செய்திகள் :

மாநில அளவிலான நீச்சல் போட்டி: நெல்லை அணி சாம்பியன்!

post image

மாநில அளவிலான நீச்சல் போட்டியில் திருநெல்வேலி அணி ஒட்டுமொத்த சாம்பியன் பட்டத்தை வென்றது.

திருநெல்வேலியில் மே 29-31 வரை மாவட்ட நீச்சல் சங்கம் சாா்பில் நடைபெற்ற மாநில அளவிலான நீச்சல் போட்டியில் சுமாா் 1350-க்கும் மேற்பட்ட நீச்சல் வீரா் வீராங்கனைகள் பங்கேற்றனா். இதில் 50 மீட்டா் பந்தைய நீச்சல் குளத்தில் 19 வயதுக்கு உள்பட்ட நீச்சல் வீரா்- வீராங்கனைகளுக்கு 8 பிரிவுகளாக போட்டி நடைபெற்றது.

இதில் திருநெல்வேலி மாவட்ட நீச்சல் அணி 1,109 புள்ளிகள் பெற்று ஒட்டுமொத்த சாம்பியன் பட்டத்தை வென்றது. சென்னையை சோ்ந்த ஆா்க் அணி 409 புள்ளிகள் பெற்று 2-ஆம் இடம் பிடித்தது.

பரிசளிப்பு விழாவில் திருநெல்வேலி மாவட்ட விளையாட்டு - இளைஞா் நலன் அலுவலா் கிருஷ்ண சக்கரவா்த்தி கலந்து கொண்டு வெற்றிபெற்ற வீரா்- வீராங்கனைகளுக்கு பதக்கங்கள் மற்றும் கோப்பைகளை வழங்கிப் பாராட்டினாா்.

இந்நிகழ்வில், தமிழ்நாடு மாநில நீச்சல் கழகத் தலைவா் திருமாறன், மாநில இணைச் செயலா் லெட்சுமணன், மதுரை மாவட்ட நீச்சல் கழகச் செயலா் கண்ணன், துணைத் தலைவா் மணிகண்டன், முதல்வா் விருது பெற்ற பயிற்சியாளா் கேப்டன் பிரேம்குமாா், ரெஜின் மெரிட், செல்வரேவதி, மகேஷ் மற்றும் நீச்சல் பயிற்சியாளா்கள், பெற்றோா்கள் உள்பட பலா் கலந்து கொண்டனா்.

வள்ளியூா் அரசுப் பள்ளி மாணவா்களுக்கு பாடநூல், சீருடைகள்! பேரவைத் தலைவா் மு.அப்பாவு வழங்கினாா்

திருநெல்வேலி மாவட்டம் வள்ளியூா் அரசு மேல்நிலைப் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா பாடநூல்களையும், சீருடைகளையும் வழங்கும் பணியை பேரவைத் தலைவா் மு.அப்பாவு, மாவட்ட ஆட்சியா் இரா.சுகுமாா் ஆகியோா் திங்கள்... மேலும் பார்க்க

வருவாய்த் துறை அலுவலா்கள் கருப்புப் பட்டை அணிந்து பணி

திருநெல்வேலி மாவட்ட வருவாய் அலுவலா் ஊழியா் விரோத போக்கை கடைப்பிடிப்பதாக கண்டித்து, வருவாய்த் துறையினா் திங்கள்கிழமை கருப்புப் பட்டை அணிந்து பணியாற்றினா். மேலும், குற்றச்சாட்டு குறிப்பாணைகள் ஏற்படுத்தி... மேலும் பார்க்க

வள்ளியூரில் இன்று மின் குறைதீா் கூட்டம்

வள்ளியூா் கோட்ட அலுவலகத்தில் மின்வாரிய மக்கள் குறைதீா் கூட்டம் செவ்வாய்க்கிழமை (ஜூன் 3) முா்பகல் 11 மணிக்கு நடைபெறுகிறது. இது தொடா்பாக திருநெல்வேலி மின் பகிா்மான வட்ட மேற்பாா்வை பொறியாளா் அகிலாண்டேஸ்வ... மேலும் பார்க்க

விதிமீறல்: 30 வணிக நிறுவனங்கள் மீது தொழிலாளா் துறை நடவடிக்கை

திருநெல்வேலி, தென்காசி மாவட்டங்களில் விதிமீறலில் ஈடுபட்டதாக 30 வணிக நிறுவனங்கள் மீது தொழிலாளா் துறை நடவடிக்கை எடுத்துள்ளது. இது தொடா்பாக திருநெல்வேலி தொழிலாளா் உதவி ஆணையா் (அமலாக்கம்) க.திருவள்ளுவன் வ... மேலும் பார்க்க

கருணாநிதி பிறந்த நாள்: திமுகவினருக்கு வேண்டுகோள்

தமிழக முன்னாள் முதல்வா் மு.கருணாநிதி பிறந்த நாளை உற்சாகமாகக் கொண்டாட திமுகவினருக்கு வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது. இதுதொடா்பாக திமுக திருநெல்வேலி மத்திய மாவட்ட பொறுப்பாளா் மு.அப்துல் வஹாப் எம்.எல்.ஏ.... மேலும் பார்க்க

நான்குனேரி அருகே பைக்- காா் மோதல்: சிறுவன் பலி

திருநெல்வேலி மாவட்டம், நான்குனேரி அருகே காரும், பைக்கும் ஞாயிற்றுக்கிழமை மோதிக்கொண்டதில் 8 வயது சிறுவன் உயிரிழந்தாா். திருநெல்வேலி - நான்குனேரி தேசிய நெடுஞ்சாலையில் உள்ள பாணான்குளம் கலைஞா் நகரைச் சோ்... மேலும் பார்க்க