செய்திகள் :

மும்பை இந்தியன்ஸை வீழ்த்தியது எப்படி? என்ன சொல்கிறார் ரச்சின் ரவீந்திரா?

post image

முதல் போட்டியில் மும்பை இந்தியன்ஸை வீழ்த்தியது குறித்து சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீரர் ரச்சின் ரவீந்திரா பேசியுள்ளார்.

ஐபிஎல் தொடரின் 18-வது சீசன் நேற்று முன் தினம் (மார்ச் 22) தொடங்கியது. ஐபிஎல் தொடரில் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நேற்று நடைபெற்ற போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதின.

இதையும் படிக்க: ருதுராஜ் எடுக்கும் முடிவுகளின் பின்னணியில் நான் இருக்கிறேனா? எம்.எஸ்.தோனி கூறியதென்ன?

ரசிகர்கள் மிகுந்த ஆவலோடு எதிர்பார்த்துக் காத்திருந்த இந்தப் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் மும்பை இந்தியன்ஸை வீழ்த்தியது. சென்னை சூப்பர் கிங்ஸில் பந்துவீச்சில் நூர் அகமது அபாரமாக செயல்பட்டார். பேட்டிங்கில் ரச்சின் ரவீந்திரா சிறப்பாக செயல்பட்டார்.

சுழற்பந்துவீச்சாளர்களுக்கு புகழாரம்

இந்த ஐபிஎல் தொடரை வெற்றியுடன் தொடங்கிய நிலையில், மும்பை இந்தியன்ஸுக்கு எதிரான போட்டியில் அபாரமாக பந்துவீசிய சிஎஸ்கேவின் சுழற்பந்துவீச்சாளர்களுக்கு ரச்சின் ரவீந்திரா புகழாரம் சூட்டியுள்ளார்.

நூர் அகமது

மும்பைக்கு எதிரான போட்டியில் வெற்றி பெற்றது குறித்து ரச்சின் ரவீந்திரா பேசியதாவது: ரவிச்சந்திரன் அஸ்வின் உலகத் தரத்திலான சிறந்த பந்துவீச்சாளர். அவருக்கு எதிராக நான் விளையாடியுள்ளேன். அவருடைய அனுபவம், கிரிக்கெட் குறித்த அறிவு, பந்துவீச்சு தொடர்பாக அவர் கொடுக்கும் அறிவுரை அனைத்தும் சிறப்பாக இருக்கும். ஆட்டத்தினை நன்றாக புரிந்துகொண்டு அதற்கேற்ப சிறப்பாக சிந்தித்து செயல்படக் கூடியவர். அவரைப் போன்ற அனுபவம் வாய்ந்த வீரர்களுடன் சிஎஸ்கே அணியில் இணைந்து விளையாடுவதை கௌரவமாக கருதுகிறேன்.

இதையும் படிக்க: வர்ணனையில் இனவெறி கருத்து! சிக்கலில் ஹர்பஜன் சிங்!

சிஎஸ்கேவில் சுழற்பந்துவீச்சு வரிசை மிகவும் வலுவாக உள்ளது. அணியில் சுழற்பந்துவீச்சு வலுவாக இருப்பது அணி சமபலத்துடன் இருப்பதை உறுதி செய்கிறது. சுழற்பந்துவீச்சாளர்கள் சிறப்பாக செயல்பட்டது அணியின் வெற்றிக்கு பெரிதும் உதவியது என்றார்.

மும்பைக்கு எதிரான நேற்றையப் போட்டியில் சிறப்பாக விளையாடிய ரச்சின் ரவீந்திரா 45 பந்துகளில் 65 ரன்கள் எடுத்து கடைசி வரை களத்தில் இருந்தார்.

எனது சதத்தைப் பற்றி கவலைப்பட வேண்டாம் என்று கூறிய ஷ்ரேயாஸ்! - மனம் திறந்த ஷஷாங்

என்னுடைய சதத்தைப் பற்றி கவலைப்பட வேண்டாம் என ஷ்ரேயாஸ் கூறியதாக பஞ்சாப் அதிரடி ஆட்டக்காரர் ஷஷாங் சிங் தெரிவித்துள்ளார். பஞ்சாப் - குஜராத் அணிகள் மோதிய ஐபிஎல் தொடரின் 5-வது லீக் போட்டி குஜராத் மாநிலம் அ... மேலும் பார்க்க

அறிமுகமான 3 அணிகளுக்கும் வெற்றியைப் பெற்றுத் தந்த ஸ்ரேயாஸ் ஐயர்!

அறிமுகமான மூன்று அணிகளுக்கும் முதல் போட்டியிலேயே வெற்றியைப் பெற்றுத் தந்து பஞ்சாப் கிங்ஸ் கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் புதிய சாதனை ஒன்றைப் படைத்துள்ளார். பஞ்சாப் - குஜராத் அணிகள் மோதிய ஐபிஎல் தொடரின் 5-வது ல... மேலும் பார்க்க

இம்பாக்ட் பிளேயரின் இலக்கணம்

சென்னை எம்.ஏ. சிதம்பரம் கிரிக்கெட் மைதானத்தில் கடந்த ஞாயிற்றுக்கிழமை, மும்பை இண்டியன்ஸ் நிா்ணயித்த வெற்றி இலக்கை நோக்கி சென்னை சூப்பா் கிங்ஸ் விளையாடிக் கொண்டிருந்தது. தொடக்கத்திலேயே ஒரு விக்கெட்டை இழ... மேலும் பார்க்க

ஐபிஎல்: குஜராத்தை வீழ்த்தியது பஞ்சாப்

குஜராத் டைடன்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் பஞ்சாப் கிங்ஸ் அணி 11 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. ஐபிஎல் தொடரின் 5ஆவது ஆட்டத்தில் பஞ்சாப், குஜ்ராத் அணிகள் விளையாடின. டாஸ் வென்ற குஜராத் டைட்ட... மேலும் பார்க்க

16 சிக்ஸர்கள், 22 பவுண்டரிகள்: பஞ்சாப் 243 ரன்கள் குவிப்பு!

பஞ்சாப் கிங்ஸ் அணி குஜராத் டைட்டன்ஸுக்கு 244 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ஐபிஎல் தொடரில் 5ஆவது போட்டியில் பஞ்சாப், குஜ்ராத் அணிகள் விளையாடி வருகின்றன. டாஸ் வென்ற குஜராத் டைட்டன்ஸ் அணி பந்துவீச்சை ... மேலும் பார்க்க

முதல் போட்டி தோல்வி குறித்து அதிகம் கவலைப்படவில்லை: கேகேஆர் பயிற்சியாளர்

ஐபிஎல் தொடரில் முதல் போட்டியில் ஏற்பட்ட தோல்வி குறித்து அதிகம் கவலைப்படவில்லை என கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் பந்துவீச்சு பயிற்சியாளர் பரத் அருண் தெரிவித்துள்ளார்.ஐபிஎல் தொடரின் 18-வது சீசன் அண்மையி... மேலும் பார்க்க