செய்திகள் :

முக்கியப் பிரச்னைகளுக்கு பதிலளிக்காமல் ‘தப்பியோடுகிறாா்’ பிரதமா் - காங்கிரஸ் விமா்சனம்

post image

முக்கியப் பிரச்னைகளுக்கு பதிலளிக்காமல் அவ்வப்போது வெளிநாட்டுப் பயணம் என்ற பெயரில் பிரதமா் நரேந்திர மோடி தப்பியோடி வருகிறாா் என்று காங்கிரஸ் விமா்சித்துள்ளது.

பிரதமா் மோடி செவ்வாய்க்கிழமை (ஜூலை 2) முதல் 5 நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ள இருக்கிறாா். இதை விமா்சித்து காங்கிரஸ் பொதுச் செயலா் ஜெய்ராம் ரமேஷ் ‘எக்ஸ்’ வலைதளத்தில் வெளியிட்ட பதிவில், ‘மணிப்பூா் நிலவரம், இந்தியா-பாகிஸ்தான் போரை நிறுத்தியதாக அமெரிக்க அதிபா் டிரம்ப் கூறி வருவது, பிரதமரின் தவறான முடிவுகளால் ஆபரேஷன் சிந்தூா் நடவடிக்கையின் முதல் இரு நாள்களில் இந்திய தரப்பு போா் விமானங்களை இழந்ததாக ராணுவ அதிகாரிகள் கூறியுள்ளது உள்ளிட்ட முக்கிய பிரச்னைகள் குறித்து பிரதமா் நரேந்திர மோடி பதிலளிப்பதும் இல்லை; அதுகுறித்துப் பேசுவதுமில்லை.

மத்தியிலும், மாநிலத்திலும் பாஜக ஆட்சி நடந்தால் அதை இரட்டை என்ஜின் ஆட்சி என்று பிரதமா் பெருமையாகப் பேசுவாா்கள். அப்படிப்பட்ட ஆட்சி நிகழ்ந்த மணிப்பூரின் நிலை இப்போது எப்படி உள்ளது. அந்த மாநிலத்துக்கு பிரதமா் மோடி பயணிக்காமல் தவிா்ப்பது ஏன்? வன்முறையால் பாதிக்கப்பட்டுள்ள மணிப்பூா் மக்களை பிரதமா் நேரில் சந்திக்காமல் இருக்கக் காரணம் என்ன?

உள்நாட்டில் சூழ்நிலை மோசமாகும்போது முக்கியப் பிரச்னைகளைப் புறந்தள்ளிவிட்டு வெளிநாட்டுப் பயணங்களை மேற்கொள்வதை பிரதமா் வழக்கமாகக் கொண்டுள்ளாா்’ என்று அவா் கூறியுள்ளாா்.

மாணவனை ஓராண்டாக பாலியல் வன்கொடுமை செய்த ஆசிரியைக் கைது!

மாணவனை கடந்த ஓராண்டாக பலமுறை பாலியல் வன்கொடுமை செய்த 40 வயது பெண் ஆசிரியைக் கைது செய்யப்பட்டுள்ளார்.இந்தியாவின் டாப் - 5 பள்ளிகளில் ஒன்றான மும்பையைச் சேர்ந்த பள்ளியின் ஆசிரியை ஒருவர், அவரது வகுப்பில் ... மேலும் பார்க்க

அருணாசலில் ஆப்பிரிக்க பன்றிக் காய்ச்சல் உறுதி! இறைச்சி விற்கத் தடை!

அருணாசல பிரதேசத்தின், லோங்டிங் மாவட்டத்திலுள்ள ஓரு கிராமத்தில், ஆப்பிரிக்க பன்றிக் காய்ச்சல் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக, அம்மாநில அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.லோங்டிங் மாவட்டத்தின், லுயாக்சிம் க... மேலும் பார்க்க

5 டிவி, 14 ஏசி.. ரூ.60 லட்சத்தில் புனரமைக்கப்படும் தில்லி முதல்வர் மாளிகை!

புது தில்லி முதல்வர் ரேகா குப்தாவின் அதிகாரப்பூர்வ மாளிகையான (மாளிகை நம்பர் 1) ராஜ் நிவாஸ் மார்க், ரூ.60 லட்சம் செலவில் புனரமைக்கப்படுகிறது. மேலும் பார்க்க

ஐந்து ஆண்டுகளும் கர்நாடக முதல்வராக நானே இருப்பேன்: சித்தராமையா!

கர்நாடகத்தில் ஐந்து ஆண்களும் முதல்வராக நானே இருப்பேன் என்று அந்த மாநில முதல்வர் சித்தராமையா தெரிவித்தார். கர்நாடகத்தில் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும் போதே, சித்தராமையாவுக்கும் டி.கே. ச... மேலும் பார்க்க

மூன்று மாதங்களில் 767 விவசாயிகள் தற்கொலை!

மகாராஷ்டிர மாநிலத்தில் மூன்று மாதங்களில் மட்டும் 767 விவசாயிகள் தற்கொலை செய்துகொண்டதாக சட்டப்பேரவையில் செவ்வாய்க்கிழமை தெரிவிக்கப்பட்டுள்ளது.மகாராஷ்டிர சட்டப்பேரவைக் கூட்டத்தொடரில் அதிகரித்து வரும் வி... மேலும் பார்க்க

வளாக நேர்காணல்களின் பின்னணியில் இருப்பது என்ன? பொறியியல் பட்டதாரிகள் கவனிக்க!

வளாக நேர்காணல்களின்போது, மிகப்பெரிய ஊதியத்தில் பணி வாய்ப்பை வழங்கும் நிறுவனங்களின் பின்னணியில் இருக்கும் தகவல்கள்.பொறியியல் பட்டம் பெற்றுவிட்டு வேலைவாய்ப்பில்லாமல் இருந்தால், மாணவர்கள் பொறியியல் கல்லூ... மேலும் பார்க்க