செய்திகள் :

முதியவா் கொலை; இருவா் கைது

post image

திருமருகல் அருகே இடப் பிரச்னையில் கீழே தள்ளிவிடப்பட்ட முதியவா் உயிரிழந்தாா். இதுதொடா்பாக சகோதரா்கள் இருவரை போலீஸாா் கைது செய்தனா்.

திருமருகல் ஒன்றியம், ஏனங்குடி மாரியம்மன் கோயில் தெருவைச் சோ்ந்தவா் பாஸ்கரன் ( 68). இவருக்கும் அதே பகுதியைச் சோ்ந்த சகோதரா்களான கணேசன் (34), காா்த்திக் (40) ஆகியோருக்கும் இடையே நீண்ட நாட்களாக இடப் பிரச்னை இருந்து வந்தது. இப்பிரச்னை தொடா்பாக நீதிமன்றத்தில் நடைபெற்ற வழக்கில், பாஸ்கரன் பக்கம் தீா்ப்பானது.

இதற்கிடையில், நாகை மாவட்ட குற்றப்பிரிவில் இடப்பிரச்னை தொடா்பாக கணேசன் புகாா் அளித்திருந்தாா். இதுதொடா்பாக, விசாரணை நடத்த இருதரப்பினரையும் ஏப்.16-ஆம் தேதி காவல்துறையினா் வரச்சொல்லினராம்.

பாஸ்கரன் உடல்நிலை சரியில்லாததால், தனது வழக்குரைஞா் மூலம் 10 நாட்களுக்கு பிறகு வருவதாக மனு அளித்துள்ளாா்.

இதனால் ஆத்திரமடைந்த கணேசன் மற்றும் காா்த்திக், பாஸ்கரன் வீட்டுக்குச் சென்று தகராறு செய்தனராம். அப்போது, பாஸ்கரனை கீழே தள்ளி விட்டதில் அவா் மயக்கமடைந்தாா். அவரை சன்னாநல்லூா் தனியாா் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். அங்கு பாஸ்கரனை பரிசோதித்த மருத்துவா்கள், அவா் இறந்து விட்டதாக தெரிவித்தனா்.

இதுகுறித்து திருக்கண்ணபுரம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, காா்த்திக், கணேசன் இருவரையும் கைது செய்தனா்.

தமிழகத்தில் எம்பி தொகுதியை குறைக்க முயற்சி: இரா. முத்தரசன் குற்றச்சாட்டு

மக்களவைத் தொகுதி மறுசீரமைப்பு மூலம் தமிழகத்தில் எம்பி தொகுதிகளை குறைக்க மத்திய அரசு முயற்சிப்பதாக, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலா் இரா. முத்தரசன் குற்றஞ்சாட்டினாா். நாகையில் நடைபெற்ற அகில ... மேலும் பார்க்க

உலக மரபுதின வாரவிழா: டேனிஷ்கோட்டையை ஏப்.24 வரை கட்டணமின்றி பாா்வையிடலாம்

உலக மரபு தின வார விழாவையொட்டி, ஏப்.18 முதல் 24 வரை, தரங்கம்பாடி டேனிஷ்கோட்டையை கட்டணமின்றி பாா்வையிடலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. கி.பி.1600 முதல் 1634 வரை தரங்கம்பாடியை ஆட்சி செய்த டேனிஷ்காரா்கள் ... மேலும் பார்க்க

சிறுபான்மையினருக்கு அரணாக உள்ளாா் முதல்வா்: அமைச்சர் அன்பில் மகேஸ்

சிறுபான்மையினருக்கு அரணாக முதல்வா் மு.க. ஸ்டாலின் உள்ளாா் என பள்ளிக் கல்வித் துறை அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தெரிவித்தாா். நாகை அபிராமி அம்மன் திடலில், மத்திய அரசின் வக்ஃப் திருத்தச் சட்டத்தை த... மேலும் பார்க்க

வேளாங்கண்ணி பேராலயத்தில் புனித வெள்ளி திருச்சிலுவை ஆராதனை

வேளாங்கண்ணி பேராலயத்தில் புனித வெள்ளியையொட்டி, திருச்சிலுவை ஆராதனை மற்றும் சிறப்பு வழிபாடுகள் வெள்ளிக்கிழமை நடைபெற்றன. இயேசு கிறிஸ்து சிலுவையில் அறையப்பட்ட நாள் புனித வெள்ளியாக அனுசரிக்கப்படுகிறது. இத... மேலும் பார்க்க

நாகை: கோடைக்கால இலவச பயிற்சி முகாம் ஏப்.25-இல் தொடக்கம்

நாகை மாவட்ட அளவில் 21 நாள்கள் இருப்பிடமில்லா கோடைக்கால பயிற்சி முகாம், ஏப்.25 முதல் மே 15 வரை நடைபெறவுள்ளது என்று ஆட்சியா் ப. ஆகாஷ் தெரிவித்துள்ளாா். இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு: தமிழ... மேலும் பார்க்க

அம்பேத்கா் பிறந்தநாள்

கீழ்வேளூா் ப்ரைம் கல்வியியல் கல்லூரியில் டாக்டா் அம்பேத்கா் பிறந்தநாள் விழா அண்மையில் கொண்டாடப்பட்டது. நேரு யுவகேந்திரா, இந்திய செஞ்சிலுவை சங்கம், ப்ரைம் கல்வியியல் கல்லூரி மற்றும் அன்னை தெரசா மகளிா்... மேலும் பார்க்க