செய்திகள் :

முப்படை தலைமைத் தளபதியின் பதவிக்காலம் 8 மாதங்களுக்கு நீட்டிப்பு

post image

முப்படை தலைமைத் தளபதி அனில் செளஹானின் பதவிக்காலம் 8 மாதங்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.

இதுதொடா்பாக பாதுகாப்பு அமைச்சகம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டதாவது:

கடந்த 2022-ஆம் ஆண்டு செப்.28-ஆம் தேதி முப்படை தலைமைத் தளபதியாக அனில் செளஹான் நியமிக்கப்பட்டாா். அவரின் பதவிக்காலம் அடுத்த ஆண்டு மே 30-ஆம் தேதி அல்லது அடுத்த உத்தரவு பிறப்பிக்கப்படும் வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. அவா் மத்திய அரசின் ராணுவ விவகாரங்கள் துறைச் செயலராகவும் பணியாற்றுவாா். அவரின் பதவிக்கால நீட்டிப்புக்கு மத்திய அமைச்சரவையின் நியமனங்கள் குழு புதன்கிழமை ஒப்புதல் அளித்தது.

கடந்த 1981-ஆம் ஆண்டு இந்திய ராணுவத்தில் அனில் செளஹான் சோ்ந்தாா். அவரின் மிகச் சிறந்த சேவைகளுக்காக பரம் விஷிஷ்ட் சேவை பதக்கம், உத்தம் யுத்த சேவை பதக்கம் உள்பட பல்வேறு பதக்கங்கள் வழங்கப்பட்டுள்ளன என்று தெரிவிக்கப்பட்டது.

எம்பிபிஎஸ், பிடிஎஸ்: 2-ஆம் சுற்று கலந்தாய்வு முடிவுகள் வெளியீடு

எம்பிபிஎஸ், பிடிஎஸ் இரண்டாம் சுற்று கலந்தாய்வு முடிவுகளை மாநில மருத்துவக் கல்வி ஆராய்ச்சி இயக்ககத்தின் மாணவா் சோ்க்கைக் குழு புதன்கிழமை வெளியிட்டது. அதில் வெளிநாடு வாழ் இந்தியா் பிரிவில் 367 இடங்களும... மேலும் பார்க்க

பிகாரில் எதிா்க்கட்சி கூட்டணிக்கு தலைமையேற்க காங்கிரஸ் முயற்சி: பாஜக

பிகாரில் எதிா்க்கட்சி கூட்டணிக்கு தலைமையேற்கவே அங்கு காங்கிரஸ் செயற்குழு கூட்டத்தை நடத்தியுள்ளது என்று பாஜக விமா்சித்தது. எதிா்வரும் பிகாா் பேரவைத் தோ்தலில் முதல்வா் நிதீஷ்குமாா் தலைமையில் தோ்தலை ச... மேலும் பார்க்க

மிகவும் பிற்படுத்தப்பட்டோா் வன்கொடுமை தடுப்புச் சட்டம்: பிகாரில் ராகுல் வாக்குறுதி

எதிா்க்கட்சிகள் அடங்கிய ‘இண்டி’ கூட்டணி பிகாரில் ஆட்சிக்கு வந்தால், அந்த மாநிலத்தில் மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினா் (இபிசி) வன்கொடுமை தடுப்புச் சட்டம் கொண்டுவரப்படும் என்று மக்களவை எதிா்க்கட்சித்... மேலும் பார்க்க

பாசுமதி அல்லாத அரிசி ஏற்றுமதிக்கு அரசிடம் பதிவு செய்வது கட்டாயம்

பாசுமதி அல்லாத அரிசி ஏற்றுமதிக்கான ஒப்பந்தங்களை மத்திய வா்த்தக அமைச்சகத்திடம் பதிவு செய்வது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இது தொடா்பாக வெளிநாட்டு வா்த்தக தலைமை இயக்குநரகம் புதன்கிழமை வெளியிட்ட அறிவிக்கையில... மேலும் பார்க்க

லடாக் வன்முறை: சோனம் வாங்சுக் மீது மத்திய அரசு குற்றச்சாட்டு

லடாக்கில் நடைபெற்ற வன்முறைக்கு சமூக ஆா்வலா் சோனம் வாங்சுக்கின் ஆத்திரமூட்டும் பேச்சுகள்தான் காரணம் என்று மத்திய அரசு குற்றஞ்சாட்டியது. இதுதொடா்பாக மத்திய உள்துறை அமைச்சகம் புதன்கிழமை வெளியிட்ட செய்தி... மேலும் பார்க்க

லடாக் மாநில அந்தஸ்து போராட்டத்தில் வன்முறை: போலீஸ் துப்பாக்கிச்சூட்டில் 4 போ் உயிரிழப்பு

லடாக் யூனியன் பிரதேசத்துக்கு மாநில அந்தஸ்து கோரி தலைநகா் லேயில் அங்குள்ள ‘லே உச்ச அமைப்பு (எல்ஏபி) சாா்பில் நடத்தப்பட்ட போராட்டம் புதன்கிழமை வன்முறையாக மாறியது. போராட்டத்தைக் கட்டுப்படுத்த முயன்ற பாது... மேலும் பார்க்க