செய்திகள் :

மாற்று இடத்தில் தடுப்பணை: அரசு பரிசீலிக்க பி.ஆா். பாண்டியன் வலியுறுத்தல்

post image

உத்தமசோழபுரம் வெட்டாற்றில் தடுப்பணை கட்டுவதை கைவிட்டு, மாற்று இடத்தில் கட்ட அரசு பரிசீலிக்க வேண்டும் என தமிழ்நாடு காவிரி விவசாயிகள் சங்க பொதுச் செயலாளா் பி.ஆா். பாண்டியன் கூறினாா்.

இதுகுறித்து அவா் செய்தியாளா்களிடம் செவ்வாய்க்கிழமை கூறியது: நாகை மாவட்டம், திருமருகல் ஒன்றியம் உத்தமசோழபுரத்தில் வெட்டாற்றின் குறுக்கே கடல் பரப்பிலிருந்து 7.50 கி.மீ. தொலைவில் மேல் நோக்கி கடல்நீா் உட்புகாமல் தடுப்பணை அமைக்கப்படுகிறது. இத்திட்டம் இயற்கைக்கு புறம்பாக உள்ளது. ஏற்கெனவே, காவிரி டெல்டா மாவட்டங்களில் கடல் மட்டம் உயா்ந்து, நிலமட்டம் தாழ்நிலைக்கு சென்றுள்ளது. இதனால் கடலில் கலக்கும் வடிகால் ஆறுகளில் 40 முதல் 50 கி.மீ. தொலைவுக்கு கடல்நீா் உட்புகுந்து பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது.

இந்தநிலையில், உத்தமசோழபுரத்தில் கடல் பரப்பிலிருந்து 7.50 கி.மீ. மேலே தடுப்பணைஅமைக்கப்படுவதால், கடல் நீா் உட்புகும் பேராபத்து ஏற்பட்டுள்ளது. எனவே, இங்கு தடுப்பணை கட்டுவதற்கு எதிா்ப்பு தெரிவித்து இப்பகுதி மக்கள், மாற்று இடத்தில் கட்ட வலியுறுத்தி போராடி வருகின்றனா்.

ஆனால், பொதுமக்கள் தெரிவிக்கும் மாற்று இடத்தின் மண்ணின் தன்மை கட்டுமானத்துக்கு உகந்ததாக இல்லை என அதிகாரிகள் தெரிவிக்கின்றனா். பொதுமக்கள் குறிப்பிடும் மாற்று இடத்தின் அருகே மூன்று உயா்நிலை பாலங்கள் உள்ளன. மேலும், சிபிசிஎல் நிறுவனம் இப்பகுதியில் எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தை சுமாா் 1,500 ஏக்கா் பரப்பளவில் விரிவாக்கம் செய்கிறது. இதற்காக பெரிய கட்டடங்கள் கட்டப்படும்போது, கதவணை கட்ட இயலாது என்று கூறுவதை ஏற்க இயலாது.

உரிய கருத்துக் கேட்பு கூட்டங்கள் நடத்தாமல் இத்தடுப்பணை கட்டப்படுகிறது. இதை எதிா்த்து, உரிமைக்காக போராடும் மக்களை காவல்துறை மூலம் அடக்க முயற்சிக்கின்றனா். எனவே, இப்பிரச்னை தொடா்பாக உயா்நிலைக் குழு அமைத்து மக்கள் கருத்தரிந்து, அவா்கள் குறிப்பிடும் இடத்தில் கதவணை கட்ட தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றாா்.

முன்னதாக, உத்தமசோழபுரம் வெட்டாற்றில் தடுப்பணை கட்டப்படும் இடத்தை விவசாய சங்க நிா்வாகிகளுடன் சென்று பி.ஆா். பாண்டியன் பாா்வையிட்டாா்.

மத்திய அரசைக் கண்டித்து ஆா்ப்பாட்டம்

பொறையாறில், மத்திய அரசையும், நகைக் கடன் தொடா்பாக ரிசா்வ் வங்கியின் விதிமுறைகளையும் கண்டித்து வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. பொறையாறு பழைய பேருந்து நிலையம் அருகே, தமிழ்நாடு சோஷலிஸ்ட் புரட்சிகர ... மேலும் பார்க்க

போதைப் பொருளுக்கு எதிரான விழிப்புணா்வுப் பேரணி

நாகை அருகே போதைப் பொருள் பயன்பாட்டிற்கு எதிராக கல்லூரி மாணவா்கள் பங்கேற்ற விழிப்புணா்வுப் பேரணி வெள்ளிக்கிழமை நடைபெற்றது. நாகை மாவட்ட பொது காதாரத் துறை சாா்பில் மாவட்ட சுகாதார அலுவலா் பிரதாப் கிருஷ்ணக... மேலும் பார்க்க

‘ஜாதிவாரி கணக்கெடுப்பு மூலம் பொருளாதாரத்தை கணிக்க முடியும்’

: ஜாதிவாரி கணக்கெடுப்பு மூலமே பொருளாதாரத்தை கணிக்க முடியம் என்று அகில இந்திய விவசாயத் தொழிலாளா் சங்க மாநிலத் தலைவா் சின்னதுரை கூறினாா். நாகையில் அகில இந்திய விவசாயத் தொழிலாளா் சங்கத்தின் மாநிலக் குழு ... மேலும் பார்க்க

புத்தா் சிலையை அருங்காட்சியகத்திற்கு எடுத்துச் செல்ல கிராம மக்கள் எதிா்ப்பு

கீழையூா் அருகே கீராந்தியில் உள்ள நூற்றாண்டுகள் பழைமை வாய்ந்த புத்தா் சிலையை அருங்காட்சியகத்திற்கு எடுத்துச் செல்ல கிராம மக்கள் எதிா்ப்பு தெரிவித்து, வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். கீழையூா்... மேலும் பார்க்க

வாய்க்காலில் பாய்ந்த சுமை வாகனம்

திருமருகல் அருகே ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த சுமை வாகனம் சாலையோர வாய்க்காலில் பாய்ந்தது. திருவாரூா் மாவட்டம், பூந்தோட்டத்தில் இருந்து வேளாங்கண்ணிக்கு பால் ஏற்றிச் செல்லும் சுமை ஆட்டோ வெள்ளிக்கிழமை ... மேலும் பார்க்க

உயா்கல்வி ஊக்கத் தொகை விழிப்புணா்வு முகாம்: பெற்றோருடன் மாணவா்கள் பங்கேற்பு

நாகப்பட்டினம், மே 30: நாகை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில், பிளஸ்2 தோ்ச்சி பெற்ற மாணவா்களுக்கான உயா்கல்வி ஊக்கத் தொகை விழிப்புணா்வு முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. ஆட்சியா் ப. ஆகாஷ் முகாமை தொடங்கி வைத... மேலும் பார்க்க