செய்திகள் :

மும்பை - நியூயார்க்: எங்கு வாழ்வது சிறந்தது? விளக்கத்துடன்!

post image

அமெரிக்காவின் நியூயார்க் நகரில் ரூ. 75 லட்சம் (87,687 டாலர்) சம்பளத்தைவிட, மும்பையில் ரூ. 25 லட்சம் (29,229 டாலர்) வாங்குவது சிறந்தது என்கின்றனர், பொருளாதார வல்லுநர்கள்.

பொதுவாக, இந்தியாவைவிட சில வெளிநாடுகளில் ஊதியம் அதிகமாயிருப்பதால், அங்கு சென்று பணிபுரிய சிலர் விரும்புகின்றனர். வெளிநாடுகளில் ஊதியம் அதிகமிருப்பினும், அதற்கேற்றாற்போல செலவினங்களும் இருக்கும் என்பதை அறிய விரும்புவதில்லை.

இந்தியாவில், ஒரு பர்கரின் விலை ரூ. 100. ஆனால், நியூயார்க்கில் 20 டாலர்வரை செலவாகும்; 20 டாலர் என்பது, தற்போதைய இந்திய மதிப்பில் ரூ. 1,720. இது கிட்டத்தட்ட 17 மடங்கைவிட அதிகம்.

சர்வதேச நாணய நிதியத்தின் கூற்றுப்படி, வாங்கும் திறன் சமநிலையில் (Purchasing Power Parity) இந்தியா மூன்றாவது பெரிய பொருளாதாரமாக உள்ளது. இது மற்ற நாட்டு கரன்சியுடன் ஒப்பிடும்போது, இந்தியாவுக்குள் ஒரு ரூபாய் வைத்துக்கொண்டு எவ்வளவு தூரம் செல்ல முடியும் என்பதைக் காட்டுகிறது.

மும்பையில் மாதாந்திர செலவுகள், வீட்டு வாடகை அல்லாமல் ரூ. 33,042; நியூயார்க்கில் ரூ. 1,33,904. மும்பையின் நகரத்தினுள் வீட்டு வாடகை (1BHK) ரூ. 50.979; நியூயார்க்கில் ரூ. 3,44,591. மும்பையில் இணையச் செலவு (60 Mbps) ரூ. 739; நியூயார்க்கில் ரூ. 6,166. மும்பை உணவகத்தில் உணவு ரூ. 336; நியூயார்க்கில் ரூ. 2,152. மும்பையில் சராசரி ஊதியம் (வரிக்கு பின்) ரூ. 67,640; நியூயார்க்கில் ரூ. 5,66,039.

மும்பையில் 29,229 டாலருடன் (ரூ. 25 லட்சம்) வாழும் சராசரி வாழ்வை, நியூயார்க்கில் வாழவேண்டுமென்றால் 1,08,047 டாலர் (ரூ. 92.4 லட்சம்) தேவை. நியூயார்க்கில் ரூ. 75 லட்சம் ஊதியத்தைவிட மும்பையில் ரூ. 25 லட்சம் ஊதியத்துடன்கூடிய சராசரி வாழ்வே சிறந்தது என்கின்றனர், நெட்டிசன்கள்.

இதையும் படிக்க:பாம்பன் புதிய பாலம்: பிரதமர் திறந்து வைத்தார்!

மசூதியில் காவிக் கொடிகளுடன் ஏறி கோஷமிட்ட ஹிந்து அமைப்பினர்!

உத்தரப் பிரதேசத்தில் உள்ள மசூதியில் ஹிந்து அமைப்பினர் காவிக் கொடிகளுடன் ஏறியதால் பதற்றம் நிலவியது. ஹிந்துக்களின் பண்டிகையான ராம நவமி நாடு முழுவதும் நேற்று கொண்டாடப்பட்டது. இந்த நிலையில், உத்தரப் பிரதே... மேலும் பார்க்க

சுத‌ர்​ச‌ன் ப‌ட்நா​ய‌க்​கி‌ற்கு பிரி‌ட்டனி‌ல் சா‌ண்‌ட் மா‌ஸ்​ட‌ர் விருது!

​உ​ல​க‌ப் புக‌ழ்​ù‌ப‌ற்ற‌ மண‌ல் சி‌ற்​ப‌க் கலை​ஞ‌ர் சுத‌ர்​ச‌ன் ப‌ட்நா​ய‌க்​கி‌ற்கு பிரி‌ட்​ட​னி‌ல் 'ஃபிரெ‌ட்டாரி‌ங்​ட‌ன் சா‌ண்‌ட் மா‌ஸ்​ட‌ர்' விருது வழ‌ங்​க‌ப்​ப‌ட்​டு‌ள்​ளது.பிரி‌ட்​ட​னி‌ல் உ‌ள்ள டா... மேலும் பார்க்க

போா்ச்சுகல், ஸ்லோவாகியா நாடுகளுக்கு குடியரசுத் தலைவா் அரசுமுறை பயணம்!

போா்ச்சுகல், ஸ்லோவாகியா ஆகிய ஐரோப்பிய நாடுகளுக்கு 4 நாள்கள் அரசுமுறை பயணமாக குடியரசுத் தலைவா் திரெளபதி முா்மு ஞாயிற்றுக்கிழமை புறப்பட்டுச் சென்றாா். இந்தியா உள்ளிட்ட நாடுகள் மீதான அமெரிக்காவின் கடுமைய... மேலும் பார்க்க

மசூதியில் ஜெலட்டின் குச்சிகளை வெடிக்க வைத்த இருவா் மீது பயங்கரவாத வழக்கு

மகாராஷ்டிர மாநிலத்தில் மசூதியில், பாறைகளைத் தகா்க்க பயன்படுத்தும் ஜெலட்டின் குச்சிகளை வெடிக்க வைத்த வழக்கில் கைதான இருவா் மீதும் பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின்கீழ் காவல் துறையினா் வழக்குப் பதிவு செய... மேலும் பார்க்க

ராம நவமி: நாடு முழுவதும் கொண்டாட்டம்!

கடவுள் ராமா் அவதரித்த ராம நவமி தினம் (ஏப்.6) நாடு முழுவதும் ஞாயிற்றுக்கிழமை கொண்டாடப்பட்டது. உத்தர பிரதேச மாநிலம் அயோத்தியில் உள்ள ராமா் கோயிலில் குழந்தை ராமரின் நெற்றியில் சூரிய திலகம் ஒளிரும் நிகழ்வ... மேலும் பார்க்க

4 மாதங்களுக்கு பிறகு உண்ணாவிரத போராட்டத்தை கைவிட்டாா் தல்லேவால்!

பஞ்சாப் விவசாயத் தலைவா் ஜக்ஜீத் சிங் தல்லேவால் 4 மாதங்களுக்கு பிறகு உண்ணாவிரத போராட்டத்தை ஞாயிற்றுக்கிழமை கைவிட்டாா். விவசாயிகளின் விளைபொருள்களுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலைக்கு சட்டபூா்வ உத்தரவாதம் அள... மேலும் பார்க்க