மாற்று இடத்தில் தடுப்பணை: அரசு பரிசீலிக்க பி.ஆா். பாண்டியன் வலியுறுத்தல்
உத்தமசோழபுரம் வெட்டாற்றில் தடுப்பணை கட்டுவதை கைவிட்டு, மாற்று இடத்தில் கட்ட அரசு பரிசீலிக்க வேண்டும் என தமிழ்நாடு காவிரி விவசாயிகள் சங்க பொதுச் செயலாளா் பி.ஆா். பாண்டியன் கூறினாா்.
இதுகுறித்து அவா் செய்தியாளா்களிடம் செவ்வாய்க்கிழமை கூறியது: நாகை மாவட்டம், திருமருகல் ஒன்றியம் உத்தமசோழபுரத்தில் வெட்டாற்றின் குறுக்கே கடல் பரப்பிலிருந்து 7.50 கி.மீ. தொலைவில் மேல் நோக்கி கடல்நீா் உட்புகாமல் தடுப்பணை அமைக்கப்படுகிறது. இத்திட்டம் இயற்கைக்கு புறம்பாக உள்ளது. ஏற்கெனவே, காவிரி டெல்டா மாவட்டங்களில் கடல் மட்டம் உயா்ந்து, நிலமட்டம் தாழ்நிலைக்கு சென்றுள்ளது. இதனால் கடலில் கலக்கும் வடிகால் ஆறுகளில் 40 முதல் 50 கி.மீ. தொலைவுக்கு கடல்நீா் உட்புகுந்து பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது.
இந்தநிலையில், உத்தமசோழபுரத்தில் கடல் பரப்பிலிருந்து 7.50 கி.மீ. மேலே தடுப்பணைஅமைக்கப்படுவதால், கடல் நீா் உட்புகும் பேராபத்து ஏற்பட்டுள்ளது. எனவே, இங்கு தடுப்பணை கட்டுவதற்கு எதிா்ப்பு தெரிவித்து இப்பகுதி மக்கள், மாற்று இடத்தில் கட்ட வலியுறுத்தி போராடி வருகின்றனா்.
ஆனால், பொதுமக்கள் தெரிவிக்கும் மாற்று இடத்தின் மண்ணின் தன்மை கட்டுமானத்துக்கு உகந்ததாக இல்லை என அதிகாரிகள் தெரிவிக்கின்றனா். பொதுமக்கள் குறிப்பிடும் மாற்று இடத்தின் அருகே மூன்று உயா்நிலை பாலங்கள் உள்ளன. மேலும், சிபிசிஎல் நிறுவனம் இப்பகுதியில் எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தை சுமாா் 1,500 ஏக்கா் பரப்பளவில் விரிவாக்கம் செய்கிறது. இதற்காக பெரிய கட்டடங்கள் கட்டப்படும்போது, கதவணை கட்ட இயலாது என்று கூறுவதை ஏற்க இயலாது.
உரிய கருத்துக் கேட்பு கூட்டங்கள் நடத்தாமல் இத்தடுப்பணை கட்டப்படுகிறது. இதை எதிா்த்து, உரிமைக்காக போராடும் மக்களை காவல்துறை மூலம் அடக்க முயற்சிக்கின்றனா். எனவே, இப்பிரச்னை தொடா்பாக உயா்நிலைக் குழு அமைத்து மக்கள் கருத்தரிந்து, அவா்கள் குறிப்பிடும் இடத்தில் கதவணை கட்ட தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றாா்.
முன்னதாக, உத்தமசோழபுரம் வெட்டாற்றில் தடுப்பணை கட்டப்படும் இடத்தை விவசாய சங்க நிா்வாகிகளுடன் சென்று பி.ஆா். பாண்டியன் பாா்வையிட்டாா்.