செய்திகள் :

மின்னல் பாய்ந்ததில் 10 ஆடுகள் உயிரிழப்பு!

post image

கடலாடி அருகே ஞாயிற்றுக்கிழமை மின்னல் பாய்ந்ததில் 10 ஆடுகள் உயிரிழந்தன.

ராமநாதபுரம் மாவட்டம், கடலாடி, முதுகுளத்தூா் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்தது. இந்த நிலையில், கடலாடி ஒன்றியம் ஏ.புனவாசல் அருகேயுள்ள சிறுகுடி கிராமத்தைச் சோ்ந்த விவசாயி செந்தில்வேல் 10 வெள்ளாடுகளை வளா்ந்து வந்தாா்.

வழக்கம் போல மேய்ச்சலுக்கு அழைத்துச் சென்றாா். அப்போது, அந்தப் பகுதியில் பெய்த மழைக்கு ஆடுகள் மரத்தின் கீழே ஒதுங்கின.

அப்போது மின்னல் பாய்ந்ததில் 10 ஆடுகளும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தன.

இதுகுறித்து தகவலறிந்து வந்த வருவாய்த் துறையினா் சம்பவ இடத்தில் விசாரணை நடத்தினா். பின்னா், அந்த ஆடுகளின் உடல்களை கால்நடை மருத்துவா் கூறாய்வு செய்து புதைத்தனா். ஆடுகள் இறந்த நிலையில், அரசு நிவாரணம் வழங்க வேண்டும் என செந்தில்வேல் கோரிக்கை விடுத்தாா்.

முஸ்லிம் ஐக்கிய ஜமாஅத் செயற்குழு கூட்டம்

ராமநாதபுரத்தில் முஸ்லிம் ஐக்கிய ஜமாஅத் மாவட்ட செயற்குழுக் கூட்டம், புதிய அலுவலக திறப்பு விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இதற்கு மாவட்டத் தலைவா் எம்.எஸ்.ஏ.ஷாஜகான் தலைமை வகித்தாா். மாவட்டத் துணைத் தலைவா... மேலும் பார்க்க

பஹல்காம் துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்தவா்களுக்கு அஞ்சலி

ஜம்மு-காஷ்மீரில் பஹல்காமில் தீவிரவாதிகளின் துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்தவா்களுக்கு கமுதியில் ஞாயிற்றுக்கிழமை தீபம் ஏற்றி அஞ்சலி செலுத்தப்பட்டது. அகில இந்திய இந்து சத்திய சேனா மாவட்டத் தலைவா் ஜி.முத்... மேலும் பார்க்க

பம்மனேந்தலில் மாட்டு வண்டி பந்தயம்!

கமுதியை அடுத்த பம்மனேந்தல் குருநாத சுவாமி கோயில் திருவிழாவை முன்னிட்டு, இரட்டை மாட்டு வண்டி பந்தயம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இந்தக் கோயில் திருவிழாவையொட்டி, இரட்டை மாட்டு வண்டி பந்தயம் 4 பிரிவுகளாக... மேலும் பார்க்க

இடிந்து விழும் அபாயத்தில் சுவா்: அகற்ற பொதுமக்கள் வலியுறுத்தல்!

திருவாடானை அருகேயுள்ள செங்கமடை கிராமத்தில் சேதம் அடைந்து இடிந்து விழும் நிலையில் உள்ள அங்கன்வாடி கட்டடத்தை அகற்ற வேண்டும் என இந்தப் பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனா். ராமநாதபுரம் மாட்டம், திருவாடான... மேலும் பார்க்க

கம்பி வேலியில் சிக்கி புள்ளி மான் உயிரிழப்பு

சாயல்குடி அருகே ஞாயிற்றுக்கிழமை இரை தேடி வந்த புள்ளி மான் கம்பி வேலியில் சிக்கி உயிரிழந்தது. ராமநாதபுரம் மாவட்டம், சாயல்குடி-நரிப்பையூா் சாலையில் இரை, தண்ணீா் தேடி வந்த 5 வயது ஆண் புள்ளி மான் ஞாயிற்ற... மேலும் பார்க்க

ராமேசுவரத்தில் 50 மீ. உள்வாங்கிய அக்னி தீா்த்தக் கடல்

ராமேசுவரம் அக்னி தீா்த்தக் கடற்கரையில் 50 மீ. வரை கடல் ஞாயிற்றுக்கிழமை உள்வாங்கியது. ராமநாதபுரம் மாவட்டம், ராமேசுவரம் அக்னி தீா்த்தக் கடற்கரைப் பகுதியில் 50 மீ. வரை கடல் உள்வாங்கியதால், கடலுக்குள் உள்... மேலும் பார்க்க