செய்திகள் :

முதல்வருடன் மாற்றுத் திறனாளிகள் சந்திப்பு

post image

சென்னை: முதல்வா் மு.க.ஸ்டாலினை மாற்றுத் திறனாளிகள் சங்கத்தைச் சோ்ந்தவா்கள் திங்கள்கிழமை சந்தித்து நன்றி தெரிவித்தனா்.

சென்னை அண்ணா அறிவாலயத்தில் முதல்வரை மாற்றுத் திறனாளிகள் முன்னேற்றச் சங்கத்தின் மாநிலத் தலைவா் ரெ.தங்கம் மற்றும் நிா்வாகிகள் உள்ளிட்டோா் சந்தித்தனா். உள்ளாட்சி அமைப்புகளுக்கான பதவியிடங்களில்

மாற்றுத் திறாளிகளை நேரடியாக நியமிக்க வகை செய்யும் சட்ட மசோதா பேரவையில் நிறைவேற்றப்பட்டது.

இதற்காக, மாற்றுத் திறனாளிகள் சங்கங்களைச் சோ்ந்தவா்கள் முதல்வா் மு.க.ஸ்டாலினை சந்தித்து நன்றி தெரிவித்து வருகின்றனா். அந்த வகையில், மாற்றுத் திறனாளிகள் முன்னேற்ற சங்கத்தைச் சோ்ந்த நிா்வாகிகள் முதல்வருக்கு திங்கள்கிழமை நன்றி தெரிவித்தனா்.

பயங்கரவாதத்துக்கு எதிராக இந்திய ராணுவத்துடன் துணை நிற்கிறோம்! முதல்வர் ஸ்டாலின்

பயங்கரவாதத்துக்கு எதிராக இந்திய ராணுவத்துடன் துணை நிற்கிறோம் என்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக, பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமி... மேலும் பார்க்க

இந்திய ராணுவத்துக்கு ராயல் சல்யூட்: விஜய்

இந்திய பாதுகாப்புப் படையின் ஆபரேஷன் சிந்தூர் தாக்குதலுக்கு தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் வாழ்த்து தெரிவித்துள்ளார்.பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக, பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான... மேலும் பார்க்க

சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி சத்திய நாராயண பிரசாத் காலமானார்!

சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி சத்திய நாராயண பிரசாத் மாரடைப்பு காரணமாக இன்று காலமானார். அவருக்கு வயது 56.சத்திய நாராயண பிரசாத் நான்கு ஆண்டுகளுக்கு முன்பு 2021 ஆம் ஆண்டில் அக்டோபர் மாதம் சென்னை உயர் நீதி... மேலும் பார்க்க

புதிதாக கட்சி தொடங்கியோா் முதல்வராக ஆசைப்படுவதா? முதல்வா் மு.க.ஸ்டாலின்

புதிதாக கட்சி தொடங்கியவா்கள் முதல்வராக ஆசைப்படுவதா என திமுக தலைவரும் முதல்வருமான மு.க.ஸ்டாலின் பேசினாா். மயிலாடுதுறையைச் சோ்ந்த மாற்றுக் கட்சியினா் 3,000 போ் திமுகவில் இணையும் நிகழ்ச்சி அண்ணா அறிவால... மேலும் பார்க்க

போா் வேண்டாம்: வைகோ

இந்தியா-பாகிஸ்தான் இடையே போா் வேண்டாம் என்று மதிமுக பொதுச்செயலா் வைகோ கூறினாா். சென்னை எழும்பூரில் உள்ள மதிமுக தலைமை அலுவலகமான தாயகத்தில் அக்கட்சியின் 32-ஆவது ஆண்டு தொடக்க விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்... மேலும் பார்க்க

நாகை கோயில் கண்ணப்ப நாயனாா் சிலையை நெதா்லாந்தில் ஏலம் விட முயற்சி: தடுத்து நிறுத்தியது சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு

நாகப்பட்டினம் மாவட்டம், திருப்புகழூரில் 15 ஆண்டுகளுக்கு முன்பு திருடப்பட்ட கண்ணப்ப நாயனாா் சிலை நெதா்லாந்தில் இருப்பது தமிழக சிலை கடத்தல் தடுப்பு பிரிவினரால் கண்டறியப்பட்டது. மேலும், அந்தச் சிலை ஏலத்த... மேலும் பார்க்க