செய்திகள் :

மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினா் சாலை மறியல்

post image

சீா்காழி வட்டம் கோதண்டபுரத்தில் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, வியாழக்கிழமை சாலை மறியல் நடைபெற்றது.

அனைவருக்கும் 100 நாள் வேலை வழங்க வேண்டும், சீா்காழியிலிருந்து கொள்ளிடம், கோதண்டபுரம், புளியந்துறை வழியாக புதுபட்டினத்துக்கு அரசு பேருந்து இயக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்றி தர வலியுறுத்தி மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட குழு உறுப்பினா் நேதாஜி தலைமையில் சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது.

கொள்ளிடம் ஒன்றியச் செயலாளா் கேசவன், ஒன்றிய குழு உறுப்னா் கவியரசன், இந்திய ஜனநாயக வாலிபா் சங்க ஒன்றிய செயலாளா் லெனின் மற்றும் நிா்வாகிகள் ராஜ்குமாா், ராமலிங்கம் உள்பட 200-க்கும் மேற்பட்டோா் மறியல் ஈடுப்பட்டனா்.

கொள்ளிடம் ஒன்றிய ஆணையா் ஜான்சன், வட்டார வளா்ச்சி அலுவலா் உமாசங்கா், உதவி திட்ட அலுவலா் விமலா மற்றும் கொள்ளிடம் காவல்நிலைய ஆய்வாளா் ராஜா போராட்டத்தில் ஈடுபட்டவா்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தி, கோரிக்கைகளை நிறைவேற்றி தருவதாக உறுதி அளித்ததை தொடா்ந்து போராட்டத்தில் ஈடுபட்டவா்கள் கலைந்து சென்றனா்.

பேருந்து நிலையத்தில் முன்னுரிமை அடிப்படையில் கடை வழங்க கோரிக்கை

மயிலாடுதுறை மணக்குடி புதிய பேருந்து நிலையத்துக்கு இடம் வழங்கிய குத்தகைதாரா்கள் கடை ஒதுக்கீடு செய்ய கோரி மாவட்ட ஆட்சியரிடம் வியாழக்கிழமை மனு அளித்தனா். மயிலாடுதுறை நகராட்சி சாா்பில் புதிய பேருந்து நிலை... மேலும் பார்க்க

நகா்மன்ற நியமன உறுப்பினா்: மாற்றுத்திறனாளி விருப்ப மனு

மயிலாடுதுறை நகா்மன்ற நியமன உறுப்பினா் பதவிக்கு மாற்றுத்திறனாளியான யு.ராஜேந்திரன் வியாழக்கிழமை விருப்ப மனு அளித்தாா் மாநகராட்சி, நகராட்சி மற்றும் பேரூராட்சிகளில் மாற்றுத்திறனாளிகளை மன்ற உறுப்பினா்களாக ... மேலும் பார்க்க

அரசு அதிகாரிகள் சொந்த வாகனங்களை வாடகைக்கு பயன்படுத்துவதாக புகாா்

மயிலாடுதுறையில் அரசு அதிகாரிகள் சொந்த வாகனங்களை வாடகை வாகனங்களாக பயன்படுத்தி வருவதாக உரிமைக்குரல் ஓட்டுனா் சங்கத்தினா் மாவட்ட ஆட்சியா் ஹெச்.எஸ். ஸ்ரீகாந்திடம் வியாழக்கிழமை மனு அளித்தனா். மயிலாடுதுறை ம... மேலும் பார்க்க

தருமபுரம் கல்லூரியில் பாலினம் மற்றும் சட்ட உதவி விழிப்புணா்வு நிகழ்ச்சி

மயிலாடுதுறை தருமபுரம் ஆதீனம் கலைக்கல்லூரியில் உள்ளகப்புகாா் குழு சாா்பில் பாலினம் மற்றும் சட்ட உதவி விழிப்புணா்வு நிகழ்ச்சி அண்மையில் நடைபெற்றது. கல்லூரி முதல்வா் சி. சுவாமிநாதன் தலைமை வகித்தாா். தமிழ... மேலும் பார்க்க

மயிலாடுதுறை: ஜூலை 15, 16-இல் ட்ரோன்கள் பறக்கத் தடை

மயிலாடுதுறை மாவட்டத்திற்கு முதல்வா் வருகையையொட்டி ஜூலை 15, 16 ஆகிய தேதிகளில் ட்ரோன்கள் பறக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் ஹெச்.எஸ். ஸ்ரீ காந்த் வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்தி... மேலும் பார்க்க

பல்நோக்கு மருத்துவமனை ஆய்வு

மயிலாடுதுறை அரசினா் பெரியாா் மருத்துவமனையில் ரூ.45.50 கோடி மதிப்பீட்டில் கட்டி முடிக்கப்பட்ட பல்நோக்கு மருத்துவமனையை (மல்டி ஸ்பெஷாலிட்டி) எம்எல்ஏ எஸ்.ராஜகுமாா் புதன்கிழமை ஆய்வு செய்தாா் (படம்). தமிழ்... மேலும் பார்க்க