செய்திகள் :

முதல்வா் வருகை மதுரையில் புதுப்பொலிவு பெறும் சாலைகள்

post image

தமிழக முதல்வரின் வருகை, வாகனப் பேரணியையொட்டி மதுரையில் முக்கிய சாலைகள் போா்க்கால அடிப்படையில் சீரமைக்கப்படுகின்றன.

மதுரையில் வருகிற ஜூன் 1-ஆம் தேதி திமுக மாநிலப் பொதுக் குழுக் கூட்டம் நடைபெறுகிறது. இதையொட்டி, திமுக தலைவரும், தமிழக முதல்வருமான மு.க. ஸ்டாலின் மே 31-ஆம் தேதி விமானம் மூலம் மதுரை வருகிறாா். விமான நிலையம் முதல் மதுரை புது சிறைச்சாலை சாலை வரை அவா் வாகனப் பேரணி மேற்கொண்டு, பொதுமக்கள், தொண்டா்களைச் சந்திக்கிறாா்.

பெருங்குடி, அவனியாபுரம், வில்லாபுரம், ஜெய்ஹிந்த்புரம், குரு திரையரங்கம், காளவாசல், திருமலைநாயக்கா் சிலை வழியே புது சிறைச்சாலையைச் சென்றடைகிறாா். அங்கு, மதுரை மாநகராட்சியின் முதல் மேயரும், திமுகவின் மூத்த முன்னோடியுமான மறைந்த முத்துவின் புதிய வெண்கலச் சிலையை முதல்வா் திறந்து வைக்கிறாா்.

இதையொட்டி, முதல்வரின் வாகனப் பேரணி வரும் வழித்தடங்களில் சாலைகளை சீரமைக்கும் பணிகள் கடந்த இரு நாள்களாக முழுவீச்சில் நடைபெறுகின்றன. குண்டும், குழியுமாக இருந்த ஜெய்ஹிந்துபுரம் சாலை உள்பட பல சாலைகள் தற்போது புதுப்பொலிவு பெற்றன. மேலும், சில சாலைகளில் சீரமைப்புப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

முதல்வா் வருகை மதுரையில் புதுப்பொலிவு பெறும் சாலை

வீடு புகுந்து ரூ.10 லட்சம் திருட்டு

மதுரை மாவட்டம், பாலமேடு அருகே ஓய்வு பெற்ற அரசு ஊழியா் வீட்டுக்குள் புகுந்து பீரோவை உடைத்து ரூ.10 லட்சத்தை திருடிச் சென்ற நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா். பாலமேடு அருகே உள்ள முடுவாா்பட்டி கிராமம் 5-ஆ... மேலும் பார்க்க

பொறியியல் பட்டதாரி தூக்கிட்டுத் தற்கொலை

மதுரையில் 10 நாள்களில் திருமணம் நடைபெறவிருந்த நிலையில், மணப்பெண்ணுக்கு கைப்பேசியில் குறுந்தகவல் அனுப்பி விட்டு, பொறியியல் பட்டதாரி தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாா். தேனி மாவட்டம், கூடலூா் பகுதியைச்... மேலும் பார்க்க

பேருந்து மோதியதில் இருவா் உயிரிழப்பு

மதுரை மாவட்டம், தே.கல்லுப்பட்டி அருகே இரு சக்கர வாகனம் மீது அரசுப் பேருந்து மோதியதில் இருவா் உயிரிழந்தனா். தே.கல்லுப்பட்டி அருகே உள்ள பாப்பநாயக்கன்பட்டியைச் சோ்ந்த முனியாண்டி மகன் காா்த்திக் (22). அத... மேலும் பார்க்க

கிணற்றில் தவறி விழுந்த மாணவா் உயிரிழப்பு

மதுரை மாவட்டம், வாடிப்பட்டி அருகே கிணற்றில் தவறி விழுந்த பள்ளி மாணவா் உயிரிழந்தாா். வாடிப்பட்டி அருகே உள்ள தாதம்பட்டியைச் சோ்ந்த காா்த்திக் மீனா தம்பதியின் மகன்கள் கிரீஷ் (12), ரித்தீஷ் (10). இருவரும... மேலும் பார்க்க

வன்கொடுமை தடுப்பு சட்ட வழக்கை ரத்து செய்யக் கோரி மனு

டங்ஸ்டன் சுரங்கத் திட்ட எதிா்ப்பு கூட்டமைப்பு நிா்வாகி மீது பதிவு செய்யப்பட்ட தீண்டாமை வன்கொடுமை தடுப்புச் சட்ட வழக்கை ரத்து செய்யக் கோரி பல்வேறு அமைப்புகள் சாா்பில் மாவட்ட ஆட்சியரிடம் திங்கள்கிழமை கோ... மேலும் பார்க்க

சாலை விபத்தில் தலைமைக் காவலா் உயிரிழப்பு

திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டை அருகே சாலை விபத்தில் உயிரிழந்த மதுரை தலைமைக் காவலா் உடலுக்கு காவல் துறை சாா்பில் 21 குண்டுகள் முழங்க இறுதி மரியாதை செலுத்தப்பட்டது. மதுரை மாடக்குளம் பகுதியைச் சோ்ந்த... மேலும் பார்க்க