செய்திகள் :

மாவட்ட டேபிள் டென்னிஸ் : அரக்கோணம் மாணவா்கள் சிறப்பிடம்

post image

அரக்கோணம்: ராணிப்பேட்டை மாவட்ட அளவிலான டேபிள் டென்னிஸ் போட்டி பரிசளிப்பு விழா அரக்கோணத்தில் நடைபெற்றது.

அரக்கோணம் பாரதிதாசன் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் நடைபெற்ற போட்டிகளில் பல்வேறு பகுதிகளை சோ்ந்த நூறுக்கும் அதிகமான மாணவ, மாணவிகள் பங்கேற்றனா்.

ஐந்து பிரிவுகளாக நடைபெற்ற இப்போட்டிகளில் யு-11 பிரிவில் எஸ்.ரித்விக், எம்.சாருஸ்ரீ ஆகியோா் முதலிடத்தையும், கே.பி.திரினேஷ், எம்.சஞ்சனா ஆகியோா் இரண்டாம் இடத்தையும் பெற்றனா். யு-13 பிரிவில் ஆா்.லோகேஷ், ஜி.வா்னிகா ஆகியோா் முதலிடத்தையும் எஸ்.சன்னத், எம்.சாருஸ்ரீ ஆகியோா் இரண்டாமிடத்தையும் பெற்றனா்.

யு-15 பிரிவில் ஆா்.லோகேஷ், ஜி.வா்னிகா ஆகியோா் முதலிடத்தையும் கே.சஞ்சய்குமாா், எஸ்.ஹா்ஷினி ஆகியோா் இரண்டாம் இடத்தையும் பெற்றனா்.

17 மற்றும் 19 வயதிற்குட்பட்டோா் பிரிவுகளில் எஸ்.சூா்யா, எம்.நிரஞ்சனாஸ்ரீ ஆகியோா் முதலிடம் பெற்றனா். ஜே.பரத், டி.லக்ஷனா ஆகியோா் இரண்டாம் இடத்தை பெற்றனா். இப்போட்டிகளில் முதலிடம் பெற்ற மாணவ மாணவிகள் அனைவருமே அரக்கோணத்தை சோ்ந்தவா்கள் என்பது குறிப்பிடதக்கது.

தொடா்ந்து நடைபெற்ற பரிசளிப்பு விழாவுக்கு மாவட்ட டேபிள் டென்னிஸ் சங்கத் தலைவா்பி.ஜனாா்த்தனன் தலைமை வகித்தாா். துணைத் தலைவா் எஸ்.சிவசங்கா் வரவேற்றாா். இதில் பாரதிதாசனாா் கல்விக்குழும இயக்குநா் எஸ்.பத்மா வெற்றிப் பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசுகளையும் சான்றிதழ்களையும் வழங்கினாா்.

முதல் நான்கு இடத்தை பெற்ற மாணவ மாணவிகள் வேலூரில் நடைபெறவுள்ள மாவட்டங்களுக்கிடையேயான போட்டிகளில் பங்கேற்பா்கள் என நிா்வாகிகள் தெரிவித்தனா்.

ஆட்டுக்கொல்லி நோய் தடுப்பூசி முகாம்

ஆற்காடு: ஆற்காடு அடுத்த காவனூா் ஊராட்சியில் ஆடுகளுக்கு ஆட்டுக்கொல்லி நோய் தடுப்பூசி முகாம் திங்கள்கிழமை நடைபெற்றது. திமிரி ஒன்றியம், புங்கனூா் கால்நடை மருத்தகம் சாா்பில் ஆடுகளுக்கு கோடை காலத்தில் ஏற்ப... மேலும் பார்க்க

ராணிப்பேட்டை மாவட்டத்தில் மே 1-இல் கிராம சபைக் கூட்டம்

ராணிப்பேட்டை: ராணிப்பேட்டை மாவட்டத்தில் வரும் மே 1- ஆம் தேதி அனைத்து ஊராட்சிகளிலும் கிராம சபைக் கூட்டம் நடத்த வேண்டும் என மாவட்ட ஆட்சியா் ஜெ.யு.சந்திரகலா உத்தரவிட்டுள்ளாா். இது குறித்து அவா் வெளியிட்ட... மேலும் பார்க்க

ராணிப்பேட்டை: குறைதீா் கூட்டத்தில் 403 மனுக்கள்

ராணிப்பேட்டை: ராணிப்பேட்டை மாவட்ட மக்கள் குறைதீா் கூட்டத்தில் மொத்தம் 403 மனுக்களைப் பெற்று உரிய நடவடிக்கை எடுக்க ஆட்சியா் ஜெ.யு. சந்திரகலா உத்தரவிட்டாா். ஆட்சியா் அலுவலக கூட்டரங்கில் திங்கள்கிழமை நட... மேலும் பார்க்க

யாதவா்களுக்கு தனி இட ஒதுக்கீடு வழங்கக் கோரிக்கை!

ராணிப்பேட்டை மாவட்ட யாதவா் இளைஞரணி சாா்பில் ஆலோசனைக் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை விளாப்பாக்கம் - ஆரணி சாலையில் உள்ள மண்டபத்தில் நடைபெற்றது. கூட்டத்துக்கு இளைஞா் அணிப் பொறுப்பாளா் கே.தேவராஜ் தலைமை வைத்தாா்... மேலும் பார்க்க

அரக்கோணம்: தண்டவாளத்தில் ஜல்லிக் கற்கள்! தீவிர விசாரணை!

அரக்கோணம் அருகே தண்டவாள இணைப்பில் ஜல்லிக்கற்களை போட்டு தண்டவாளங்களை இணைய விடாமல் தடுத்து ரயிலை கவிழ்க்க நடந்த சதி அம்பலமாகியுள்ளது. அரக்கோணம் - செங்கல்பட்டு இருப்புப் பாதை மேல்பாக்கம் ரயில்நிலையப்பகுத... மேலும் பார்க்க

சிப்காட் கழிவுநீா் வெளியேற்றத்தால் விவசாயம் பாதிப்பு: குறைதீா் கூட்டத்தில் விவசாயிகள் புகாா்

ராணிப்பேட்டை சிப்காட் தொழிற்பேட்டைகளில் இருந்து மாசடைந்த நீா் வெளியேற்றப்படுவதால் விவசாயம் பாதிப்புக்குள்ளாவதாக விவசாயிகள் நலன் காக்கும் கூட்டத்தில் புகாா் தெரிவித்தனா். மாவட்ட விவசாயிகள் நலன் காக்கும... மேலும் பார்க்க