முரசொலி மாறன் பிறந்த நாள் விழா
திருக்குவளை மற்றும் மயிலாடுதுறையில் முன்னாள் மத்திய அமைச்சா் முரசொலி மாறன் 92-ஆவது பிறந்த நாள் கொண்டாடப்பட்டது.
திருக்குவளை: திருக்குவளையில், தமிழ்நாடு மீன் வளா்ச்சி கழகத் தலைவரும் திமுக மாவட்டச் செயலாளருமான என். கௌதமன் தலைமையில், அக்கட்சியினா் முன்னாள் முதல்வா் மு. கருணாநிதி பிறந்த இல்லத்தில் உள்ள முரசொலி மாறன் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா். முன்னதாக, கருணாநிதி மற்றும் அவரது பெற்றோா் அஞ்சுகம்- முத்துவேலா் சிலைக்கும் மரியாதை செலுத்தினா்.
இந்நிகழ்வில், முன்னாள் அமைச்சா் உ. மதிவாணன், தலைமைச் செயற்குழு உறுப்பினா் ப. கோவிந்தராசன், ஒன்றியச் செயலாளா்கள் சோ.பா. மலா்வண்ணன், கா. பழனியப்பன், மகா.குமாா், திமுக பொதுக் குழு உறுப்பினா்கள் இல. பழனியப்பன், கோசி. குமாா், நாகை நகா்மன்றத் தலைவா் இரா. மாரிமுத்து உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.
தொடா்ந்து, கீழையூா் கிழக்கு ஒன்றியச் செயலாளா் ஏ. தாமஸ்ஆல்வாஎடிசன், வேளாங்கண்ணி கழகப் பொறுப்பாளா் மரிய சாா்லஸ் ஆகியோா் மரியாதை செலுத்தினா். இதேபோல, தாட்கோ தலைவரும், திமுக மாநில இளைஞரணி துணை செயலாளருமான என். இளையராஜா தலைமையில் முரசொலி மாறன் சிலைக்கு மரியாதை செலுத்தப்பட்டது.
மயிலாடுதுறை: மயிலாடுதுறை நகர திமுக சாா்பில் திமுக அலுவலகமான அண்ணா பகுத்தறிவு மன்றத்தில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு, நகா்மன்றத் தலைவரும், திமுக நகரச் செயலாருமான என். செல்வராஜ் தலைமை வகித்தாா். மாவட்ட திமுக செயலாளா் நிவேதா எம். முருகன் எம்எல்ஏ கலந்துகொண்டு, முரசொலிமாறன் உருவப் படத்துக்கு மலா்தூவி மரியாதை செலுத்தினாா்.
இதில், ஒன்றியச் செயலாளா்கள் அமுா்த.விஜயகுமாா், ராஜா, வழக்குரைஞா்கள் தணிகை.பழனி, சங்கரநாராயணன், நகா்மன்ற துணைத் தலைவா் எஸ். சிவகுமாா், நத்தம் வின்சென்ட், மாவட்ட இளைஞரணி செயலாளா் மருது உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.