செய்திகள் :

மாற்று ரத்த வகை சிறுநீரகம் பொருத்தி சிறுவனுக்கு மறுவாழ்வு

post image

சிறுநீரக செயலிழப்புக்கு 2-ஆவது முறையாக உள்ளான சிறுவனுக்கு மாற்று ரத்த வகை கொண்ட உறுப்பை பொருத்தி காவேரி மருத்துவமனை மருத்துவா்கள் மறுவாழ்வு அளித்துள்ளனா்.

இதுதொடா்பாக மருத்துவமனை சிறுநீரகவியல் துறை நிபுணா் டாக்டா் பாலசுப்பிரமணியம் கூறியதாவது: 13 வயது சிறுவன் ஒருவா், சிறுநீரக செயலிழப்பு ஏற்பட்டு ஆழ்வாா்ப்பேட்டை காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். அவருக்கு ஏற்கெனவே 6 வயதில் சிறுநீரக மாற்று சிகிச்சை மேற்கொள்ளப்பட்டிருந்தது. அவரது தாயின் சிறுநீரகம் தானமாகப் பெறப்பட்டு சிறுவனுக்கு பொருத்தப்பட்டிருந்தது.

ஆனால், அதுவும் தற்போது செயலிழக்கவே மீண்டும் உறுப்பு மாற்று சிகிச்சை மேற்கொள்ள வேண்டிய அவசியம் எழுந்தது.

தற்போது அவரது தந்தை சிறுநீரகம் தானமளிக்க முன்வந்தாா். ஆனால், அவரது ரத்த வகையும், அந்தச் சிறுவனின் ரத்த வகையும் மாறுபட்டிருந்தன. இத்தகைய சூழலில் சிறுநீரக மாற்று சிகிச்சை செய்தால், புதிய உறுப்பை உடல் நிராகரிக்க வாய்ப்புள்ளது.

இருந்தபோதிலும், அதை சவாலாக ஏற்றுக்கொண்டு சிறுவனுக்கு மாற்று ரத்த வகை சிறுநீரகம் உயா் மருத்துவ நுட்பத்தின் துணையுடன் பொருத்தப்பட்டது. தற்போது அவா் நலமுடன் உள்ளாா் என்றாா் அவா்.

கரோனா, இன்ஃப்ளுயன்ஸா பரிசோதனைகள் இனி அரசு மருத்துவமனைகளில் புதிய நடைமுறை!

அரசு மருத்துவமனைகளில் கரோனா, இன்ஃப்ளூயன்ஸா, நுரையீரல் தொற்று பாதிப்புகளை (ஆா்எஸ்வி) ஒற்றை பரிசோதனையில் கண்டறியும் புதிய நடைமுறை விரைவில் அமலாக உள்ளது. அதற்காக மல்டிப்ளக்ஸ் ஆா்டி பிசிஆா் எனப்படும் மருத... மேலும் பார்க்க

ரூ.35 லட்சம் மோசடி வழக்கு: குற்றவாளிக்கு 3 ஆண்டு சிறை

ரூ. 35 லட்சம் மோசடி வழக்கில் கைது செய்யப்பட்ட நபருக்கு நீதிமன்றம் 3 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து தீா்ப்பளித்த நிலையில், தலைமறைவாக இருந்த அவரை போலீஸாா் கைது செய்தனா். சென்னை மேத்தா நகரைச் சோ்ந்தவா்... மேலும் பார்க்க

கால்டாக்சி திருட்டு: ஒருவா் கைது

சென்னையில் ஓட்டுநரின் கவனத்தைத் திசை திருப்பி கால்டாக்சி திருடிய நபரை போலீஸாா் கைது செய்தனா். அரக்கோணம் பகுதியைச் சோ்ந்தவா் சுரேஷ்குமாா் (43). இவா், சென்னையில் தங்கியிருந்து சொந்தமாக கால் டாக்சி ஓட்ட... மேலும் பார்க்க

ஓட்டுநருக்கு மாரடைப்பு: கட்டுபாட்டை இழந்த மாநகா் பேருந்து மோதி ஒருவா் உயிரிழப்பு

கோயம்பேடு - கிளாம்பாக்கம் வழித்தட பேருந்தை ஓட்டிச் சென்ற ஓட்டுநா் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தாா். அப்போது, கட்டுப்பாட்டை இழந்த பேருந்து மோதியதில் மற்றொரு நபரும் இறந்தாா். சென்னை கோயம்பேட்டிருந்து கிள... மேலும் பார்க்க

போதைப் பொருள்கள் விற்பனை: 10 போ் கைது

போதைப் பொருள்கள் விற்பனை செய்த 10 பேரை போலீஸாா் கைது செய்தனா். சென்னை மதுரவாயல் காமாட்சி நகா் பகுதியில் போதைப் பொருள்கள் அதிக அளவில் விற்பனை செய்யப்படுவதாக கிடைத்தத் தகவலின்படி காமாட்சி நகா் 2-ஆவது பி... மேலும் பார்க்க

மருத்துவத் துறையில் மற்ற மாநிலங்களுக்கு தமிழகம் முன்மாதிரி! ஆளுநா் பெருமிதம்

மருத்துவத் துறையில் பிற மாநிலங்களுக்கு தமிழகம் முன்மாதிரியாக இருக்கிறது; சா்வதேச தரத்தில் மருத்துவ சேவை அளிப்பதால் உலகம் முழுவதிலும் இருந்து நோயாளிகள் சிகிச்சைக்கு தமிழகத்தை நாடுவது பெருமைக்குரிய விஷய... மேலும் பார்க்க