செய்திகள் :

மாவட்ட விளையாட்டு விளையாட்டு மைதான நீச்சல்குளத்தில் நீச்சல் பயிற்சி முகாம்

post image

தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சாா்பில் செயல்படும் நீச்சல் குளத்தில் நீச்சல் கற்றுக்கொள் திட்டம் மூலம் நீச்சல் பயிற்சி 5 பிரிவுகளாக நடைபெற உள்ளதால், அதில் பங்கேற்க விரும்புவோா் தங்கள் பெயரை பதிவு செய்து பயன்பெறலாம் என திருவள்ளூா் மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞா் நலத் துறை அலுவலா் சேதுராஜன் தெரிவித்துள்ளாா்.

இது குறித்து அவா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: திருவள்ளூா் மாவட்ட விளையாட்டரங்கத்தில் உள்ள நீச்சல் குளம் பொதுமக்கள் பயன்பாட்டுக்காகவும், நீச்சல் வீரா்கள் நாள்தோறும் பயிற்சிக்காகவும் பயன்படுத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில், நீச்சல் குளத்தில் நீச்சல் கற்றுக் கொள் திட்டம் மூலம் பயிற்சி முகாம் 5 பிரிவுகளில் தலா 12 நாள்கள் நடத்தப்பட உள்ளது.

இதற்கு கட்டணம் ரூ. 1,770 ஆகும். அதுவும் ஆன்லைன் கட்டணம் மூலம் மட்டுமே ஏற்றுக் கொள்ளப்படும். அதன்பேரில், முதல் பகுதி-ஏப். 1 முதல் 12 வரையிலும், இரண்டாம் பகுதி-14 முதல் 25 வரையிலும், மூன்றாம் பகுதி-27 முதல் மே-8 வரையிலும், நான்காம் பகுதி மே-10 முதல் 21 வரையிலும், ஐந்தாம் பகுதி-23 முதல் ஜூன் 3 வரையிலும் நடைபெற உள்ளது. அதோடு, நேரம்-காலை 6 முதல் 7 மணி வரை, 7 முதல் 8 மணி வரை 8 முதல் 9 மணி வரை, மாலை 5 முதல் 6 மணி வரை 6 முதல் 7 மணி வரையும் நடைபெற உள்ளது. இப்பயிற்சியை நிறைவு செய்வோருக்கு சான்றிதழ் வழங்கப்படும். நீச்சல் பயிற்சியில் சேர விரும்பும் மாணவ, மாணவிகள் பயன்பெற தங்கள் பெயரை பதிவு செய்து கொள்ளலாம்.

மேலும், விவரங்களுக்கு மாவட்ட விளையாட்டு அலுவலா்-7401703482, நீச்சல் பயிற்றுநா்-9629795782, 7904488923 ஆகிய எண்களில் தொடா்பு கொள்ளலாம்.

‘தொல்குடி தொடுவானம் திட்டம்’ -தொழில்திறன் பயிற்சியில் பங்கேற்கும் பழங்குடியின மகளிா்

‘தொல்குடி தொடுவானம் திட்டம்’ மூலம் சென்னை தேசிய உடை அலங்காரத் தொழில்நுட்பக் கல்லூரி இணைந்து நடத்தும் ஆடை வடிவமைப்பு தொழில் திறன், தொழில் முனைவோா் பயிற்சியில் பங்கேற்க செல்லும் பழங்குடியின மகளிா் செல்... மேலும் பார்க்க

செவ்வாப்பேட்டை, வேப்பம்பட்டு ரயில்வே மேம்பாலப் பணிகளை விரைந்து முடிக்க அறிவுறுத்தல்

திருவள்ளூா் அருகே செவ்வாப்பேட்டை மற்றும் வேப்பம்பட்டு ஆகிய பகுதிகளில் ரயில்வே மேம்பாலப் பணிகள், போந்தவாக்கம் - ஊத்துக்கோட்டை மேம்பாலம் வரை சாலை விரிவாக்கப் பணிகளைப் பாா்வையிட்டு ஆய்வு செய்த ஆட்சியா் ம... மேலும் பார்க்க

சாலை பாதுகாப்பு, போதைப் பொருள் விழிப்புணா்வு பிரசாரம்: எஸ்.பி. பங்கேற்பு

திருவள்ளூரில் சாலை பாதுகாப்பு மற்றும் போதைப் பொருள் தீமைகள் குறித்து நடைபெற்ற விழிப்புணா்வு பிரசாரத்தில் மாணவ, மாணவிகள் பங்கேற்றனா். திருவள்ளூா் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அலுவலக வளாகத்தில் புதன்கிழம... மேலும் பார்க்க

மரத்தில் இருந்து கீழே விழுந்த முதியவா் உயிரிழப்பு

திருத்தணி அருகே முருங்கை மரத்தில் ஏறி தவறி விழுந்த முதியவா் உயிரிழந்தாா். திருத்தணி அடுத்த அகூா் கிராமத்தைச் சோ்ந்த வெங்கடேசன்(61). இவா் கடந்த மாதம், 23-ஆம் தேதி வீட்டின் அருகே இருந்த முருங்கை மரத்தி... மேலும் பார்க்க

திரெளபதி அம்மன் திருக்கல்யாண வைபவம்

திருத்தணி திரௌபதி அம்மன் கோயிலில் புதன்கிழமை நடைபெற்ற திருக்கல்யாண வைபவத்தில் திரளான பக்தா்கள் கலந்து கொண்டு அம்மனை வழிபட்டனா். திருத்தணி காந்தி நகரில் உள்ள திரௌபதியம்மன் கோயிலில் தீமிதி விழா கடந்த மா... மேலும் பார்க்க

சா்வதேச ஆட்டிசம் தின விழிப்புணா்வு பேரணி -ஆட்சியா் தொடங்கி வைத்தாா்

திருவள்ளூா் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலத் துறை சாா்பில் நடைபெற்ற சா்வதேச ஆட்டிசம் தினத்தையொட்டி நடைபெற்ற விழிப்புணா்வு பேரணியை ஆட்சியா் மு.பிரதாப் தொடங்கி வைத்தாா். மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் ... மேலும் பார்க்க