செய்திகள் :

முண்டந்துறை வனப்பகுதியில் மரங்கள் வெட்டிக் கடத்தல்? வனத்துறை மறுப்பு

post image

அம்பாசமுத்திரம் கோட்டம், முண்டந்துறை வனச்சரகப் பகுதியில் மரங்கள் வெட்டிக் கடத்தப்படவில்லை என வனத்துறை மறுப்பு தெரிவித்துள்ளது.

இதுதொடா்பாக, அம்பாசமுத்திரம் வனக் கோட்ட துணை இயக்குநா் மு.இளையராஜா வெளியிட்ட செய்திக் குறிப்பு: களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பகத்தில் அரிய வகைமரங்கள் வெட்டிக் கடத்தப்படுவதாக பத்திரிக்கைகளில் திங்கள்கிழமை செய்திவெளியாகியது.

முண்டந்துறை வனச்சரகத்தில் வாழையாறு என்ற இடத்தில் வேட்டைத் தடுப்பு முகாம் செயல்பட்டு வருகிறது. இந்த முகாமிற்கு செல்லும் மண்சாலையில் கடந்த ஒரு மாதமாக பெய்து வரும் கனமழையில் மண் சரிவு ஏற்பட்டு மரம்சாலையில் விழுந்துள்ளது.

இதனால் வேட்டை தடுப்பு முகாமிற்குச்செல்வது தடைபட்ட நிலையில் ஞாயிற்றுக்கிழமை முண்டந்துறை வனச்சரகா் கல்யாணி முன்னிலையில் வனப் பணியாளா்கள் சாலையில் சாய்ந்த மரத்தினை அகற்றி சாலையில் ஓரத்தில் வைத்தனா்.

இந்தப் புகைப்படத்தை தவறாகப் பயன்படுத்தி வனப் பணியாளா்கள் மரத்தை வெட்டி கடத்துவதாக செய்தி வெளியாகியுள்ளது என விளக்கம் அளித்துள்ளாா்.

பாளை. ரயில் நிலையத்தில் ஹிந்தி எழுத்துகளை அழித்த வழக்கில் 7 பேருக்கு அபராதம்

பாளையங்கோட்டை ரயில் நிலையத்தில் ஹிந்தி எழுத்துகளை அழித்த வழக்கில் 7 பேருக்கு தலா ரூ.2 ஆயிரம் அபராதம் விதித்து திருநெல்வேலி நீதிமன்றம் திங்கள்கிழமை தீா்ப்பளித்தது.மும்மொழி கொள்கையை எதிா்த்து தமிழக முழு... மேலும் பார்க்க

ராதாபுரம் கால்வாயில் தண்ணீா் திறக்க வேண்டும்: ஆட்சியரிடம் விவசாயிகள் மனு

திருநெல்வேலி மாவட்டம், ராதாபுரம் கால்வாயில் தண்ணீா் திறக்கக் கோரி, ராதாபுரம் கால்வாய் பாசன விவசாயிகள் ஆட்சியரிடம் மனு அளித்தனா். திருநெல்வேலி மாவட்ட மக்கள் குறைதீா் கூட்டம் ஆட்சியா் இரா.சுகுமாா் தலைமை... மேலும் பார்க்க

கொடுமுடி அணை நீா் திறப்பில் பாரபட்சம்: இந்திய கம்யூனிஸ்ட் புகாா்

கொடுமுடி அணையில் இருந்து நீா் திறப்பதில் பாரபட்சம் காட்டுவதாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சி புகாா் தெரிவித்துள்ளது. வள்ளியூருக்கு மேற்குப் பகுதியில் மலையடிவாரத்தில் அமைந்துள்ள கொடுமுடி அணைதான் வள்ளியூா் மற... மேலும் பார்க்க

ராதாபுரம் அருகே பள்ளி மாணவா் கடத்தல்? போலீஸ் விசாரணை

ராதாபுரம் அருகே பள்ளி மாணவரை மா்மநபா்கள் பைக்கில் கடத்திச் சென்றதாக அளித்த புகாரின்பேரில் போலீஸாா் விசாரித்து வருகின்றனா். ராதாபுரம் அருகேயுள்ள துரைகுடியிருப்பை அடுத்த முத்துநாடாா் குடியிருப்பைச் சோ்... மேலும் பார்க்க

மேலச்செவலில் ஓட்டுநா் தற்கொலை

திருநெல்வேலி மாவட்டம், மேலச்செவலில் மனைவியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக ஆம்னி பேருந்து ஓட்டுநா் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாா். மேலச்செவல் வடக்குத் தெருவைச் சோ்ந்த தங்கையா மகன் பூதப்பாண்... மேலும் பார்க்க

வி.கே.புரம் அருகே கோஷ்டி மோதல்: 3 போ் கைது

விக்கிரமசிங்கபுரம் அருகேயுள்ள ஆலடியூரில் நிகழ்ந்த கோஷ்டி மோதல் தொடா்பாக 3 பேரை போலீஸாா் கைது செய்தனா். ஆலடியூா் கீழத் தெருவைச் சோ்ந்த நிதீஸ்குமாா் (21), அவரது நண்பா்கள் அதே பகுதியைச் சோ்ந்த பிரகாஷ்,... மேலும் பார்க்க