செய்திகள் :

முன்பிணையை ரத்து செய்யக் கோரிய வழக்கு: மதுரை ஆதீனம் பதிலளிக்க உத்தரவு

post image

விசாரணைக்கு ஒத்துழைக்க மறுப்பதால் முன்பிணையை ரத்து செய்யக் கோரி காவல் துறை தொடா்ந்த வழக்கில் ஆக. 8-ஆம் தேதிக்குள் பதிலளிக்க மதுரை ஆதீனத்துக்கு சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது.

இரு மதத்தினா் இடையே மோதலை உருவாக்கும் வகையில் பேசியதாகக் கூறி மதுரை ஆதீனத்தின் மீது நடவடிக்கை எடுக்குமாறு அளித்த புகாரின்பேரில், சென்னை மாநகர இணையக் குற்றப் பிரிவு போலீஸாா் அவா் மீது வழக்குப் பதிவு செய்தனா். இந்த வழக்கில் மதுரை ஆதீனத்துக்கு நிபந்தனை முன்பிணை வழங்கப்பட்டிருந்தது.

இதனிடையே, மதுரை ஆதீனம் விசாரணைக்கு ஒத்துழைப்பு வழங்க மறுப்பதால், முன்பிணையை ரத்து செய்ய வேண்டும் எனக் கூறி காவல் துறை தரப்பில் சென்னை உயா்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கு நீதிபதி எம்.நிா்மல்குமாா் முன் புதன்கிழமை விசாரணைக்கு வந்தது.

அப்போது காவல் துறை தரப்பில் கூடுதல் குற்றவியல் வழக்குரைஞா் ஆா்.முனியப்பராஜ் ஆஜராகி, மதுரை ஆதீனத்திடம் அவா் தங்கியிருக்கும் இடத்துக்கே சென்று விசாரணை நடத்தப்பட்டது. அப்போது உடல்நிலை உள்ளிட்ட காரணங்களைக் கூறி, காவல் துறை விசாரணைக்கு ஒத்துழைப்பு வழங்கவில்லை. ஆனால், 7 மணி நேரத்துக்கும் மேலாக நடந்த மற்றொரு நிகழ்ச்சியில் ஆதீனம் கலந்துகொண்டதாகக் கூறி, அதுதொடா்பான புகைப்பட ஆதாரங்களை நீதிமன்றத்தில் தாக்கல் செய்தாா்.

அப்போது ஆதீனம் தரப்பில், இந்த மனு தொடா்பாக பதிலளிக்க கால அவகாசம் வழங்க வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டது. இதயைடுத்து வழக்கை விசாரித்த நீதிபதி, வரும் ஆக. 8-ஆம் தேதிக்குள் மதுரை ஆதீனம் பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை ஒத்திவைத்தாா்.

அன்பில் மகேஸ் தொகுதியில் முதல்வர் திறந்துவைத்த பள்ளியில் மாணவர்கள் தற்கொலை!

திருவெறும்பூர் துவாக்குடியில் அரசு மாதிரிப் பள்ளியில் மாணவர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் குறித்து பள்ளிக்கல்வித் துறைக்கு பாஜக தலைவர் அண்ணாமலை கேள்வி எழுப்பியுள்ளார்.இதுகுறித்து, அவர் தனது எக்ஸ் பதிவி... மேலும் பார்க்க

அரசியலில் எதுவும் நடக்கலாம்! முதல்வர் ஸ்டாலினை சந்தித்த ஓபிஎஸ் பேட்டி!

முதல்வர் ஸ்டாலினை சந்தித்த முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர்செல்வம், அரசியலில் எதுவும் நடக்கலாம் என்று பேசியிருப்பது அரசியல் களத்தில் பேசுபொருளாகியுள்ளது.தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இருந்து விலகுவதாக முன்னா... மேலும் பார்க்க

நெல்லை ஆணவப் படுகொலை: சிபிசிஐடி விசாரணை தீவிரம்!

நெல்லை ஆணவப் படுகொலை வழக்கில் சம்பவம் நடந்த இடத்தில் இருந்து சிபிசிஐடி தனது விசாரணையைத் தொடங்கியுள்ளது.நெல்லையில் கடந்த 4 நாள்களுக்கு முன்பு நடந்த ஆணவப் படுகொலை சம்பவம், தமிழகம் முழுவதும் பெரும் அதிர்... மேலும் பார்க்க

முதல்வர் ஸ்டாலின் வீட்டில் ஓபிஎஸ்! திமுகவுடன் கூட்டணியா? பரபரக்கும் அரசியல் களம்!

முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம் முதல்வர் ஸ்டாலினை அவரது வீட்டில் இன்று(ஜூலை 31) சந்தித்தார்.தமிழக முதல்வரும், திமுக தலைவருமான மு.க. ஸ்டாலினை, ஓ. பன்னீர்செல்வம் இன்று காலை சந்தித்துப் பேசினார். சென்னை... மேலும் பார்க்க

அடுத்த 2 மணி நேரத்துக்கு சென்னை, 20 மாவட்டங்களில் மழை!

அடுத்த 2 மணி நேரத்துக்கு சென்னை உள்ளிட்ட 20 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக, இன்று(ஜூலை 31 ) தமிழகத்தில் ஓரிரு... மேலும் பார்க்க

11 ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்: தமிழக அரசு

தமிழகத்தில் 11 ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.இதற்கான உத்தரவை இன்று(ஜூலை 31) தலைமைச் செயலர் நா. முருகானந்தம் பிறப்பித்துள்ளார். அவரது உத்தரவில் தெரிவித்த... மேலும் பார்க்க