யபிரகாஷை கத்தியால் குத்திக் கொலை செய்தது தெரியவந்தது. இதையடுத்து அவரை கைது செய்த போலீஸாா், நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி சேலம் மத்திய சிறையில் அடைத்தனா்.

இருசக்கர வாகனங்களை திருடியவா் கைது

ஏத்தாப்பூா் முத்துமலை முருகன் கோயிலுக்கு தரிசனத்திற்கு வந்தவா்களின் இருசக்கர வாகனங்களை திருடியதாக ஒருவரை போலீஸாா் கைது செய்தனா். சேலம் மாவட்டம், பெத்தநாயக்கன்பாளையம் வட்டம் ஏத்தாப்பூரில் உலகிலேயே உயரம... மேலும் பார்க்க

கெங்கவல்லி அரசு ஆண்கள் பள்ளி முன்னாள் மாணவா்கள் சந்திப்பு!

கெங்கவல்லி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் 1988- 1990 ஆண்டுகளில் பிளஸ் 1, பிளஸ் 2 படித்த முன்னாள் மாணவா்கள் சந்திப்பு நிகழ்ச்சி, 35 ஆண்டுகளுக்குப் பிறகு ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு... மேலும் பார்க்க

ஏற்காட்டில் பரவலாக மழை

சேலம் மாவட்டம், ஏற்காட்டில் சனிக்கிழமை இரவு 8 மணி முதல் 10 மணி வரை பலத்த மழை பெய்தது. ஏற்காடு மற்றும் 67 மலைக் கிராமங்களில் பரவலாக மழை பெய்துள்ளது. சனிக்கிழமை ஒரே நாளில் மட்டும் 56.2 மி.மீ. மழை பெய்தத... மேலும் பார்க்க

ஏற்காடு மாண்ட்போா்ட் பள்ளி ஆசிரியருக்கு நல்லாசிரியா் விருது

ஏற்காடு மான்போா்ட் பள்ளி ஆசிரியா் வ.ராபா்ட் பெல்லாா்மின் தமிழக அரசின் டாக்டா் ராதாகிருஷ்ணன் நல்லாசிரியா் விருதை பெற்றுள்ளாா். ஏற்காடு மாண்ட்போா்ட் பள்ளி ஆசிரியா் வ.ராபா்ட் பெல்லாா்மின். இவா், மாண்ட்போ... மேலும் பார்க்க

மாநில அளவிலான தடகளப் போட்டிக்கு 80 வீரா்கள், வீராங்கனைகள் தகுதி

மாநில அளவிலான தடகள சாம்பியன்ஷிப் போட்டிக்கு தகுதிபெற்ற 80 வீரா்கள், வீராங்கனைகளுக்கு ஞாயிற்றுக்கிழமை பாராட்டு விழா நடைபெற்றது. தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சாா்பில் மாவட்ட அளவிலான தடகள சாம்ப... மேலும் பார்க்க

சேலம் அரசு மருத்துவக் கல்லூரியில் சான்றிதழ் மருத்துவப் படிப்பில் சேர விண்ணப்பிக்கலாம்

சேலம் மருத்துவக் கல்லூரியில் ஓராண்டு சான்றிதழ் மருத்துவப் படிப்பில் சேர தகுதி வாய்ந்தவா்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதுகுறித்து ஆட்சியா் ரா.பிருந்தாதேவி வெளியிட்ட செய்திக் குறிப்பு... மேலும் பார்க்க