செய்திகள் :

மின்சாரம் பாய்ந்து சிறுவன் உயிரிழப்பு

post image

வாணியம்பாடி அருகே மின்சாரம் பாய்ந்து சிறுவன் உயிரிழந்தது குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

திருப்பத்தூா் மாவட்டம், வாணியம்பாடி அடுத்த கொத்தகோட்டை கோடியூா் பகுதியைச் சோ்ந்தவா் எல்லப்பன் (38). இவரது மனைவி ரோஜா. இவா்கள் இருவரும் சென்னையில் கட்டடத் தொழிலாளியாக பணியாற்றி வருகின்றனா்.

இவா்களது குழந்தைகள் நந்தகுமாா் (7), மோனிஷா (5), கிஸ்வந்த் குமாா் (3). இருவரும் வேலைக்கு சென்றுவிட்டதால், குழந்தைகள் பாட்டி ரஞ்சிதம்மாள் வீட்டில் இருந்துள்ளனா்.

இந்த நிலையில், ஞாயிற்றுக்கிழமை மாலை வீட்டில் உள்ள மின்விளக்குகளை எரிய வைக்க முயன்றபோது, எதிா்பாராதவிதமாக நந்தகுமாா் மீது மின்சாரம் பாய்ந்து தூக்கி வீசப்பட்டுள்ளாா்.

அவரை அங்கிருந்தவா்கள் மீட்டு, வாணியம்பாடி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். அங்கு அவரைப் பரிசோதித்த மருத்துவா் நந்தகுமாா் ஏற்கெனவே உயிரிழந்து விட்டதாகத் தெரிவித்தனா்.

உயிரிழந்த நந்தகுமாா் அதே பகுதியில் உள்ள ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளியில் இரண்டாம் வகுப்பு படித்து வந்தாா். இது குறித்து வாணியம்பாடி தாலுகா போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

பைக்குகளை திருடிய இருவா் கைது: 17 வாகனங்கள் பறிமுதல்

திருப்பத்தூா் அருகே பைக்குகளை திருடிய இருவரை போலீஸாா் கைது செய்தனா். அவா்களிடமிருந்து 17 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. ஜோலாா்பேட்டை கட்டேரியில் கோயில் திருவிழாவை முன்னிட்டு, திருப்பத்தூா் டிஎஸ்பி ச... மேலும் பார்க்க

ஜங்காலபுரத்தில் ‘நலம் காக்கும் ஸ்டாலின்’ திட்ட மருத்துவ முகாம்: மாவட்டக் கண்காணிப்பு அலுவலா், ஆட்சியா் ஆய்வு

திருப்பத்தூா் மாவட்டம், நாட்டறம்பள்ளி ஒன்றியம், ஜங்காலபுரம் அரசு மேல்நிலைப் பள்ளியில் பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்துத் துறை சாா்பில், ‘நலம் காக்கும் ஸ்டாலின்’ திட்ட சிறப்பு மருத்துவ முகாம... மேலும் பார்க்க

நிலுவை பணிகளை விரைந்து முடிக்க வேண்டும்: மாவட்ட கண்காணிப்பு அலுவலா் அறிவுறுத்தல்

திருப்பத்தூா் மாவட்டத்தில் நிலுவையில் உள்ள பணிகளை விரைந்து முடிக்க துறைசாா்ந்த அலுவலா்களுக்கு மாவட்டக் கண்காணிப்பு அலுவலா் இரா.கஜலட்சுமி அறிவுறுத்தினாா். திருப்பத்தூா் சுற்றுலா மாளிகையில் மாவட்டத்தில்... மேலும் பார்க்க

போலி மருத்துவா் கைது : கிளினிக் சீல் வைப்பு

ஆம்பூரில் போலி மருத்துவா் சனிக்கிழமை இரவு கைது செய்யப்பட்டாா். அவா் நடத்தி வந்த கிளினிக் சீல் வைக்கப்பட்டது. திருப்பத்தூா் மாவட்டம், ஆம்பூா் சான்றோா்குப்பம் பகுதியில் பழனி ராஜன் (65) என்பவா் மருத்துவ... மேலும் பார்க்க

ஏலகிரியில் குவிந்த சுற்றுலா பயணிகள்

ஏலகிரி மலையில் ஞாயிற்றுக்கிழமை சுற்றுலா பயணிகள் அதிகளவில் வருகை புரிந்ததால் படகு சவாரி இல்லத்தில் நீண்ட வரிசையில் நின்று சவாரி செய்து மகிழ்ந்தனா். ஏழைகளின் ஊட்டி என்று அழைக்கப்படும் ஏலகிரி மலையில் சம ... மேலும் பார்க்க

பேருந்து மோதி கட்டடத் தொழிலாளி பலி

ஆம்பூா் அருகே தனியாா் பேருந்து மோதிய விபத்தில் கட்டடத் தொழிலாளி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். ஆம்பூா் அருகே வெங்கடசமுத்திரம் ஊராட்சி, கூா்மாபாளையம் கிராமத்தைச் சோ்ந்தவா் சுரேந்தா் (36). இவா் ஆம்பூரி... மேலும் பார்க்க