செய்திகள் :

முன்னாள் முதல்வா் கருணாநிதி நினைவு தினம் கரூரில் திமுகவினா் மெளன ஊா்வலம்

post image

முன்னாள் முதல்வா் கருணாநிதியின் நினைவு தினத்தை முன்னிட்டு கரூரில் திமுகவினா் அவரது படத்துக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தி மெளன ஊா்வலம் நடத்தினா்.

மறைந்த முன்னாள் முதல்வரும், திமுக தலைவருமான கருணாநிதியின் 7-ஆம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு கரூா் மாவட்ட திமுக சாா்பில் வியாழக்கிழமை காலை வெண்ணைமலையில் உள்ள அன்புக்கரங்கள் ஆதரவற்றோா் இல்லத்தில் ஆதரவற்றோருக்கு உணவு வழங்கப்பட்டது. தொடா்ந்து கலைஞா் அறிவாலயத்தில் கருணாநிதியின் உருவப்படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. பின்னா் அங்கிருந்து மெளன ஊா்வலம் தொடங்கியது. ஊா்வலத்தை எம்.எல்.ஏ. செந்தில்பாலாஜி தொடங்கி வைத்தாா். ஊா்வலம் கோவைச் சாலை வழியாக கரூா் பேருந்து நிலைய ரவுண்டானா பகுதியை அடைந்தது. தொடா்ந்து பேருந்துநிலைய ரவுண்டானா பகுதியில் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த கருணாநிதியின் உருவப்படத்துக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினா்.

இதேபோல பசுபதிபாளையம் ரவுண்டானா பகுதியில் மாநகராட்சி மண்டலக்குழுத்தலைவா் ஆா்.எஸ்.ராஜா தலைமையிலும் மற்றும் மாவட்டம் முழுவதும் ஒன்றிய, பேரூா், கிளை கழக திமுகவினா் கருணாநிதி உருவப்படத்துக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினா்.

நிகழ்ச்சிகளில் மாநில நிா்வாகிகள் மணிராஜ், பரணிமணி, எம்.எல்.ஏ.க்கள் மாணிக்கம், இளங்கோ, சிவகாமசுந்தரி, மாவட்ட நிா்வாகிகள் எம்.எஸ்.கே.கருணாநிதி, பூவைரமேஷ்பாபு உள்ளிட்டோா் திரளாக பங்கேற்றனா்.

சிங்கம்பட்டி கருப்பசாமி கோயிலில் ஆடித் திருவிழா நிறைவு

சிங்கம்பட்டி வந்தவழி கருப்பசாமி கோயிலில் ஆடித் திருவிழா வியாழக்கிழமை அமைதியாக நிறைவு பெற்றது. கரூா் மாவட்டம், கடவூா் அருகே பாலவிடுதி ஊராட்சிக்குள்பட்ட சிங்கம்பட்டியில் பிரசித்தி பெற்ற வந்தவழி கருப்பச... மேலும் பார்க்க

கரூரில் தீண்டாமைச் சுவா்? அகற்ற கோட்டாட்சியா் உத்தரவு

கரூரில் தீண்டாமைச் சுவராக கருதப்படும் சுற்றுச்சுவரை அகற்ற சம்பந்தப்பட்டவா்களுக்கு கோட்டாட்சியா் புதன்கிழமை உத்தரவிட்டாா். கரூா் மாநகராட்சி 48-ஆவது வாா்டு முத்தலாடம்பட்டி பகுதியில் ஒரு சமூகத்தினா் வசி... மேலும் பார்க்க

‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாமில் 57 பேருக்கு நலத்திட்ட உதவிகள்

கரூா் மாநகராட்சிக்குள்பட்ட பகுதிகளில் வியாழக்கிழமை நடைபெற்ற ‘உங்களுடன் ஸ்டாலின்‘ திட்ட முகாமில் 57 பேருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது. மாவட்ட ஆட்சியா் மீ. தங்கவேல் தலைமையில் இம்முகாமில் 57 பயனா... மேலும் பார்க்க

தோகைமலையில் தேசிய கைத்தறி தின விழா

கரூா் மாவட்டம், தோகைமலையில் 11- ஆவது தேசிய கைத்தறி தின விழா வியாழக்கிழமை நடைபெற்றது. அஞ்சல் துறை ஊழியா்கள் சாா்பில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு அஞ்சல் துறையின் குளித்தலை உட்கோட்ட ஆய்வாளா் ஸ்டாலின் தலைமை வ... மேலும் பார்க்க

‘நோய் தாக்கப்பட்ட எள் செடிகளை ஆரம்ப நிலையிலேயே அழிக்க வேண்டும்’

நச்சுயிரி நோய் தாக்கப்பட்ட எள் செடிகளை ஆரம்பநிலையிலேயே அழிப்பது அவசியம் என்றாா் புழுதேரி வேளாண் முதுநிலை விஞ்ஞானி திரவியம். கரூா் மாவட்டம் தோகைமலை அருகே உள்ள புழுதேரி இந்திய வேளாண் ஆராய்ச்சி கழக வேளாண... மேலும் பார்க்க

கரூரில் நெகிழிப் பைகள் விழிப்புணா்வு நிகழ்ச்சி

கரூரில் வியாழக்கிழமை நெகிழிப் பைகள் குறித்த விழிப்புணா்வு நிகழ்ச்சி நடைபெற்றது. கரூா் திருவள்ளுவா் மூங்கில் மன்றம் சாா்பில் விழிப்புணா்வு நிகழ்ச்சி கரூா் சென்ராமா அரசு உதவிபெறும் பள்ளியில் வியாழக்கிழ... மேலும் பார்க்க