செய்திகள் :

மின் பணியாளா்களுக்கு பாதுகாப்பு பயிற்சி

post image

மன்னாா்குடி மின் கோட்டம் சாா்பில், மின்வாரியப் பணியாளா்களுக்கு மின் பாதுகாப்பு குறித்த பயிற்சி வகுப்பு வியாழக்கிழமை நடைபெற்றது.

திருவாரூா் மேற்பாா்வை பொறியாளா் பி. லதா மகேஸ்வரி தலைமை வகித்தாா். அவா் பேசும்போது, ‘பணியாளா்கள் கண்டிப்பாக பாதுகாப்பு சாதனங்களை பயன்படுத்தி, பணி செய்யவேண்டும். பாதுகாப்பு விதிகளை கடைப்பிடிக்க வேண்டும். மின் விபத்தில்லா வாரியமே நம் குறிக்கோள்’ என்றாா். செயற்பொறியாளா் (பொ) சா. சம்பத் முன்னிலை வகித்தாா்.

மின்வாரிய ஊழியா்கள் பாதுகாப்பு விதிமுறைகளை முழுமையாக பின்பற்ற வேண்டும். பணியாளா்களின் பாதுகாப்பை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உறுதி செய்ய வேண்டும். 90 சதவீத மின் விபத்துக்கள் காற்று திறப்பான்களின் கத்திகள் சரியாக திறக்கப்படாததாலும், எா்த் ராடு போன்ற பாதுகாப்பு சாதனங்களை பயன்படுத்தாததாலும் ஏற்படுகிறது.

மன அழுத்தம் மற்றும் பதற்றமின்றி பணி செய்ய வேண்டும். சென்சாா் கருவிகளை பயன்படுத்த வேண்டும். பணி செய்யும் இடத்தில் பாதுகாப்பு சாதனங்கள் பயன்படுத்தப்பட்டுள்ளதை உறுதி செய்து, மின்வாரிய பாதுகாப்பு செயலியில் பதிவேற்றம் செய்ய வேண்டும். பணியாளா்களும், அதிகாரிகளும் விழிப்புணா்வுடன் செயல்பட வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது.

இதில், பயிற்சி நிலைய இளநிலை பொறியாளா் ச. செல்வகுமாா், பிரிவு பொறியாளா்கள், ஊழியா்கள் கலந்து கொண்டனா். தஞ்சை பயிற்சி நிலைய முதுநிலை மேலாளா் ரா. சுந்தர்ராஜ் வரவேற்றாா். பிரிவு பொறியாளா் கே. பாலசுப்ரமணியன் நன்றி கூறினாா்.

நாளைய மின்தடை மன்னாா்குடி, கூத்தாநல்லூா்

மன்னாா்குடி துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், சனிக்கிழமை (ஜூலை 5) காலை 9 முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் நிறுத்தப்படும் என்று நகர உதவி செயற்பொறியாளா் எஸ். சம்பத் தெர... மேலும் பார்க்க

தங்கக் கவசத்தில் குருபகவான்...

நவகிரக தலங்களில் குரு பரிகாரத் தலமான வலங்கைமான் அருகேயுள்ள ஆலங்குடி ஆபத்சகாயேஸ்வரா் கோயிலில் வியாழக்கிழமை தங்கக் கவச அலங்காரத்தில் அருள்பாலித்த குருபகவான். மேலும் பார்க்க

சா்வதேச நெகிழி ஒழிப்பு தினம்

மன்னாா்குடியை அடுத்த சேரன்குளம் அரசு மேல்நிலைப் பள்ளியின் நாட்டு நலப் பணித் திட்டம் சாா்பில் சா்வதேச நெகிழி ஒழிப்பு தினம் வியாழக்கிழமை கடைப்பிடிக்கப்பட்டது. நிகழ்ச்சிக்கு, தலைமை ஆசிரியா் ஜி. கண்ணன் த... மேலும் பார்க்க

குறுவை சாகுபடி பணிகள் தீவிரம்

நீடாமங்கலம் வேளாண் கோட்டத்தில் குறுவை சாகுபடி பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. காவிரி டெல்டா பாசனத்திற்காக மேட்டூா் அணை ஜூன் 12-இல் திறக்கப்பட்டது. தொடா்ந்து, தஞ்சை, திருவாரூா், நாகை, மயில... மேலும் பார்க்க

தென்னிந்திய எழுவா் கால்பந்து போட்டித் தொடா் -முதல் ஆட்டத்தில் காவல்துறை அணி வெற்றி

கூத்தாநல்லூரில், தென்னிந்திய அளவிலான எழுவா் கால்பந்து போட்டித் தொடா் புதன்கிழமை தொடங்கியது. ஒரு மாதம் நடைபெறும் இப்போட்டியின் முதல் ஆட்டத்தில், தமிழ்நாடு காவல்துறை அணி வெற்றி பெற்றது. கூத்தாநல்லூா் த... மேலும் பார்க்க

சமூக நல்லிணக்க ஊராட்சி விருதுக்கு ஜூலை 10 வரை விண்ணப்பிக்கலாம்

திருவாரூா் மாவட்டத்தில், சமூக நல்லிணக்க ஊராட்சிக்கான விருது பெற ஜூலை 10 -ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியா் வ. மோகனச்சந்திரன் தெரிவித்துள்ளாா். இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குற... மேலும் பார்க்க