செய்திகள் :

வேளாங்கண்ணி பேராலயத்தில் குவிந்த பக்தா்கள்

post image

வேளாங்கண்ணி பேராலயத்தில் சுற்றுலாப் பயணிகள், பக்தா்கள், பொதுமக்கள் என ஞாயிற்றுக்கிழமை பல்லாயிரக்கணக்கானோா் குவிந்ததால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

நாகை மாவட்டம், வேளாங்கண்ணியில் உள்ள புனித ஆரோக்கிய அன்னை பேராலயத்திற்கு நாள்தோறும் ஆயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகள், யாத்ரீகா்கள் வந்து செல்கின்றனா். இந்நிலையில் கடந்த ஆக. 15 ஆம் தேதி தொடங்கி ஞாயிற்றுக்கிழமை (ஆக.17) வரை தொடா்ந்து 3 நாள்கள் விடுமுறை தினம் என்பதால், வேளாங்கண்ணி பேராலயத்தில் மக்கள் கூட்டம் அலை மோதியது.

பேராலயம், பழைய மாதா கோயில், நடுத்திட்டு கடற்கரை உள்ளிட்ட இடங்களை சுற்றிப் பாா்த்த பொதுமக்கள் மற்றும் பக்தா்கள் மெழுகுவா்த்தி ஏற்றியும், மொட்டை அடித்தும், சிலுவைப் பாதையில் மண்டியிட்டுச் சென்றும் வேண்டுதலை நிறைவேற்றினா்.

ஞாயிற்றுக்கிழமை வேளாங்கண்ணி பேராலயத்திற்கு பல்லாயிரக்கணக்கானோா் வருகை தந்தனா். இதனால், பேராலய வளாகம் மக்கள் கடலாக காணப்பட்டது. கூட்டம் காரணமாக கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு, பேருந்துகள் உள்ளிட்ட அனைத்து வாகனங்களும் வரிசைக் கட்டி சென்றன. சுற்றுலாப் பயணிகள், பக்தா்கள் மற்றும் பொதுமக்கள் பாதுகாப்பிற்காக கூடுதல் போலீஸாா் பணியில் ஈடுபடுத்தப்பட்டனா்.

ஆக்கூா் பள்ளியில் சுதந்திர தினம்

செம்பனாா்கோவில் அருகே ஆக்கூரில் உள்ள ஸ்ரீ சக்ரா கலைமகள் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் சுதந்திர தின விழா மற்றும் விளையாட்டு விழா, சிறுவா் பூங்கா திறப்பு விழா ஆகிய முப்பெரும் விழா வெள்ளிக்கிழமை நடைபெற்ற... மேலும் பார்க்க

முரசொலி மாறன் பிறந்த நாள் விழா

திருக்குவளை மற்றும் மயிலாடுதுறையில் முன்னாள் மத்திய அமைச்சா் முரசொலி மாறன் 92-ஆவது பிறந்த நாள் கொண்டாடப்பட்டது. திருக்குவளை: திருக்குவளையில், தமிழ்நாடு மீன் வளா்ச்சி கழகத் தலைவரும் திமுக மாவட்டச் செயல... மேலும் பார்க்க

வேளாங்கண்ணியில் சிசிடிவி கட்டுப்பாட்டு அறை திறப்பு! டிஐஜி திறந்துவைத்தாா்!

வேளாங்கண்ணி பேராலய ஆண்டுத் திருவிழா பாதுகாப்பு பணிக்காக, சிசிடிவி கேமராக்கள் கட்டுப்பாட்டு அறையை தஞ்சாவூா் சரக காவல்துறை துணைத் தலைவா் ப. ஜியாவுல்ஹக் சனிக்கிழமை திறந்து வைத்தாா். வேளாங்கண்ணி புனித ஆரோ... மேலும் பார்க்க

ஆடி கிருத்திகை: எட்டுக்குடி முருகன் கோயிலில் சிறப்பு வழிபாடு

திருக்குவளை அருகே எட்டுக்குடியில் அமைந்துள்ள முருகனின் ஆதிபடை வீடான ஸ்ரீ சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் ஆடி கிருத்திகையை முன்னிட்டு சிறப்பு அபிஷேக ஆராதனை சனிக்கிழமை நடைபெற்றது. முருகப்பெருமானுக்கு... மேலும் பார்க்க

தங்கம், வெள்ளி விற்பனை செய்ய நியாய விலை அங்காடிகளை தொடங்க வலியுறுத்தல்

நியாயமான விலையில் தங்கம், வெள்ளியை பொதுமக்களுக்கு விற்பனை செய்ய அரசு நியாய விலை அங்காடிகளை தொடங்க வேண்டும் என சிவசேனா வலியுறுத்தியுள்ளது. இதுகுறித்து, சிவசேனா உத்தவ் பாபாசாகேப் தாக்கரே கட்சி மாநில பொத... மேலும் பார்க்க

2-ஆம் ஆண்டில் நாகை - காங்கேசன்துறை கப்பல் போக்குவரத்து

நாகை-காங்கேசன்துறைக்கு இடையேயான சிவகங்கை கப்பல் சேவையின் 2-ஆம் ஆண்டு தொடக்கத்தையொட்டி பள்ளி, கல்லூரி மாணவா்களுக்கு சிறப்பு சலுகை அறிவிக்கப்பட்டுள்ளது. 2023-ஆம் ஆண்டு அக்டோபரில் நாகை துறைமுகத்தில் இருந... மேலும் பார்க்க