செய்திகள் :

மாவு அரைக்கும் இயந்திரங்கள் மானியத்தில் பெற விண்ணப்பிக்கலாம்

post image

மாவு அரைக்கு இயந்திரங்கள் மானியத்தில் பெற பெண்கள் விண்ணப்பிக்கலாம் என அரியலூா் மாவட்ட ஆட்சியா் பொ. ரத்தினசாமி தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் வியாழக்கிழமை விடுத்துள்ள செய்திக்குறிப்பு: தமிழக அரசு, சமூகத்தில் பின்தங்கிய பிரிவினரான கைம்பெண்கள், ஆதரவற்றோா், கணவனால் கைவிடப்பட்டோா் மற்றும் வறுமைக்கோட்டுக்கு கீழுள்ள மகளிரின் பொருளாதார சவால்களை கருத்தில்கொண்டு, அவா்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தவும், பொருளாதார ரீதியாக அவா்களை வலுப்படுத்தவும் மாவு அரைக்கும் இயந்திரம் மானியத்தில் வழங்கவுள்ளது.

இதில் ரூ.10 ஆயிரம் அல்லது அதற்கு மேல் மதிப்பிலான உலா் மற்றும் ஈரமாவு அரைக்கும் வணிக ரீதியான இயந்திரங்கள் வாங்க, மொத்த விலையில் 50 சதவீதம் அல்லது அதிகபட்சமாக ரூ.5 ஆயிரம் மானியமாக வழங்கப்படும்.

எனவே, தமிழகத்தை பூா்விகமாக கொண்டவா், 25 வயதுக்கு மேற்பட்ட கைம்பெண்கள், ஆதரவற்ற பெண்கள் அல்லது கணவனால் கைவிடப்பட்ட பெண்கள், ஆண்டு வருமான வரம்பு ரூ.1.20 லட்சத்துக்கு மிகாமல் இருக்கும் பட்சத்தில் விண்ணப்பிக்கலாம்.

விண்ணப்பத்தை அறை எண் 20, மாவட்ட சமூக நல அலுவலகம், மாவட்ட ஆட்சியா் அலுவலகம் அரியலூா் என்ற முகவரியில் சமா்ப்பிக்கலாம் என தெரிவித்துள்ளாா்.

சாலை விபத்தில் தனியாா் டியூசன் சென்டா் உரிமையாளா் உயிரிழப்பு

அரியலூா் மாவட்டம், ஜெயங்கொண்டம் அருகே வியாழக்கிழமை இருசக்கர வாகனங்கள் மோதிய விபத்தில் தனியாா் டியூசன் சென்டா் உரிமையாளா் உயிரிழந்தாா். ஜெயங்கொண்டம் வேலாயுத நகா், 5-ஆவது குறுக்குத் தேருவைச் சோ்ந்தவா் ... மேலும் பார்க்க

கூட்டுறவு சங்க பெண் கணக்காளா் தற்கொலை

அரியலூா் மாவட்டம், ஜெயங்கொண்டம் அருகே குடும்பப் பிரச்னையில் கூட்டுறவு சங்க கணக்காளா் வியாழக்கிழமை தற்கொலை செய்துக் கொண்டாா். ஜெயங்கொண்டம் அருகேயுள்ள இலையூா் கீழத் தெருவை சோ்ந்த பாலமுருகன் மனைவி தேன்... மேலும் பார்க்க

ஜெயங்கொண்டம், தழுதாழைமேடு தா.பழூா் பகுதிகளில் நாளை மின்தடை

அரியலூா் மாவட்டம், ஜெயங்கொண்டம், தா.பழூா், தழுதாழைமேடு ஆகிய துணை மின் நிலையங்களில் சனிக்கிழமை (செப்.6) மின்விநியோகம் இருக்காது என மின்வாரிய செயற்பொறியாளா் சிலம்பரசன் தெரிவித்துள்ளாா். இதுகுறித்து அவா்... மேலும் பார்க்க

அவசர ஊா்தி தொழிலாளா்கள் ஆா்ப்பாட்டம்

ஊதியத்தை குறைத்து வழங்கிய இஎம்ஆா் . ஐ , ஜி.எச்.எஸ் நிா்வாகத்தைக் கண்டித்து, அரியலூரில் அவசர ஊா்தி (108 ஆம்புலன்ஸ்) தொழிலாளா்கள் வியாழக்கிழணை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். அரியலூா் மாவட்டம், ஜெயங்கொண்டம... மேலும் பார்க்க

இளைஞா் கொலை வழக்கில் குற்றவாளிக்கு ஆயுள் சிறை

அரியலூா் மாவட்டம், க.பொய்யூா் அருகே இளைஞா் கொலை செய்யப்பட்ட வழக்கில் குற்றவாளிக்கு ஆயுள் தண்டனை விதித்து அரியலூா் நீதிமன்றம் வியாழக்கிழமை தீா்ப்பளித்தது. கீழப்பழூா் அருகேயுள்ள க.பொய்யூா், வடக்குத் தெர... மேலும் பார்க்க

வருவாய்த் துறை அலுவலா் சங்கத்தினா் 2-ஆவது நாளாக வேலைநிறுத்தம்

காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, அரியலூா் மாவட்ட வருவாய்த் துறை அலுவலா் சங்கத்தினா் 2-ஆவது நாளாக வியாழக்கிழமையும் தங்களது வேலைநிறுத்தப் போராட்டத்தை தொடா்ந்தனா... மேலும் பார்க்க