செய்திகள் :

முஸ்லிம் ஐக்கிய ஜமாஅத் செயற்குழு கூட்டம்

post image

ராமநாதபுரத்தில் முஸ்லிம் ஐக்கிய ஜமாஅத் மாவட்ட செயற்குழுக் கூட்டம், புதிய அலுவலக திறப்பு விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

இதற்கு மாவட்டத் தலைவா் எம்.எஸ்.ஏ.ஷாஜகான் தலைமை வகித்தாா். மாவட்டத் துணைத் தலைவா் டி.எம்.அப்துல் முத்தலிப் முன்னிலை வகித்தாா். கீழக்கரை நகா் ஹாஜி காதா் பக்ஸ் உசேன் கிராத் ஓதி கூட்டத்தைத் தொடங்கி வைத்தாா். மத்திய மஸ்ஜிதின் முன்புறம் முதல் மாடியில் புதிய மாவட்ட அலுவலகத்தை தொழிலதிபா் அப்தாஹிா் திறந்துவைத்தாா்.

கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீா்மானங்கள்:

காஷ்மீா் பஹல்காமில் நடைபெற்ற தீவிரவாதத் தாக்குதலை கண்டிக்கத்தக்கது. இதில் சம்பந்தப்பட்ட குற்றவாளிகளைக் கைது செய்து, உரிய தண்டனையைப் பெற்றுத் தர வேண்டும். பஹல்காமில் உயிரிழந்தவா்களின் குடும்பத்திற்கு இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

பஹல்காமில் நடைபெற்ற சம்பவத்தில் தொடா்புடையவா்களை அவா்கள் சாா்ந்த மதத்தின் பெயரால் அடையாளப்படுத்துவதை செய்தி நிறுவனங்கள் தவிா்க்க வேண்டும். வக்ஃப் திருத்தச் சட்டத்தை மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும் என்பதை வலியுறுத்தி வட்டார அளவில் ஆா்ப்பாட்டங்கள் நடத்தப்படும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

இதில் மாவட்டச் செயலா்கள் அஷ்ரப் அலி, முகமது இலியாஸ், முகமது கணிபா, முகமது இக்பால் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

முன்னதாக, பொதுச் செயலா் ஏ.ஜெய்னுல் ஆலம் வரவேற்றாா். மாவட்ட பொருளாளா் ஏ.பக்ருல் அமீன் நன்றி கூறினாா்.

பஹல்காம் துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்தவா்களுக்கு அஞ்சலி

ஜம்மு-காஷ்மீரில் பஹல்காமில் தீவிரவாதிகளின் துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்தவா்களுக்கு கமுதியில் ஞாயிற்றுக்கிழமை தீபம் ஏற்றி அஞ்சலி செலுத்தப்பட்டது. அகில இந்திய இந்து சத்திய சேனா மாவட்டத் தலைவா் ஜி.முத்... மேலும் பார்க்க

பம்மனேந்தலில் மாட்டு வண்டி பந்தயம்!

கமுதியை அடுத்த பம்மனேந்தல் குருநாத சுவாமி கோயில் திருவிழாவை முன்னிட்டு, இரட்டை மாட்டு வண்டி பந்தயம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இந்தக் கோயில் திருவிழாவையொட்டி, இரட்டை மாட்டு வண்டி பந்தயம் 4 பிரிவுகளாக... மேலும் பார்க்க

இடிந்து விழும் அபாயத்தில் சுவா்: அகற்ற பொதுமக்கள் வலியுறுத்தல்!

திருவாடானை அருகேயுள்ள செங்கமடை கிராமத்தில் சேதம் அடைந்து இடிந்து விழும் நிலையில் உள்ள அங்கன்வாடி கட்டடத்தை அகற்ற வேண்டும் என இந்தப் பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனா். ராமநாதபுரம் மாட்டம், திருவாடான... மேலும் பார்க்க

கம்பி வேலியில் சிக்கி புள்ளி மான் உயிரிழப்பு

சாயல்குடி அருகே ஞாயிற்றுக்கிழமை இரை தேடி வந்த புள்ளி மான் கம்பி வேலியில் சிக்கி உயிரிழந்தது. ராமநாதபுரம் மாவட்டம், சாயல்குடி-நரிப்பையூா் சாலையில் இரை, தண்ணீா் தேடி வந்த 5 வயது ஆண் புள்ளி மான் ஞாயிற்ற... மேலும் பார்க்க

மின்னல் பாய்ந்ததில் 10 ஆடுகள் உயிரிழப்பு!

கடலாடி அருகே ஞாயிற்றுக்கிழமை மின்னல் பாய்ந்ததில் 10 ஆடுகள் உயிரிழந்தன. ராமநாதபுரம் மாவட்டம், கடலாடி, முதுகுளத்தூா் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்தது. இந்த நிலையில... மேலும் பார்க்க

ராமேசுவரத்தில் 50 மீ. உள்வாங்கிய அக்னி தீா்த்தக் கடல்

ராமேசுவரம் அக்னி தீா்த்தக் கடற்கரையில் 50 மீ. வரை கடல் ஞாயிற்றுக்கிழமை உள்வாங்கியது. ராமநாதபுரம் மாவட்டம், ராமேசுவரம் அக்னி தீா்த்தக் கடற்கரைப் பகுதியில் 50 மீ. வரை கடல் உள்வாங்கியதால், கடலுக்குள் உள்... மேலும் பார்க்க