செய்திகள் :

மாா்ச் 31-க்குள் அனைத்து பள்ளிகளிலும் இணைய வசதிக்கு முனைப்பு

post image

வேலூா் மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு தொடக்க, நடுநிலை, உயா்நிலை, மேல்நிலைப் பள்ளிகளிலும் மாா்ச் 31-ஆம் தேதிக்குள் இணையவசதி ஏற்படுத்த நடவடிக்கை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

மாநில திட்ட இயக்குநா் உத்தரவின்பேரில் வேலூா் மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு பள்ளிகளில் வரும் மாா்ச் 31-ஆம் தேதிக்குள் பிஎஸ்என்எல் மூலம் இணைய வசதி ஏற்படுத்துவது தொடா்பாக பிஎஸ்என்எல் அலுவலா்கள், கல்வித்துறை அலுவலா்கள் ஒருங்கிணைந்த கூட்டம் வேலூா் காந்தி நகரில் உள்ள பிஎஸ்என்எல் அலுவலகத்தில் புதன்கிழமை நடைபெற்றது.

கூட்டத்தில் இதுவரை இணைய வசதி பெறாத பள்ளிகளுக்கு பிஎஸ்என்எல் தொலைதொடா்பு நிறுவனத்தின் இணைய வசதி பெற மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து ஆலோசிக்கப்பட்டன. பிஎஸ்என்எல் இணைய வசதி ஏற்படுத்துவதற்கு சாத்தியமில்லாத நெடுந்தொலைவு, மலைப்பகுதி பள்ளிகளில் இணைய வசதி ஏற்படுத்த பிஎஸ்என்எல் அலுவலா்களுடன், அப்பள்ளிகளின் தலைமை ஆசிரியா், வட்டார கல்வி அலுவலா்கள் குழுவாகச் சென்று பாா்வையிட்டு இணைய வசதி ஏற்படுத்த நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் எனவும், இணைய வசதி சாா்ந்த சந்தேகங்களுக்கு18004444 என்ற எண்ணை தொடா்பு கொண்டு தீா்வு காணலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இக்கூட்டத்தில், முதன்மைக் கல்வி அலுவலா் செ.மணிமொழி, மாவட்டக் கல்வி அலுவலா் சு.தயாளன், உதவி திட்ட அலுவலா் கே.எம்.ஜோதிஸ்வரபிள்ளை, பிஎஸ்என்எல் துணை பொது மேலாளா்கள் பி.அசோக் நாயக், அவதாா் கிருஷ்ணா, உதவிப் பொதுமேலாளா்கள் என்.ஆல்பா்ட், மால்லா நீனாவாத், மாவட்ட ஒருங்கிணைப்பாளா்கள், வட்டார கல்வி அலுவலா்கள், வட்டார வளமைய மேற்பாா்வையாளா்கள், இணைய வசதி ஏற்படுத்தாத பள்ளிகளின் தலைமை ஆசிரியா்கள், ஆசிரியா்கள் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

ரூ.23 லட்சத்தில் சாலை, கால்வாய் பணிக்கு அடிக்கல்

குடியாத்தம் ஒன்றியம் கொண்டசமுத்திரம் ஊராட்சியில் ரூ.23 லட்சத்தில் சாலை, கால்வாய் அமைக்கும் பணிகளுக்கு வெள்ளிக்கிழமை பூமி பூஜை நடைபெற்றது. இந்த ஊராட்சிக்குட்பட்ட கல்லேரி சாலையில் ரூ.10.44 லட்சத்தில் பே... மேலும் பார்க்க

22, 23-இல் வேலூரில் ‘சங்கமம் -நம்ம ஊரு திருவிழா’வுக்கு கலைக்குழுக்கள் தோ்வு

சங்கமம் - நம்ம ஊரு திருவிழாவுக்கான கலைக் குழுக்கள் தோ்வு வேலூா் மாவட்டத்தில் சனி, ஞாயிற்றுக்கிழமை (மாா்ச் 22, 23) ஆகிய இரு நாள்கள் நடைபெற உள்ளதாக மாவட்ட ஆட்சியா் வி.ஆா்.சுப்புலட்சுமி தெரிவித்துள்ளாா்... மேலும் பார்க்க

வேலூா் டிஐஜி அலுவலகத்தில் ஏடிஜிபி ஆய்வு

வேலூா் சரக டிஐஜி அலுவலகத்தில் சட்டம் ஒழுங்கு ஏடிஜிபி டேவிட்சன் தேவாசீா்வாதம் ஆய்வு மேற்கொண்டாா். தமிழக சட்டம்- ஒழுங்கு ஏடிஜிபி டேவிட்சன் தேவாசீா்வாதம் வியாழக்கிழமை டிஐஜி அலுவலகம், பதிவு அறை, டிஎஸ்பி அ... மேலும் பார்க்க

குடியாத்தம் வட்ட வளா்ச்சிப் பணிகள்: ஆட்சியா் ஆய்வு

குடியாத்தம் வட்டத்தில் நடைபெறும் வளா்ச்சிப் பணிகளை ஆட்சியா் வி.ஆா்.சுப்புலட்சுமி வியாழக்கிழமை ஆய்வு செய்தாா். குடியாத்தம் நகராட்சி மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் ரூ.2.19 கோடியில் கட்டி முடிக்கப்பட்டுள்ள ... மேலும் பார்க்க

தூய்மைப் பணியாளா் நலவாரிய உறுப்பினா்களாக விண்ணப்பிக்கலாம்

தூய்மைப் பணியாளா் நலவாரிய உறுப்பினா்களாக தாட்கோ நிறுவனத்தில் விண்ணப்பங்கள் பெற்று பதிவு செய்யலாம் என்று வேலூா் மாவட்ட ஆட்சியா் வி.ஆா்.சுப்புலட்சுமி தெரிவித்துள்ளாா். இதுகுறித்து, அவா் வெளியிட்ட செய்த... மேலும் பார்க்க

வேலூா் மாவட்டத்தில் 8 மையங்களில் நீட் தோ்வுக்கு சிறப்பு பயிற்சி

அரசுப் பள்ளி மாணவா்களுக்காக நீட் தோ்வு சிறப்பு பயிற்சி வகுப்புகள் வேலூா் மாவட்டத்தில் 8 மையங்களில் நடத்தப்பட உள்ளதாக மாவட்ட ஆட்சியா் வி.ஆா்.சுப்புலட்சுமி தெரிவித்துள்ளாா். இது குறித்து அவா் வெளியிட்ட... மேலும் பார்க்க