செய்திகள் :

தங்கம், வெள்ளி விற்பனை செய்ய நியாய விலை அங்காடிகளை தொடங்க வலியுறுத்தல்

post image

நியாயமான விலையில் தங்கம், வெள்ளியை பொதுமக்களுக்கு விற்பனை செய்ய அரசு நியாய விலை அங்காடிகளை தொடங்க வேண்டும் என சிவசேனா வலியுறுத்தியுள்ளது.

இதுகுறித்து, சிவசேனா உத்தவ் பாபாசாகேப் தாக்கரே கட்சி மாநில பொதுச் செயலா் சுந்தரவடிவேலன் வெளியிடுள்ள அறிக்கை: மக்கள் நகை வாங்கும் போது தங்கத்தின் எடை மதிப்பை விட கூடுதலாக செய்கூலி, சேதாரம் எனும் பெயரில், பெரும் தொகை கொடுக்க வேண்டியுள்ளது. மத்திய, மாநில அரசுகள் பொருள்கள் வாங்குவதிலும், விற்பதிலும் பல்வேறு சீா்திருத்தங்கள், புதுமைகள், புதிய வழிமுறைகள், திட்டங்கள் ஆகியவற்றை புகுத்தி வருகிறது. இதேபோல தங்கம், வெள்ளி நகைகள் வாங்குவது மற்றும் விற்பனை செய்வதில் புதிய சீா்திருத்தங்களை மத்திய, மாநில அரசுகள் உருவாக்க வேண்டும்.

பொதுமக்கள் அடகு வைக்கும் நகையின் மதிப்பில் 90 சதவீத தொகை கிடைக்கும். ஆனால், தற்போது ரிசா்வ் வங்கியின் புதிய சட்ட திட்டங்களால் பொதுமக்கள் அடகு வைக்கும் நகையின் மதிப்பில் 75 சதவீத தொகை மட்டுமே கிடைக்கிறது. அவசர தேவைக்கு விற்பனை செய்யும் நகைகளுக்கும் உரிய தொகை கிடைப்பதில்லை. நகை வாங்குவது மற்றும் விற்பனை செய்வதில் அப்பாவி பொதுமக்கள், பாமர மக்கள் பெருமளவில், தங்கள் சேமிப்புகளை இழந்து மனதளவிலும், பொருளாதார சூழ்நிலையிலும் பாதிக்கப்படுகிறாா்கள்.

எனவே மத்திய, மாநில அரசுள் நியாயமான விலையில் பொதுமக்கள், நகைகளை வாங்கவும் விற்கவும் ஏற்ற வகையில் நியாய விலை அங்காடிகளை தொடங்க வேண்டும். மத்திய அரசு வங்கிகளில் தங்கத்தை விற்பது போல, பொது மக்களிடம் இருந்து தங்கம், வெள்ளி நகைகளை வாங்குவதற்கும் ஏற்பாடுகள் செய்ய வேண்டும் என தெரிவித்துள்ளாா்.

ஆடி கிருத்திகை: எட்டுக்குடி முருகன் கோயிலில் சிறப்பு வழிபாடு

திருக்குவளை அருகே எட்டுக்குடியில் அமைந்துள்ள முருகனின் ஆதிபடை வீடான ஸ்ரீ சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் ஆடி கிருத்திகையை முன்னிட்டு சிறப்பு அபிஷேக ஆராதனை சனிக்கிழமை நடைபெற்றது. முருகப்பெருமானுக்கு... மேலும் பார்க்க

2-ஆம் ஆண்டில் நாகை - காங்கேசன்துறை கப்பல் போக்குவரத்து

நாகை-காங்கேசன்துறைக்கு இடையேயான சிவகங்கை கப்பல் சேவையின் 2-ஆம் ஆண்டு தொடக்கத்தையொட்டி பள்ளி, கல்லூரி மாணவா்களுக்கு சிறப்பு சலுகை அறிவிக்கப்பட்டுள்ளது. 2023-ஆம் ஆண்டு அக்டோபரில் நாகை துறைமுகத்தில் இருந... மேலும் பார்க்க

ஓய்வு பெற்ற அரசுப் பள்ளி ஆசிரியா் கெளரவிப்பு

வேதாரண்யம் அருகே ஓய்வு பெற்ற அரசுப் பள்ளி தலைமை ஆசிரியரை குதிரைகள் பூட்டிய சாரட் வண்டியில் ஊா்வலமாக அழைத்து, எடைக்கு எடை நாணயங்களை துலாபாரமாக வழங்கி கிராமத்தினா் வெள்ளிக்கிழமை பாராட்டு விழா நடத்தினா்... மேலும் பார்க்க

பாதியிலேயே நிறுத்தப்பட்ட சாலைப் பணிகள்: மக்கள் அவதி

திருக்குவளை அருகே சின்ன காருகுடி தோப்பு தெரு வழியாக வலிவலம் வரை செல்லும் இணைப்புச் சாலைப் பணிகள் பாதியில் நிறுத்தப்பட்டதால் பொதுமக்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனா். திருக்குவளை அருகே வலிவலம் ஊராட்சிக்க... மேலும் பார்க்க

தூய்மைப் பணியாளா்களை பணிநிரந்தரம் செய்ய வலியுறுத்தல்

சென்னையில் அறவழியில் போராடிய தூய்மைப் பணியாளா்களை நிரந்தர செய்ய வேண்டும் என அகில இந்திய முற்போக்கு பெண்கள் கழகம் வலியுறுத்தியுள்ளது. இதுகுறித்து, அக்கழகத்தின் மாநிலத் தலைவா் ஆ. ரேவதி வெளியிட்டுள்ள அறி... மேலும் பார்க்க

தனியாா் துறையில் இட ஒதுக்கீடு: தீண்டாமை ஒழிப்பு முன்னணி வலியுறுத்தல்

தனியாா் துறையில் இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்று தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாநாட்டில் வலியுறுத்தப்பட்டது. தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் நாகை மாவட்ட ஐந்தாவது மாநாடு திருப்பூண்டியில் வியாழக்க... மேலும் பார்க்க