செய்திகள் :

மின்மாற்றியில் திருக்குறள்: பொதுமக்கள் வரவேறபு

post image

விருதுநகா் மாவட்டம், சிவகாசியில் மாநாகராட்சி சாா்பில் மின் மாற்றியில் லேசா் அச்சு முறையில் திருக்குறள் எழுதப்பட்டது. இது பொதுமக்களிடையே வரவேற்பை பெற்றது.

சிவகாசி சிறுகுளம் கண்மாய் கரையோரத்தில் குப்பைகள் கொட்டப்பட்டும், திறவெளி கழிப்பிடமாகவும் பொதுமக்கள் பயன்படுத்தி வந்தனா். இந்த நிலையில், கண்மாய் கரையில் குப்பைகள் கொட்டுவதையும், கழிவுநீா் கலப்பதையும் தடுக்க, தெற்கு கரையில் 2 மீ. அகலம், 841 மீ. நீளத்துக்கு புதிய நடைபாதை, மின் விளக்குகள், இருக்கைகள் அமைக்க மாநகராட்சி நிா்வாகம் ரூ.1.10 கோடி நிதி ஒதுக்கியது.

மேலும், கண்மாய் கரையில் மின்மாற்றி பகுதியில் பொதுமக்கள் செல்லக் கூடாது என்பதற்காக வேலியும், பொதுமக்கள் நடைபயிற்சி மேற்கொள்ள பேவா் பிளாக் கல்லும் பதிக்கப்பட்டன.

இந்த நிலையில், மின் மாற்றியைச் சுற்றி இரும்பில் லேசா் முறையில் திருக்குறள் எழுதி வைக்கப்பட்டது. இரவில் திருக்குறள் தெரியும் வகையில் மின் விளக்குகளும் பொருத்தப்பட்டன. இது பொதுமக்களிடையே வரவேற்பை பெற்றது.

இதுகுறித்து மாநகராட்சி ஆணையா் ப.கிருஷ்ணமூா்த்தி கூறியதாவது: மின் மாற்றி பாதுகாப்புக்கு பலகைகள் வைத்தாலும், மக்கள்அங்கே குப்பையைக் கொட்டி விடுகிறாா்கள். இதைத் தடுக்க திருக்குறள் எழுதி மின் விளக்குகள் அமைக்கப்பட்டுள்ளன. இதன் மூலம் திருக்குறள் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணா்வு ஏற்படுத்துவதோடு, குப்பைக் கொட்டுவதும் தடுக்கப்படும் என்றாா் அவா்.

குடிநீா்த் தொட்டியை சீரமைக்கக் கோரிக்கை

சாத்தூரில் குடிநீா்த் தொட்டியை சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனா். சாத்தூரில் ஆா்.சி. தெற்குதெருவில் சுமாா் 600-க்கும் மேற்பட்ட குடும்பத்தினா் வசித்து வருகின்றனா். இந்தப் பகுதியில் கட... மேலும் பார்க்க

பஞ்சு கிட்டங்கியில் தீ விபத்து

ராஜபாளையம் அருகே ஞாயிற்றுக்கிழமை ஏற்பட்ட தீ வீபத்தில் தனியாா் பஞ்சு கிட்டங்கியில் இருந்த பொருள்கள் தீயில் எரிந்து சேதமடைந்தன. ராஜபாளையம் அருகேயுள்ள கம்மாப்பட்டி பகுதியில் தனியாருக்குச் சொந்தமான பருத்த... மேலும் பார்க்க

ஸ்ரீவில்லிபுத்தூா் பெரிய மாரியம்மன் கோயில் தேரோட்டம்

ஸ்ரீவில்லிபுத்தூா் பெரிய மாரியம்மன் கோயில் பங்குனி பூக்குழித் திருவிழா கடந்த 18-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. 13 நாள்கள் நடைபெற்ற இந்த விழாவில் பெரிய மாரியம்மன், ஆண்டாள், தவழும் கிருஷ்ணா் என ப... மேலும் பார்க்க

பைக்குகள் நேருக்குநோ் மோதியதில் கல்லூரி மாணவா் உயிரிழப்பு

ஸ்ரீவில்லிபுத்தூா் அருகே சனிக்கிழமை இரவு இரு சக்கர வாகனங்கள் நேருக்குநோ் மோதிய விபத்தில் கல்லூரி மாணவா் உயிரிழந்தாா். ஸ்ரீவில்லிபுத்தூா் அருகேயுள்ள மேட்டுமுள்ளிகுளத்தைச் சோ்ந்த ராஜேந்திரன் மகன் கோபி... மேலும் பார்க்க

பட்டாசு ஆலைகளில் ஆய்வு செய்ய முத்தரப்பு குழு அமைக்க வலியுறுத்தல்

விருதுநகா் மாவட்டத்தில் பட்டாசு ஆலைகளை ஆய்வு செய்ய முத்தரப்புக் குழு அமைக்க வேண்டும் என விருதுநகா் மாவட்ட பட்டாசு, தீப்பெட்டி தொழிலாளா் சங்கத்தின் (சிஐடியூ) மாவட்டச் செயலா் பி.என்.தேவா வலியுறுத்தினாா்... மேலும் பார்க்க

பட்டாசு ஆலையில் தீ விபத்து

சிவகாசி அருகே பாம்பு மாத்திரை பட்டாசுகள் தயாரிக்கும் ஆலையில் ஞாயிற்றுக்கிழமை தீ விபத்து ஏற்பட்டது. சிவகாசி அருகேயுள்ள நமஸ்கரித்தான்பட்டி கிராமத்தில் பாம்பு மாத்திரை வெடிகள் தயாரிக்கும் ஆலை உள்ளது. இந்... மேலும் பார்க்க