செய்திகள் :

எனது சதத்தைப் பற்றி கவலைப்பட வேண்டாம் என்று கூறிய ஷ்ரேயாஸ்! - மனம் திறந்த ஷஷாங்

post image

என்னுடைய சதத்தைப் பற்றி கவலைப்பட வேண்டாம் என ஷ்ரேயாஸ் கூறியதாக பஞ்சாப் அதிரடி ஆட்டக்காரர் ஷஷாங் சிங் தெரிவித்துள்ளார்.

பஞ்சாப் - குஜராத் அணிகள் மோதிய ஐபிஎல் தொடரின் 5-வது லீக் போட்டி குஜராத் மாநிலம் அகமதாபாத் நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற்றது. இந்தப் போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய பஞ்சாப் அணி 243 ரன்கள் குவித்தது.

சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஷ்ரேயாஸ் ஐயர் 97* ரன்கள் குவித்து களத்தில் இருந்தார். சதம் அடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் ஷஷாங் சிங் கடைசி ஓவரில் 5 பவுண்டரிகள் அடித்த காட்டிய அதிரடியால் அவரால் சதத்தை எட்ட முடியவில்லை. 16 பந்துகளில் 44* ரன்கள் குவித்து ஷஷாங் களத்தில் இருந்தார். பரபரப்பான இந்த ஆட்டத்தில் பஞ்சாப் அணி 11 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. அரைசதம் விளாசிய ஷ்ரேயாஸ் ஆட்டநாயகன் விருதை வென்று அசத்தினார்.

இதுபற்றி அதிரடி ஆட்டக்காரர் ஷஷாங் சிங் கூறுகையில், “நேர்மையாக கூறுவதென்றால், நான் ஸ்கோர் கார்டைப் பார்க்கவே இல்லை. முதல் பந்தில் பவுண்டரி அடித்தப்பின் தான், ஸ்கோர் போர்டை பார்த்தேன். நான் அவரிடம் எதுவும் கூறவில்லை. அவருக்கு சிங்கிள் கொடுக்க வேண்டும் என்று நினைத்தேன். ஆனால், அவரே வந்து என்னிடம், என்னுடைய சதத்தைப் பற்றி கவலைப்பட வேண்டாம் என்று கூறினார்.

டி20 போட்டிகளில் சதம் அடிப்பதென்பது அவ்வளவு எளிதானது கிடையாது. ஆனால், அவர் அப்படி சொல்வதற்கு பெரிய மன தைரியம் வேண்டும்.

பௌலரை அடித்து விளையாடு என்றார். அனைத்து பந்தையும் அடித்து ஆடு. பவுண்டரி அல்லது சிக்ஸர் விளாசு என்றும் கூறினார். அது எனக்கு இன்னும் நம்பிக்கையை அளித்தது. இந்த மாதிரியான சூழலில் தன்னலமற்றவராக இருப்பது கடினம்” எனத் தெரிவித்தார்.

இதையும் படிக்க: அறிமுகமான 3 அணிகளுக்கும் வெற்றியைப் பெற்றுத் தந்த ஷ்ரேயாஸ் ஐயர்!

தோனி முன்னதாக களமிறங்க வேண்டும்: வாட்சன் பேட்டி

நேற்றிரவு சேப்பாக்கில் நடந்த போட்டியில் 17 ஆண்டுகளுக்குப் பிறகு சிஎஸ்கே அணி ஆர்சிபியிடம் தோல்வியைச் சந்தித்தது.முதலில் பேட்டிங் செய்த ஆர்சிபி 196/7 ரன்கள் எடுக்க அடுத்து விளையாடிய சிஎஸ்கே 20 ஓவர்களில்... மேலும் பார்க்க

ஐபிஎல் போட்டி அட்டவணையில் திடீர் மாற்றம்!

நடப்பு ஐபிஎல் தொடரில் கொல்கத்தாவிலுள்ள ஈடன் கார்டன்ஸ் திடலில் ஏப். 6-ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை நடைபெறுவதாக இருந்த கொல்கத்தா நைட் ரைடர்ஸ் - லக்னௌ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகளுக்கு இடையிலான ஆட்டம், ஏப். 8-ஆம்... மேலும் பார்க்க

தோல்வியிலும் நற்செய்தி: சிஎஸ்கேவுக்காக தோனி புதிய சாதனை!

சேப்பாக்கில் நேற்றிரவு நடந்த போட்டியில் 17 ஆண்டுகளுக்குப் பிறகு சேப்பாக்கத்தில் சிஎஸ்கே அணி ஆர்சிபியிடம் தோல்வியை சந்தித்தது. ஆனால், தோனி புதிய சாதனை ஒன்றினை நிகழ்த்தியுள்ளார். முதலில் பேட்டிங் செய்த ... மேலும் பார்க்க

தோல்விக்குக் காரணம் தோனியா? சிஎஸ்கே ரசிகர்கள் விமர்சனம்!

17 ஆண்டுகளுக்குப் பிறகு சேப்பாக்கத்தில் சிஎஸ்கே அணி ஆர்சிபியிடம் தோல்வியை சந்தித்தது. இதனால் சிஎஸ்கே ரசிகர்கள் சோகத்தில் மூழ்கியுள்ளார்கள். முதலில் பேட்டிங் செய்த ஆர்சிபி 196/7 ரன்கள் எடுத்தது. அடுத்த... மேலும் பார்க்க

197 ரன்கள் இலக்கு நிர்ணயித்த ஆர்சிபி; விக்கெட்டுகளை இழந்து திணறும் சிஎஸ்கே!

சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிராக முதலில் விளையாடிய ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி 7 விக்கெட்டுகளை இழந்து 196 ரன்கள் எடுத்துள்ளது.ஐபிஎல் தொடரில் சென்னை சேப்பாக்கத்தில் நடைபெற்று வரும் இன்றையப் போட்... மேலும் பார்க்க

சிக்ஸர் அடிக்க திட்டமிடுவது கிடையாது; அதிரடியில் மிரட்டிய நிக்கோலஸ் பூரன்!

சிக்ஸர் அடிக்க திட்டமிடுவது கிடையாது என லக்னௌ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி வீரர் நிக்கோலஸ் பூரன் தெரிவித்துள்ளார்.ஐபிஎல் தொடரில் ஹைதராபாதில் நடைபெற்ற நேற்றையப் போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் லக்னௌ ச... மேலும் பார்க்க