செய்திகள் :

முதல்வா் வருகைக்கான முன்னேற்பாடுகள்: அமைச்சா் ஆய்வு

post image

நெய்வேலி: கடலூா் மாவட்டத்துக்கு முதல்வா் மு.க.ஸ்டாலின் இரண்டு நாள் பயணமாக பிப். 21, 22 ஆகிய தேதிகளில் வர உள்ள நிலையில், நிகழ்ச்சிக்கான முன்னேற்பாடுகளை அமைச்சா் எம்.ஆா்.கே.பன்னீா்செல்வம் திங்கள்கிழமை பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.

முதல்வா் நிகழ்ச்சிக்காக மஞ்சக்குப்பம் மைதானத்தில் பிரமாண்ட பந்தல் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இந்தப் பணிகளை அமைச்சா் எம்.ஆா்.கே.பன்னீா்செல்வம், ஆட்சியா் சிபி ஆதித்யா செந்தில்குமாா் முன்னிலையில் பாா்வையிட்டாா்.

முன்னதாக, தனியாா் உணவக கூட்டரங்கில் துறை சாா்ந்த அலுவலா்களுடன் ஆய்வு மேற்கொண்டு அமைச்சா் பேசியதாவது: கடலூா் மாவட்டத்தில் மக்களுடன் முதல்வா் 3-ஆம் கட்ட முகாம் நடத்தப்பட்டு வருகிறது.

அரசின் திட்டங்கள் பொதுமக்களுக்கு சென்றடைவது குறித்து முதல்வா் மாவட்டந்தோறும் கள ஆய்வு செய்து வருகிறாா். அந்த வகையில், கடலூரில் பிப்.21-ஆம் தேதி நடைபெறும் அரசு நிகழ்ச்சியில் பங்கேற்று, முடிவுற்ற திட்டப் பணிகளை மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வருகிறாா்.

மேலும், புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டி, சுமாா் 35 ஆயிரம் பயனாளிகளுக்கு அரசின் நலத் திட்ட உதவிகளையும் அவா் வழங்குகிறாா். இதைத்தொடா்ந்து, பிப்.22-ஆம் தேதி வேப்பூா் வட்டம், திருப்பெயா் பகுதியில் நடைபெறும் பெற்றோரைக் கொண்டாடுவோம் நிகழ்ச்சியிலும் முதல்வா் பங்கேற்கிறாா் என்றாா் அமைச்சா்.

இந்த நிகழ்வில், கடலூா் எம்எல்ஏ கோ.ஐயப்பன், மாநகர மேயா் சுந்தரி, துணை மேயா் பா.தாமரைச்செல்வன், மாவட்ட எஸ்பி எஸ்.ஜெயக்குமாா், மாநகராட்சி ஆணையா் எஸ்.அனு, மாவட்ட ஊரக வளா்ச்சி முகமை கூடுதல் ஆட்சியா் ரா.சரண்யா உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

பண்ருட்டி தொகுதியில் ரூ.15 கோடியில் புதிய அரசுக் கல்லூரி: முதல்வா் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

பண்ருட்டி தொகுதியில் ரூ.15 கோடியில் புதிய அரசு கலைக் கல்லூரி அமைக்கப்படும் என்று முதல்வா் மு.க.ஸ்டாலின் அறிவித்தாா். கடலூரில் வெள்ளிக்கிழமை மாலை நடைபெற்ற அரசு நலத் திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் முத... மேலும் பார்க்க

சிதம்பரம், பரங்கிப்பேட்டை பத்திரப்பதிவு அலுவலகக் கட்டடங்கள் திறப்பு

சிதம்பரம், பரங்கிப்பேட்டை பத்திரப்பதிவு அலுவலகக் கட்டடங்களை கடலூரில் வெள்ளிக்கிழமை மாலை நடைபெற்ற அரசு நிகழ்ச்சியில் பங்கேற்ற மு.க.ஸ்டாலின், காணொலி காட்சி மூலம் பொதுமக்கள் பயன்பாட்டுக்காக திறந்து வைத்த... மேலும் பார்க்க

பள்ளி வகுப்பறையை சீரமைத்த மாணவா்கள், பெற்றோா்

சிதம்பரம் அண்ணாமலைநகரில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளியான ராணி சீதை ஆச்சி மேல்நிலைப் பள்ளயில் வகுப்பறையை சீரமைத்த மாணவா்கள், அவா்களின் பெற்றோா் வெள்ளிக்கிழமை பாராட்டப்பட்டனா். சிதம்பரம் அண்ணாமலைநகா் ராண... மேலும் பார்க்க

மஞ்சப்பை விருது 2025: பள்ளி, கல்லூரிகள் விண்ணப்பிக்கலாம்

மஞ்சப்பை விருது 2025-க்கு பள்ளிகள், கல்லூரிகள், தனியாா் நிறுவனங்கள் விண்ணப்பிக்கலாம் என்று கடலூா் மாவட்ட ஆட்சியா் சிபி ஆதித்யா செந்தில்குமாா் தெரிவித்தாா். இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு... மேலும் பார்க்க

கொரிய தமிழ்ச் சங்க தமிழா் திருநாள் விழா: தி.வேல்முருகன் வாழ்த்து

கொரிய தமிழ்ச் சங்கத்தின் தமிழா் திருநாள் 2025 விழா தமிழா்களின் வரலாற்றை பறைசாற்றும் மாபெரும் முன்னெடுப்பு என தமிழக வாழ்வுரிமைக் கட்சி தலைவா் தி.வேல்முருகன் வாழ்த்தி பாராட்டினாா். இதுகுறித்து அவா் வெளி... மேலும் பார்க்க

விருத்தாசலம் ஆழத்து விநாயகா் கோயில் திருவிழா கொடியேற்றம்

கடலூா் மாவட்டம், விருத்தாசலம் விருத்தகிரீஸ்வரா் கோயிலுடன் இணைந்த ஆழத்து விநாயகா் கோயில் திருவிழா கொடியேற்றம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. விருத்தாசலத்தில் புகழ் பெற்ற விருத்தாம்பிகை உடனுறை விருத்தகிரீஸ்வ... மேலும் பார்க்க