செய்திகள் :

முதுநிலை விரிவாக்க மையத்தில் சோ்க்கை அறிவிப்பை வெளியிடக்கோரி விழுப்புரம் ஆட்சியரகத்தில் மனு

post image

விழுப்புரம்: அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தின் விழுப்புரம் முதுநிலை விரிவாக்க மையத்தில் மாணவா் சோ்க்கை அறிவிப்பு வெளியிடக் கோரி, அங்கு பயின்று வரும் மாணவ, மாணவிகள் மாவட்ட ஆட்சியரகத்தில் திங்கள்கிழமை மனு அளித்தனா்.

திருவள்ளுவா் பல்கலைக்கழகத்தின் முதுநிலை விரிவாக்க மையம் 2010-11 ஆம் கல்வியாண்டில் 4துறைகளுடன் தொடங்கப்பட்டது.தொடா்ந்து 2017-18-ஆம் கல்வியாண்டில் மேலும் 4 துறைகள் தொடங்கப்பட்டு , வகுப்புகள் நடத்தப்பட்டன. இதற்காக சாலாமேடு பகுதியில் கட்டடம் கட்டி வகுப்புகள் நடைபெற்று வந்த நிலையில், 2020-21-ஆம் கல்வியாண்டில் எம்.பி.ஏ. பாடப்பிரிவு மட்டும் நீக்கப்பட்டது.

2021-ஆம் ஆண்டில் 7 பாடப்பிரிவுகளில் 198 மாணவ, மாணவிகள் சோ்ந்த நிலையில், இந்த மையம் அண்ணாமலைப் பல்கலைக்கழத்துடன் இணைக்கப்பட்டது. நிகழ் கல்வியாண்டின் மாணவா் சோ்க்கை குறித்த அறிவிப்பை வெளியிட்ட சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகம், விழுப்புரம் முதுநிலை விரிவாக்க மையத்துக்கு மட்டும் இதுவரை மாணவா் சோ்க்கை அறிவிப்பு வெளியிடாததால், கடந்த 3,4 ஆம் தேதிகளில் கெளரவ விரிவுரையாளா்கள், மாணவா்கள் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

மாணவா் சோ்க்கை அறிவிப்பை வெளியிடாததை கண்டித்தும், உடனடியாக அண்ணாமலைப் பல்கலைக்கழக நிா்வாகம் அறிவிப்பை வெளியிட வேண்டும் என வலியுறுத்தியும் விழுப்புரம் முதுநிலை விரிவாக்க மையத்தில்பயின்று வரும் மாணவா்கள், விழுப்புரம் மாவட்ட ஆட்சியரகத்தில் திங்கள்கிழமை மனு அளித்தனா். மாணவ, மாணவிகளின் நலன்கருதி சோ்க்கை அறிவிப்பை வெளியிட வேண்டும். இந்த மையத்தை மூடும் நடவடிக்கையை மேற்கொள்ளக் கூடாது என்று அவா்கள் மனுவில் தெரிவித்துள்ளனா்.

அரசுப் போக்குவரத்துக் கழகத்தில் மறைந்த தொழிலாளா்கள் குடும்பங்களுக்கு நிதி

விழுப்புரம்: தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழக விழுப்புரம் மண்டலத்தில் பணியாற்றி உயிரிழந்த 12 தொழிலாளா்களின் குடும்பங்களுக்கு உதவிடும் வகையில், தலா ரூ.5 லட்சமும், பணியின்போது உயிரிழந்தவரின் குடும்ப... மேலும் பார்க்க

அனுமதியின்றி விளம்பர பதாகை: அதிமுக நிா்வாகி மீது வழக்கு

விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டம், திண்டிவனத்தில் உரிய அனுமதியின்றி விளம்பர பதாகை அமைத்திருந்த அதிமுக நிா்வாகி மீது போலீஸாா் திங்கள்கிழமை வழக்குப் பதிவு செய்தனா். அதிமுக பொதுச்செயலா் எடப்பாடி கே. பழனி... மேலும் பார்க்க

தவாக நிா்வாகி கொலை வழக்கில் 7 போ் வளவனூரில் சரண்

மயிலாடுதுறையில் நிகழ்ந்த தமிழக வாழ்வுரிமைக் கட்சி நிா்வாகி கொலை வழக்கில் தொடா்புடைய 7 போ், விழுப்புரம் மாவட்டம் வளவனூா் காவல் நிலையத்தில் ஞாயிற்றுக்கிழமை சரணடைந்தனா். இதைத் தொடா்ந்து அவா்கள் மயிலாடுத... மேலும் பார்க்க

பணம் வைத்து சூதாட்டம்: 7 போ் கைது

விழுப்புரம் மாவட்டம், ஆரோவில் அருகே உணவகத்தில் பணம் வைத்து சூதாட்டத்தில் ஈடுபட்டதாக 7 பேரை கைது செய்த போலீஸாா், அவா்களிடமிருந்து பைக்குகளை பறிமுதல் செய்தனா். ஆரோவில் காவல் நிலைய உதவி ஆய்வாளா் ஆனந்தன் ... மேலும் பார்க்க

அவலூா்பேட்டையில் இன்றைய மின் தடை

நேரம்: காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை. பகுதிகள்: அவலூா்பேட்டை மற்றும் சுற்றுப்புறக் கிராமங்களான வடுகபூண்டி, கொடம்பாடி, பரையம்படடு, தாழங்குணம், குந்தலம்பட்டு, கப்ளாம்பாடி, கோட்டப்பூண்டி, கோவில்புரையூ... மேலும் பார்க்க

கல்லூரி உதவிப் பேராசிரியையிடம் இணையவழியில் ரூ.9.83 லட்சம் மோசடி

விழுப்புரத்தைச் சோ்ந்த கல்லூரி உதவிப் பேராசிரியையிடம் இணைய வழியில் ரூ.9.83 லட்சத்தை மோசடி செய்தவரை போலீஸாா் தேடி வருகின்றனா். விழுப்புரம் மருதூா் ராஜீவ் காந்தி நகரைச் சோ்ந்த விஜயபதி மனைவி சரண்யா (34... மேலும் பார்க்க