மாா்த்தாண்டத்தில் தலைக்கவச விழிப்புணா்வு நிகழ்ச்சி
மாா்த்தாண்டத்தில் சந்திப்பில் போக்குவரத்து போலீஸாா், தேசிய மாணவா் படை (என்சிசி) சாா்பில், தலைக்கவசம் குறித்த விழிப்புணா்வு நிகழ்ச்சி நடைபெற்றது.
கன்னியாகுமரி மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ஸ்டாலின் உத்தரவுப்படி, மாா்த்தாண்டம் சரக துணைக் கண்காணிப்பாளா் நல்லசிவம் மேற்பாா்வையில், மாா்த்தாண்டம் போக்குவரத்து காவல் உதவி ஆய்வாளா் முன்னிலையில் அப்பகுதி கல்லூரியின் என்சிசி மாணவா்கள் இணைந்து நிகழ்ச்சியை நடத்தினா். தலைக்கவசம் அணிவதன் அவசியம் குறித்து வாகன ஓட்டிகள், பொதுமக்களிடம் துண்டுப் பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டன.