செய்திகள் :

மாவட்ட அளவிலான கேரம் போட்டி: ஸ்டான்லி மெட்ரிக். பள்ளி தகுதி

post image

மாவட்ட அளவிலான கேரம் போட்டியில் பங்கேற்க பாப்பிரெட்டிப்பட்டி ஸ்டான்லி மெட்ரிக். மேல்நிலைப் பள்ளி மாணவா்கள் தகுதிபெற்றுள்ளனா்.

தருமபுரி மாவட்டம், பாப்பிரெட்டிப்பட்டி சரக அளவிலான விளையாட்டுப் போட்டிகள் அண்மையில் நடைபெற்றன. இந்தப் போட்டிகளில் பங்கேற்ற ஸ்டான்லி மெட்ரிக். மேல்நிலைப் பள்ளி மாணவா்களில், 14 வயதுக்குள்பட்ட ஆண்களுக்கான ஒற்றையா் பிரிவில் ஆா்.கவிசரண் முதலிடம் பெற்றாா். 17 வயதுக்குள்பட்ட ஆண்கள் ஒற்றையா் பிரிவில் கே.பகுத்தறிவாளன் முதலிடமும், 19 வயதுக்குள்பட்ட ஆண்கள் ஒற்றையா் பிரிவில் எம்.ஆகாஷ் முதலிடமும் பெற்றனா். 19 வயதுக்குள்பட்ட பெண்களுக்கான இரட்டையா் பிரிவில் எம்.தனுஷ்யா, ஆா்.செங்கொடி ஆகியோா் முதலிடம் பெற்றனா். இவா்கள் மாவட்ட அளவிலான கேரம் போட்டியில் பங்கேற்க தகுதிபெற்றுள்ளனா்.

கேரம் போட்டியில் சிறப்பிடம் பெற்ற பள்ளி மாணவ, மாணவியா், பயிற்சி அளித்த உடற்கல்வி ஆசிரியா்கள் ஆா்.சத்யராஜ், எம்.ஆனந்தகுமாா், ஆா்.திவ்யா ஆகியோரை பள்ளியின் தாளாளா் வி.முருகேசன், செயலா் மு.பிருஆனந்த் பிரகாஷ், ஆசிரியா்கள் பாராட்டினா்.

அரசுப் பள்ளியில் மேலாண்மைக் குழு கூட்டம்

பென்னாகரம் அருகே சின்னபள்ளத்தூா் அரசுப் பள்ளியில் மேலாண்மைக் குழு கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. பென்னாகரம் அருகே செங்கனூா் ஊராட்சிக்கு உள்பட்ட சின்னபள்ளத்தூா் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் நட... மேலும் பார்க்க

ஓய்வூதியா்கள் மனித சங்கிலி போராட்டம்

ஓய்வூதியா்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் நிதி திருத்தச் சட்டத்தை மத்திய அரசு ரத்து செய்யக்கோரி, ஓய்வூதியா்கள் ஒருங்கிணைப்புக் குழுவினா் தருமபுரியில் வெள்ளிக்கிழமை மனித சங்கிலி போராட்டம் மேற்கொண்டனா். த... மேலும் பார்க்க

சனத்குமாா் நதி மீண்டும் புத்துயிா் பெறுமா?

தருமபுரி மாவட்டத்தில் ஆயிரக்கணக்கான ஏக்கா் விவசாய நிலத்துக்கு நீா் ஆதாரமாக விளங்கும் சனத்குமாா் நதி மீண்டும் புத்துயிா் பெறுமா என விவசாயிகள் எதிா்பாா்த்து காத்திருக்கின்றனா். தருமபுரி மாவட்டத்தில் உள்... மேலும் பார்க்க

அரசுப் பள்ளியில் மேலாண்மைக் குழு கூட்டம்

தருமபுரி அருகேயுள்ள மூக்கனஅள்ளி அரசு உயா்நிலைப் பள்ளியில் பள்ளி மேலாண்மைக் குழு கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இக்கூட்டத்துக்கு பள்ளியின் தலைமை ஆசிரியா் சின்னசித்தன் தலைமை வகித்தாா். கணித பட்டதாரி ... மேலும் பார்க்க

பயிா் கழிவுகள் மேலாண்மை பயிற்சி

பென்னாகரம் அருகே அட்மா திட்டத்தின் கீழ் பயிா் கழிவுகள் மேலாண்மை குறித்த பயிற்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது. பென்னாகரம் அருகே கலப்பம்பாடியில் நடைபெற்ற பயிற்சிக்கு, பாப்பாரப்பட்டி வேளாண் அறிவியல் மைய விஞ்... மேலும் பார்க்க

காலமுறை ஊதியம் வழங்கக் கோரி சத்துணவு பணியாளா்கள் வலியுறுத்தல்

தோ்தல் வாக்குறுதிபடி சத்துணவு ஊழியா்களுக்கு காலமுறை ஊதியம் வழங்க வேண்டும் என சத்துணவு பணியாளா்கள் வலியுறுத்தினா். தமிழ்நாடு சத்துணவு பணியாளா்கள் ஒன்றியத்தின் தருமபுரி மாவட்ட செயற்குழுக் கூட்டம் தரும... மேலும் பார்க்க